Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


21. மீன் காலப் பலன்கள்


கோள்கள் பலன்கள் தருவதில் பல நிலைகளையும் அலசி ஆராய்ந்துப் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். கோட்சாரம் இரண்டும் அதாவது பிறப்பு கோட்சாரம், தற்கால கோட்சாரம், திசாபுத்தி அந்தரம் மற்றும் உள் பிரிவுகள் கணக்கினில் கொண்டு தான் பலன் சொல்ல வேண்டும்.

திருமணப் பொருத்தம் பார்க்கின்ற போதும் ஆண், பெண் இருவரது சாதகங்களையும் பார்த்து பின்னர் பொருத்தம் உள்ளதா என அலசி ஆராய்ந்து தான் திருமணம் முடிக்க வேண்டும். வெறும் பத்து பொருத்தங்கள் கூடவே கூடாது. அது சரியாகப் பொருந்தாது. எனவே இருவரது சாதகங்கள் வைத்துத்தான் பொருத்தம் பார்க்க வேண்டும்.

இங்கு இலக்னப் பொருத்தம், இராசிப் பொருத்தம், 2. 4, 5, 7, 9 முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலக்னத்தில் சூரியன், சனி, இராகு, கேது, முதலிய பாவக்கிரகம் இருப்பின் பிதுர், மூதாதையர், பெரியோர், பெற்றோர், அரவு தோடம் முதலானவை உள்ளதை அறியலாம். அதுவும் சுபர் சேர்க்கை, பார்வை இருப்பின் சுபம். இவை போல் அனைத்துக் கட்டங்களினையும் அலசி ஆராய்ந்துப் பலன், பரிகாரம் கூறுதல் வேண்டும். இவ்விதம் பல பழைய சோதிட நுால்கள் பல எப்போதும் குற்றமறக் கற்றும், அனுபவப்படியும் யோசித்துப் பலன் கூறுதல் வேண்டும். பல காற் நுாற்பயிற்சி, அனுபவப்பயிற்சி மிக மிக அவசியம்.

மீன் கால் பலன்

மீன் கால் பலன் என்பது நட்சத்திரங்களின் பாத பலன் என்பதைக் குறிக்கும். மீன் எனும் தமிழ்ச்சொல் நட்சத்திரம், கோள், இராசி, நீர்வாழ் உயிரி எனப் பல பொருள் கொள்ளும் ஒரு சொல் என அகராதி குறிப்பிடுகின்றது.

குழந்தைகட்கு ஏற்படும் கிரக தோடங்களின் பலன்கள்

குழந்தைகட்கு ஏற்படும் கிரக தோடங்களின் நட்சத்திரப்பாதங்களின் வழி பலன்கள் குறிப்பிடப் பெற்றுள்ளது. எனவே இந்நுாலின் பெயர் சிறப்பாய் பொருந்தும். இந்நுால் புலிப்பாணி சித்தர் அருளியது.

புலிப்பாணி ஜோதிடம் 300, எனும் நுாலில் புலிப்பாணி சித்தர் அருளிச் செய்த பால கிரக தோஷ நட்சத்திர பாத பலன் என்னும் மீன் கால் பலன் பற்றிக் காண்போம்.

அசுவினியின் முதல் கால் 9 தோடமும் குணமாகும். கசம் பின்கால் தோன்றும். இரண்டாம் கால் மரணம். மூன்றாம் கால் 15 நாட் சென்ற பின்னர் சுகம் அடையும். நாலாம் கால் இரணம் செய்யும்.


“கோனென்ற அசுபதியின் முதற்காலப்பா
குணமாகு மொன்பது தோஷஞ்சொல்லு
மானென்ற பின்கசமே உண்டாம்பாரு
மற்றவிரண்டாங்காலே மரணமாகும்
தானென்ற மூன்றாங்கால் பதினைந்தாகும்
தயவான நாட்கழிந்தே சுகமேயெய்தும்
வானென்ற நாலாங்கால் விரணஞ்செய்யும்
வளமான புலிப்பாணி பாடினேனே” (1)

“பாடினே னின்னமொன்று சொல்லக்கேளு
பண்புடனே பரணிநாள் முதற்கால் மூன்று
தேடினே னிரண்டாங்கால் நாளேயேழாம்
தெரிந்தபின்பு சுகமேவும் பயமேயில்லை
கூடினேன் மூன்றுடனே நாலாம்பாதம்
சாடினேன் கோள்கள் நிலை யதுவும் பார்த்துக்
கொடுத்திடுமே சுகமேதும் பதினைந்தன்மேல்
சகவிதி பாலருக்குச் சாற்றுவாயே” (2)

