இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பார்வை மிருகம்

ஆர். மாணிக்கவாசகம்


எல்லாத் தெய்வங்கட்கும் குலம் கோத்திரம் உண்டு. இன்ன குலத்திலே இன்னாருக்கு இன்ன தினத்திலே மகனாகப் பிறந்தார் என்ற வரலாறு உண்டு. ஆனால் சிவபெருமானுக்கு இந்த வரலாறு கிடையாது. காரணம் என்னவென்றால் அவர் பிறப்பற்றவர். பிறப்பு இல்லாதபடியால் சிவமாகிய செம்பொருளுக்குக் குலம், தாய், தந்தை, ஊர், உறவு, ஒன்றுமில்லை.

‘எல்லார் பிறப்பும் இறப்புமியற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேம்நம் சோணேசர் - இல்லில்
பிறந்த கதை யுங்கேளேம் பேருலகில் வாழ்ந்துண்
டிறந்தகதை யுங்கேட்டி லேம்”
(அருணகிரி அந்தாதி)

அவரைப் பிறவா யாக்கைப் பெரியோன் என்று இளங்கோவடிகள் பேசுகின்றார். பிறப்பின்மையால் வேதங்கள் அவரை “அஜம் “ என்று போற்றுகின்றன. இப்பெருமான் அவரவர் பக்குவத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களில் வந்து ஆண்டு கொள்கிறான்.

ஒரு மலம் உடைய ஆன்மாக்களாகிய விஞ்ஞானகலருக்குச் சிவபெருமான் உள்நின்று உணர்த்துகின்றார். இதனைத் தன்மை என்று கூறுவர்.

இரண்டு மலம் உடைய ஆன்மாக்களான பிரளயாகலருக்கு நீலகண்டம், திரிநேத்திரம், மான்மழு, முதலியன தரித்தவராய் உருவத்திருமேனி தாங்கி வந்து ஆண்டு கொள்வார். இதற்கு முன்னிலை என்று பெயர்.

மூன்று மலங்களை உடைய சகலராகிய நமக்கு இறைவன் ஆசாரியனாக வந்து ஆண்டு கொள்கிறார். இதற்குப் படர்க்கை என்று பெயர்.



சிவன் ஒரு வேடன்

இங்கே ஒரு சித்தாந்த நயம் உண்டு. சிவபெருமானை ஒரு வேடனாகவே உருவகம் செய்யலாம். மலைகளிலும், காடுகளிலும் வாழ்வது வேடர்களின் இயல்பு. சிவபெருமான் இமயமலை, பருப்பதம், கொல்லிமலை, குற்றாலம், சதுரகிரி, திரிசிராமலை, திருஎறும்பியூர், திருவாட்போக்கி, திருஈங்கோய்மலை, திருச்செங்கோடு, சென்னிமலை, சிவன்மலை, வெள்ளியங்கிரி, திரிகோணமலை இப்படிப் பல்வேறு மலைகளில் வாசம் பண்ணுகின்றார். இதனால் அவருக்கு மலையாளி என்றும் பெயர். காட்டிலேயும் வசிக்கிறார்.

வேடர்கள் முருகனை வணங்குவர். சிவபெருமானும் முருகக் கடவுளை வணங்கியுள்ளார்.

வேடர்களின் தொழில் சங்காரம். கொலையே புரிவேடர் என்பது கந்தரநுபூதி. சிவபெருமான் சங்கார கர்த்தா. பிரமன் படைத்தலையும், விஷ்ணு காத்தலையும், உருத்திரன் அழித்தலையும் செய்கின்றனர். சிவபெருமான் இம்மூவருக்கும் தலைவராகி மகாசங்காரத்தைப் பண்ணுகின்றார். சங்கரன் என்ற திருநாமம் சிவபிரானுக்குரியது.

‘நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்”
(திருவருட்பயன்)

மேலும், வேடர்களுக்குப் புலித்தோல் முதலிய ஆடைகள் முக்கியம். சிவ பிரானுக்குப் புலித்தோல் ஆடை விசேடம்.

