இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
கட்டுரை

நாட்காட்டி

மு. சு. முத்துக்கமலம்


உலகில் சமூக, சமய, வணிக, நிர்வாகப் பயன்பாடுகளில் நாட்காட்டியின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. தமிழில் நாட்களைக் காட்டுகின்ற என்கிற பொருளில் நாள் + காட்டி = நாட்காட்டி என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் நாட்காட்டியைக் காலண்டர் (Calendar) என்றழைக்கின்றனர். இலத்தீன் மொழிச் சொல்லான “கலண்டே” எனும் சொல்லிலிருந்து “காலண்டர்” எனும் ஆங்கிலச் சொல் உருவாகி இருக்கிறது. இலத்தீன் மொழியில் “கலண்டே” என்றால் “கணக்கினைக் கூட்டுவது” என்று பொருள். கலண்டே (kalendae) என்பது இலத்தீனில் ஒவ்வொரு மாதங்களிலும் வருகின்ற முதல் நாளின் பெயராகும்.

பண்டைக் காலத்தில் இருந்தே பல நாடுகளிலும் தமக்கெனத் தனி நாட்காட்டிகளை உருவாக்கிப் பயன்படுத்தி இருக்கின்றனர். தொடக்கக் காலத்தில் புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாக வைத்தே நாட்காட்டிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நைல் நதியில் ஆண்டு தோறும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடிப்படையாகக் கொண்டு பண்டைய எகிப்தியர்கள் நாட்காட்டியை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியாவில் பருவ நிலை மாற்றங்களை வைத்தும் சூரியன் மற்றும் சந்திரனின் மாற்றங்களை வைத்தும் காலத்தைக் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக் கணிப்புகளினால் உருவாக்கப்பட்ட நாட்காட்டிகள் அனைத்திலும் நாள், வாரம், மாதம், ஆண்டு போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.


சூரிய நாட்காட்டி

சூரியனை வலம் வரும் புவியின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த நாட்காட்டி சூரிய நாட்காட்டி (Solar Calendar) எனப்படுகிறது. இந்தச் சூரிய நாட்காட்டி, சூரிய வலப்பாதையில் புவியின் நிகழிடம் சம இரவு நாள் கொண்டு கணிக்கப்பட்டால், அந்த நாட்காட்டியால் காலங்களைத் துல்லியமாகக் காட்ட இயலும். அத்தகைய நாட்காட்டி காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி எனப்படுகிறது. இந்த நாட்காட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் 365 நாட்களும், நெட்டாண்டில் (Leap Year) கூடுதலாக ஒரு நாள் சேர்த்து 366 நாட்களாகவும் இருக்கின்றன. கிரிகோரியன் நாட்காட்டி, சூலியன் நாட்காட்டி, தாய் சூரிய நாட்காட்டி போன்றவை காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகளாகக் குறிப்பிடலாம்.

சந்திர நாட்காட்டி

சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த நாட்காட்டி சந்திர நாட்காட்டி (Lunar Calendar) எனப்படுகிறது. இந்த நாட்காட்டி 12 சந்திர மாதங்களைக் கொண்டது. இத்தகைய சந்திர நாட்காட்டிகள் காலங்களுடன் ஒத்துக் கொள்ளாமையாக இருப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் (நெட்டாண்டுகளில் 12 நாட்கள்) தள்ளிப் போவதுமாக இருக்கிறது. சூரிய நாட்காட்டியுடன் ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர நாட்காட்டி ஒருங்கிணைகிறது. சந்திர ஆண்டில் ஆண்டுக்கு 354.37 நாட்கள் இருக்கின்றன. சந்திர நாட்காட்டிகளுக்கு உதாரணமாக இசுலாமிய நாட்காட்டியைக் குறிப்பிடலாம்.


சூரிய சந்திர நாட்காட்டி

சூரிய சந்திர நாட்காட்டிகள் சந்திர நாட்காட்டி போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தைக் கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. சீன, எபிரேய, இந்து நாட்காட்டிகளைச் சூரிய சந்திர நாட்காட்டிகளாகக் குறிப்பிடலாம். சப்பானிய நாட்காட்டி 1873 ஆம் ஆண்டு வரை சூரிய சந்திர நாட்காட்டியாக இருந்தது. சீன, எபிரேய நாட்காட்டிகள் காலநிலை ஆண்டு|காலநிலை ஆண்டுடன் ஒருங்கிணைவதால் காலங்களை அவை பின் தொடர்கின்றன. புத்த, இந்து சமய நாட்காட்டிகள் விண்மீன் ஆண்டு|விண்மீன் ஆண்டுடன் ஒருங்கிணைவதால் அவை முழுநிலவின் போதுள்ள விண்மீன் மண்டலங்களைப் பின்பற்றுகின்றன. திபெத்திய நாட்காட்டி, சீன மற்றும் இந்திய நாட்காட்டிகளின் தாக்கத்தை உள்வாங்கியுள்ளது. செருமனியில் கிருத்துவ மதமாற்றத்திற்கு முன்னர் சூரிய சந்திர நாட்காட்டியையேப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