“என்னவே கார்த்திகையின் முதற்காலானால்
எளிதில்லா ஒன்பதாம் நாள்தோஷந் தீரும்
பன்னவே யிரண்டாங்கால் பதமேயாகும்
பதமான மூன்றாங்கால் பதினைந்தாகும்
அன்னவே நாலாங்கால் நாற்பத்தெட்டு
அன்புடனே சென்றபின்பு சுகமேயாகும்
இன்னமே ரோகிணியில் பிறந்தால் பாலன்
இனிவில்லா மாமனுக்கு மரணமாமே” (3)

“ஆமேதான் ரோகிணியின் முதற்கால்பத்து
அன்பான ரெண்டாங்கால் பதினெட்டாகும்
போமேதான் மூன்றாங்கால் எண்ணான்காம்
புனிதமுள்ள நாலாங்கால் எண்பத்திரண்டு
தாமேதா னின்னாள்கள் கழிந்த பின்பு
தரணிதனில் சுகமாகுந் தோஷமில்லை
வாமேவான் போகருட கடாட்சத்தாலே
வளமான புலிப்பாணி பாடினேனே” (4)

“முத்தான மான்றலை முதற்காலப்பா
முப்பதுநா ளானபின் தீருந்தோஷம்
சித்தான விரண்டாங்கா லிருபத்தெட்டு
திறமான மூன்றுக்குப் பதினைந்தாகும்
பத்தான நாலாங்கால் முப்பத்தைந்து
பண்பான நாள்கள் வரை பீடையென்று
பெத்தான நவக்கிரக மீன்கால் தோஷம்
பேதமில்லை யென்னுாலைப் பிரித்துப் பாரே” (5)

“ஆமேதா னின்னமொன்று சொல்லக்கேளு
அடைவான ஆதிரைநாள் முதற்காலொன்பான்
தாமேதா னிரண்டாங்கால் மரணமாகும்
தயவாக மூன்றாங்கால் நாள்தான்பத்து
வாமேதான் நாலாங்கா லிருபத்தைந்து
வளமான புனர்பூச முதற்காலேழு
போமேதா னிரண்டாங்கால் நாள்தான் பத்து
பொங்குமுடன் மூன்றாங்கால் பதினெட்டாமே” (6)


“ஆமப்பா நாலாங்கால் மரணஞ் செய்யும்
அடைவான பூசமப்பா முதற்காலேழு
சோமப்பா யிரண்டாங்கால் பனிரெண்டின் மேல்
சுகங்கொடுக்கு மூன்றாங்கால் மரணமாகும்
சாமப்பா நாலாங்கா லிருபத்தேழில்
கனிவான வாயிலியம் முதற்காலொன்பான்
தாமப்பா லிரண்டாங்கா லிருபதோடு
தன்தமயன் மரணமாவன் தரணி மீதே” (7)

“மீதான மூன்றாங்கால் மூன்றே மாதம்
முன்னுரைத்த தோஷமொடு தகப்பன் பீடை
தானான நாலாங்கால் முப்பத்தொன்பான்
தயவான மகமுதற்கால் மரணஞ்செய்யும்
வானான ரெண்டாங்கா றகைக்கு தோஷம்
வகையான மாமன்லபி முடியும் பாரு
தேவான மூன்றாங்கா லொன்பதுடன் பெற்ற
தேன்மொழியாள் மாதாவும் மரணமாமே” (8)

“நானேதா னின்னமொன்று நாலாம்பாதம்
நயமாகும் நாலைந்து நாட்குப் பின்னே
வீணேதான் பூரமுதன் காலுதித்தோன்
வீரமில்லை சாவாகும் கிரகதோஷம்
கூனேநான் பூரமதி லிரண்டாம்பாதம்
குணமில்லை யிருப்பதுட னைந்துநாளும்
தேனான மூன்றினிலே தெரிய வந்தோன்
தோஷமுண்டு யிருப்பாரோ டாறுநாளே” (9)

“ஆறான நாலாங்கா லிருபத்தொன்பான்
அடைவான உத்திரந்தான் முதற்காலுக்கு
வீறான தந்தையார் மரணமாகும்
விதமான ரெண்டாங்கால் முப்பதாகும்
நீரான மூன்றாங்கா லன்பத்திரண்டாம்
திறமான நாலாங்கால் மரணமாகும்
கூரான அஸ்தமுதற் கால்தானெட்டு
குணமாகு மிரண்டாங்கால் பதினைந்தாமே” (10)