‘பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக் கசைத்து ... ...’
(தேவாரம்)



பார்வை மிருகம்

வேடர்கள் மிருகங்களைப் பிடிப்பதற்கு ஏதுவாகப் பார்வை மிருகங்களை வைத்திருப்பர். மானைக் காட்டி மான் பிடிப்பது எளிமையான வழி. கானகத்தில் வரும் மான்களைப் பிடிக்க இவர்கள் ஒரு மானைப் பழக்கி வைத்திருப்பர். அந்த மானுக்குப் பார்வை மிருகம் என்று பெயர். வேடர்கள் வாழும் பகுதியில் பன்றி, புலி, கரடி, கடமை, மான் முதலிய பார்வை மிருகங்கள் இருந்தன என்று பெரியபுராணம் பேசுகிறது.

‘குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ்செவி ஞமலி யாத்த
வன்றிரன் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்”
(பெரியபுராணம், கண்ணப்ப நாயனார் புராணம்)

வேடர்கள் மானைக் காட்டி மான் பிடிப்பது போலச் சிவபெருமான் மானுடர்களாகிய நம்மைப் பிடிப்பதற்கு மானுடச் சட்டை தாங்கி வருகின்றான்.

மூன்று மலம் உடைய நம்மை ஆட்கொள்ளச் சிவபெருமான் வைத்திருக்கின்ற பார்வை மிருகம் ‘குருமூர்த்தம்’ ஆகும். பார்வைக்கு மானுடராகத் தெரியும். ஆனால், அந்தக் குருவின் உள்ளே இருந்து உபதேசம் பண்ணுகின்றவர் சிவபெருமானே ஆவார்.

‘ஈறில்லாத நீ எளியை ஆகிவந்
தொளிசெய் மானுடம் ஆக நோக்கியும்”
(திருவாசகம்)

சகல வர்க்கத்தினராகிய நமக்குக் குரு மூர்த்தமன்றி வேறுவழி இல்லை. குருவை வழிபாடு செய்வதும், சிவத்தை வழிபாடு செய்வதும் ஒன்றே. இதையே திருமந்திரம் ‘குருவே சிவம்’ என்று கூறிற்று. சிவபெருமான் சிவலிங்கம் முதலான மூர்த்தங்களில் வந்து தங்கினாலும், அங்கே தமது அருளல் தொழிலை வெளிப்படையாகச் செய்வதில்லை. ஆனால் குரு என்று சொல்லப்படும் ஆச்சாரியனிடத்தே சிவபெருமான் தங்குவதோடன்றித் தமது அருளல் தொழிலைப் பிரத்திய‘யமாகச் செய்கின்றார். இக்கருத்தையே சிவஞான போதம் ‘தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த’ என்று கூறிற்று. இங்கே அருளல் என்பது சிவ தீட்சை ஆகும். சிவபெருமானுடைய ஐந்து தொழில்களில் மிக முக்கியமானது அருளல் தொழிலாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் ஆகிய நான்கு தொழில்களும் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டாகவே நிகழ்த்தப்படுகின்றன. ஆகவே அருளல் தொழில் விசேடமானது.



அந்த அருளல் தொழில் குரு மூர்த்தியின் வாயிலாக நிகழ்த்தப் பெறுகின்றது. இதனால் குருவழிபாடு எவ்வளவு உயர்ந்தது என்பது புலனாகின்றது.

‘ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே”
(சிவஞான போதம், 8-ம் சூத்திரம்)

முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்தவராகிய உமாபதி சிவாச்சாரியார், மேற்கண்ட உண்மைகளைத் தொகுத்து ஒரு குறள் வெண்பாவில் விளக்குகின்றார். குருவின் வடிவைப் பார்வை மிருகத்தோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார்.

‘பார்வையென மாக்களை முன் பற்றிப் பிடித்தற்குப்
போர்வையெனக் காணார் புவி”
(திருவருட்பயன்)

சிவபெருமான் இங்ஙனம் பார்வை மிருகம் வைத்திருத்தலால் சிவபெருமான் ஒரு வேடன் என்று சித்தாந்த அடிப்படையில் உருவகம் செய்யப்படுகிறது.

மேலும், வேடமாவது சிவஞானமாகும். ஞானமே வடிவான சிவபெருமான் வேடனாக விளங்குகின்றார். இது காறும் கூறப்பெற்ற கருத்துக்கள் மூலம் சிவபெருமான் பிறப்பற்றவர் என்பதும், அவரே பிறப்பை அறுக்க வல்லவர் என்பதும், குருவே சிவம் என்பதும் விளக்கப் பெற்றன. சிவபெருமான் ஒரு வேடன் என்பது சித்தாந்த உருவகமாகும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p106.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License