வீனசு நாட்காட்டி

வீனசு கிரகத்தின் இயக்கத்தினைக் கணக்கிட்டு உருவாக்கப் பெற்ற சில நாட்காட்டிகளும் முன்பு வழக்கத்தில் இருந்திருக்கின்றன. வீனசு நாட்காட்டிகளில் உதாரணமாகப் பண்டைய எகிப்து நாட்காட்டியைக் குறிப்பிடலாம். இந்த நாட்காட்டிகள் பெரும்பான்மையாகப் பூமத்திய ரேகை அருகே அமைந்துள்ள நாகரீகங்களைப் பின்பற்றியே இருந்திருக்கின்றன.

கிரிகோரியன் நாட்காட்டி

உலகின் பல்வேறு நாடுகளில் சமயம், பண்பாடு போன்ற வழக்கத்தில் பல்வேறு நாட்காட்டிகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமயம், பண்பாடு மட்டுமின்றி வணிக நோக்கத்திலும், பிற பயன்பாடுகளிலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டியாகக் கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian Calendar) இருந்து வருகிறது. இந்த நாட்காட்டி மேற்கத்திய நாட்காட்டி எனவும், கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப் பெறுகிறது. இந்த நாட்காட்டியைப் பன்னாட்டுத் தபால் ஒன்றியம் (International Postal Union) மற்றும் ஐக்கிய நாடுகள் (United Nations) அவை போன்ற அமைப்புகள் அங்கீகரித்திருக்கின்றன.

உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான கிரிகோரியன் நாட்காட்டியானது கி. மு. 45 ஆம் ஆண்டில் உரோமப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்ட சூலியன் நாட்காட்டியின் (Julian Calendar) திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியசு லிலியசு (Aloysius Lilius) என்ற மருத்துவரால் திருத்தப்பட்ட நாட்காட்டி வடிவம் முன் வைக்கப்பட்டது. உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரிகோரி 1582 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று இந்தப் புதிய நாட்காட்டியை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான ஆணையைப் பிறப்பித்தார். உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நாட்காட்டி பின்னர் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உலகம் முழுவதும் பரவலான பயன்பாட்டைப் பெற்றது. பின்னாளில் இந்நாட்காட்டிக்குத் திருத்தந்தையின் பெயரைக் கொண்டு "கிரிகோரியன் நாட்காட்டி" என்னும் பெயரே வழங்கலாயிற்று.

இந்த நாட்காட்டியில் இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் எண்களிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கி.பி. 6 வது நூற்றாண்டில் டயனீசியசு எக்சீகுவசு (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் தொடங்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.

ரோமானிய நாட்காட்டியில் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாக இருந்தது. கிரிகோரியன் நாட்காட்டியில் இரண்டு மாதங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன. இதனால், கிரிகோரியன் நாட்காட்டியானது, சூலியன் நாட்காட்டியின் சராசரி ஆண்டை விட நீளமாகக் காணப்பட்டது. இதன் பிறகு இளவேனிற் சம இரவுப் பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்பாகக் கொண்டு வரப்பட்டது. மேலும், கிறித்தவ சமயத்தின் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாக அமைந்தது.


இசுபெயின், போர்த்துக்கல், போலிசு லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவை மட்டுமே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. இந்நாடுகள் 1582 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாடுகள் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி வழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீசு ஆகும். 1923 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாளில்தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

உலகில் சமயம், பண்பாடு போன்ற பயன்பாடுகளுக்குப் பல்வேறு நாட்காட்டிகள் இன்றும் பயன்பாட்டில் தொடர்ந்து இருந்து வருகின்றன. சமயம், பண்பாடு தவிர்த்து வணிகம் மற்றும் பொதுவான பயன்பாடுகளுக்குக் கிரிகோரியன் நாட்காட்டியே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிரிகோரியன் நாட்காட்டியில் சாதாரண ஆண்டுகளில் 365 நாட்களும், நெட்டாண்டில் 366 நாட்களும் இருக்கின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/essay/p2.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License