“எட்டான மூன்றாங்கா லிருபத்தெட்டு
எளிதான நாலாங்கா லெண்பத்திரண்டு
நெட்டான சித்திரை முன் பாட்டன் சாவாம்
நேரான ரெண்டாங்கால் பதினைந்தாகும்
கிட்டான மூன்றுக்கு மரணம் நாலாம்
கெதியான நாற்பத்துநாள் பீடைசுவாதி
குட்டான முன்னீராறு பின் மரணமாகும்
குணமான மூன்றாங்கா லெண்பத்தெட்டே” (11)

“எட்டான நாலாங்கால் பன்னிரண்டுநாளாம்
எளிதான விசாகமுதற் காலொன்பான்
கட்டான விரண்டாங்கால் நாள் தான்மூன்றே
தயவான மூன்றாங்கால் நாற்பதாகும்
பட்டான நாலாங்கால் பாட்டனுடன் தாயும்
பாங்கான சாவுடனே அனுஷமுதற் தகப்பன் சாவாம்
சிட்டான விரண்டாங்கா லிருபதப்பா
செயலான மூன்றுக்கே மாமன்சாவாம்” (12)

“என்னவே நாலாங்கால் பாட்டனுடன் தாயும்
எழிலாகத் துஞ்சுவார்கள் கேட்டை முதற் சாவாம்
நன்னவே யிரண்டாங்கா லிருபதப்பா
நாயகனே மூன்றாங்கால் முப்பத்தொன்பது
துன்னவே தாய்மரணம் நாலாம்பாதம்
துஞ்சிடுவன் மூலமுதற் றகப்பன் சாவாம்
அன்னவே ரெண்டாங்காலெண்பது நாள்பீடை
அவன்மாதா மாமனுமே மூன்றாங்கால் சாவே” (13)

“சித்தான நாலாங்கால் பாட்டனுடன் தாயும்சாவாம்
செயலான பூராடம் முன்காலொன்பான்
பத்தான விரண்டாங்கால் பாலகனே மரணம்
பண்பான மூன்றாங்கால் தகப்பனுடன் சாவாம்
வித்தான நாலாங்கால் மரணம்மாமன்
விதமான உத்திராடம் முதற்காலேழும்
நித்தான ரெண்டாங்கா லிருபது நாள் பீடை
நேரான மூன்றுக்கேபிதா மரணமாமே” (14)

“பேச்சப்பா நாலாங்காலிருபது நாள்பீடை
பேதமில்லை ஓணமுதற் பதினொன்றப்பா
ஆச்சப்பா ரெண்டாங்கால் பத்துநாளாகும்
அடைவான மூன்றுக்கே எட்டுநாள் தோஷம்
வீச்சப்பா நாலாங்கால் மரணஞ்செய்தும்
விதமான அவிட்ட முதல் ஒன்பதாம்நாளாம்
நீச்சப்பா ரெண்டாங்கால் பதினைந்தாகும்
நிசமான மூன்றுக்கு முப்பத்திரண்டே” (15)

“வண்டான நாலாங்கால் பிதாமரணமாகும்
வளமான சதயமுதல் மாமன் சாவாம்
இரண்டான கால்களுக்கே பத்துநாள்பீடை
இதமான மூன்றாங்கால் நாள்தான் பத்து
திண்டான நாலாங்கால் நாள் தானைந்து
திறமான பூரட்டாதி முதற்கால் மாமன்
விண்டான ரெண்டாங்கால் பதினாறாகும்
விதமான மூன்றாங்கா லெண்பத்தொன்றே” (16)

“ஒன்றான நாலுக்கே பீடையது நாற்பத்தொன்றாம்
உத்தமனே உத்திரட்டாதி முதற்கேளு
நன்றான ரெண்டுக்கே பதினெட்டு நாளாம்
நலமான மூன்றுக்கே யேழாம்பாரு
குன்றான நாலாங்காலிருபத் தெட்டும்
குணமான ரேவதியு முதற்கால் சாவு
அன்றான ரெண்டாங்கால் பதினொன்றப்பா
அப்பனே இவை கழிந்தால் பீடைபோமே” (17)

“போமப்பா ரேவதியின் மூன்றாம்பாதம்
பொங்கிவந்த தகப்பனுமே மரணமாவான்
வாமப்பா பீடைபதி னெட்டுநாளாம்
வளமான ரேவதியின் நாலாம்பாதம்
போமப்பா குழவியது மரணமாகும்
கொடுமைசெய்யும் நாள்களிது கழிந்து போனால்
தாமப்பா சுகமேவும் கோள் நிலையும் பாரு
தயவான புலிப்பாணி பாடினேனே” (18)

(புலிப்பாணி ஜோதிடம் 300, பாடல்கள். 1 – 18, பக்கங்கள். 182 – 187)


கிழமை பிறந்த நாள் - (ஞாயிறு) பாணியும், (திங்) சித்திரையும், (செவ்) உத்திராடமும், (புத) அவிட்டமும், (வியா) கேட்டையும், (வௌ்) பூராடமும், (சநி) ரேவதியும் வருவன என்று மேலும் இந்நுால் தெரிவிக்கின்றது.

புலிப்பாணி சித்தர் தம் நுாலில்;

“பாடினே னின்னமொன்று சொல்லக்கேளு
பரமனுட பதியேகுநாளே தென்றால்
வாடினேன் அருக்கநாள் பரணியாகா
வளமான திங்கள் சித்திரையுமாகா
சாடினேன்செவ்வாய்க் குத்திராடஞ்
சாந்தமுடன் புதனுக்கு அவிட்டமாகா
கூடினேன் குருநாள் தான் கேட்டையாகா
கொற்றவனே புகர்க்குப் பூராடம் தீதே!”

“தீதான சனிநாள் ரேவதியுமாகா
தீங்குவரு மின்னாளில் ஜெனனமானால்
சூதான யெமனுக்கே அருதியாவார்
சொல்லிவிட்டேன் நுணுக்கமுட னேசல்துாது
வயதான சோதிடரே யென்னுால் பாருவளமையுடன்
கோள்நிலையுஞ் குணமும்பாரு
மாதான போகருட கடாட்சத்தாலே
மனமுவந்து புலிப்பாணி பாடினேனே”

என்று கிழமை பிறந்த நாளிளைப் பற்றி பாடல் இயம்புகின்றது. (வளர்மதி, புலிப்பாணி ஜோதிடம் 300, பாடல் எண். 19 - 20, பக்கம்.187 - 188)

கிழமை பிறந்த நாள்

விதானமாலை எனும் நுால் ஞாயிற்றுக்கிழமை - பரணி, திங்கட்கிழமை - சித்திரை, செவ்வாய்க்கிழமை - உத்திராடம், புதன் - அவிட்டம், வியாழக்கிழமை - உத்திரம், வெள்ளிக்கிழமை - பூராடம், சனிக்கிழமை - ரேவதி ஆகிய இவை கிழமை பிறந்த நாட்கள். இவை ஒரு காரியத்திற்கும் ஆகாது.

“வந்திக்கும் கதிர்க்கும் கங்குல் மதிக்குச்சித் திரைசேய்க் காடி
புந்திக்கும் அவிட்டம் பொன்னுக் குத்திரம் புகர்பூ ராடம்
கெந்திக்கும் சனிக்குத் தோணி கிழமைகள் பிறந்த நாளாம்
சிந்திக்கும் கருமம் எல்லாம் தீமையாய் விளையும் மாதே” (விதானமாலை, பாடல்.41, பக்கம்.17)

மேலும் மாதாந்தம் மூன்று நாளும், பங்குனி மாதம் பிறந்த தினம் ஐந்து நாளும், கிராணம் தீண்டும் நாளும், அதற்கு முன் மூன்று நாளும், பின் மூன்று நாளும் ஆக ஏழு நாளும் நாள் அந்தம் இரண்டு நாழிகையும் சுபகர்மங்கட்கு விலக்கப்பட்டன ஆகும் என்றும் இந்நுால் தெரிவிக்கின்றது.

“மாதாந்தம் மூன்று நாளும் வருடாந்தம் ஒருபத் தஞ்சு
தீதாந்த கிராணம் தீண்டும் தினமுன்பின் சேர்ந்த ஏழும்
காதார்ந்த கண்ணாய்! நாளின் கடையிரு கடிகை தானும்
வேதாந்தம் உணர்ந்தோர் தீதென் றுரைத்தனர் மிகவும் மென்மேல்” (விதானமாலை, பாடல்.42, பக்கம்.17)

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/serial/p21.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License