இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழ்ச்செல்வி படைப்புகளில் பெண்ணியமும், இனக்குழு சமுதாயமும்

வ. வசந்தா
தமிழ் உதவிப்பேராசிரியர், அ. அ. கலைக்கல்லூரி, வடசென்னிமலை, ஆத்தூர்.


முன்னுரை

மனித வாழ்வின் அனுபவங்களை அடுத்த சந்ததிக்கு கொண்டுச் செல்லும் ஊடகமாக நாவல் இலக்கியம் திகழ்கிறது. தமிழ் நாவல் உலகில் சு. தமிழ்ச்செல்வி தனக்கென ஒரு வழித்தளத்தைத் தேர்வு செய்து அதன்வழிச் செல்பவராக விளங்குகிறார். இவரின் படைப்புகளில் பெண்ணியமும், இனக்குழு சமுதாயமும் இணைந்து இருப்பதே இவரின் படைப்புகளுக்குச் சான்றாகின்றன. அவ்வகையில் பெண்ணியப் போக்குகளும், பெண்ணிய சிக்கல்களும் பெண்ணியக் கூறுகள் என பல கோணங்களில் பார்க்க முடிகிறது. இனவரைவியல் நோக்கில் அணுகும் போது இவரின் நாவலில் இனக்குழுக்களாக மக்கள் சமுதாயம் சார்ந்து வாழ்ந்து வருவதை பதிவு செய்துள்ளார். மேலும், இவர் முற்போக்கு சிந்தனை உடையவராகவும், சிறந்த படைப்பாளராகவும் விளங்கி வருகிறார்.

நாவலில் பெண்ணியப் பார்வை

தமிழ்ச்செல்வியின் படைப்புகளில் காணலாகும் “பெண்ணியப் படைப்புகள்” என்ற நோக்கில் பார்க்கும் பொழுது, இவர் நாவலில் வரும் அனைத்துப் பெண்களும் `குடும்பம்’ என்ற கட்டமைப்பில் இருக்கும் நிலையைப் பார்க்க முடிகிறது. பெண்கள் தன்னையும், தன் குடும்பத்தையும் பராமரிக்கின்ற சூழலையும், கணவனைப் பிரிந்து வாழ்கின்ற துயர நிலையும், படிப்பறிவில்லாத பெண்களாகவும், அறியாமையின் சிக்கலில் பரிதவிக்கும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவை இவரின் படைப்புகளில் பார்க்க முடிகிறது. பெண்கள் வீட்டிற்குள்ளும், சமூகத்திலும் அவளுக்கு விதிக்கப்படும், கட்டுப்பாடும் அவளின் இறுக்கமான வாழ்க்கைக்கு வழி செய்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக சமூகம் விளங்குகிறது.

அளம், ஆறுகாட்டுத்துறை, கண்ணகி, கற்றாழை, கீதாரி, மாணிக்கம் போன்ற பல படைப்புகளில் நாடோடி வாழ்க்கையும், ஆண் பொருளீட்டல், பெண் இல்லறம் காத்தல், கணவனின் வருகைக்காக வீட்டில் காத்திருத்தல் போன்ற பல சிக்கல்களை மையமிட்டு நாவல்கள் இயங்குகின்றன. மேலும், குடும்ப உறவுகளைப் பேணும் பொழுது போதிய புரிதல் இல்லாமல் இருப்பது உறவுகளுக்கு இடையே சிக்கல் தோன்றக் காரணமாக அமைகிறது என்பதைக் காண முடிகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பது பொருளாதாரம். இத்தகையப் பொருளைத் தேடும் வகையில், கதையில் வரும் ஆண் பாத்திரப் படைப்பு பொருள் தேடச் செல்வதும், கணவன் இடத்தில் மனைவி இருந்து குடும்பத்தை வழி நடத்துவதும், பலநாள் பசிப்பட்டினியால் வாடிக் கிடக்கும் வறுமை நிலையும் நாவலில் இழையோடுவதைக் காண முடிகிறது.

இனவரைவியலும், இலக்கியமும்

தொல்காப்பியம், திருக்குறள் போன்ற இலக்கியங்களில் `இனம்’ என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது. தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் மூன்று அதிகாரங்களில் இனம், இனப்பொருள், இனமணி, இனமொழி, இனஒற்று, மேலும் நெருக்கமான உறவு போன்ற பலப் பொருளைக் குறித்து வருகிறது. சங்க இலக்கியத்தில் `இனம்’ என்ற சொல்லிற்கு விலங்கு, பறவையைக் குறிக்கிறது. ஆனால் காலப்போக்கில் மாந்தர் குழுவையும் குறித்தது.

`இனக்களமர் இசை மருக’ (பொருநராற்றுப்படை 194 வது வரி)

`இனநாரை’ என்றச் சொல் நெடுநல்வாடையில் காணப்படுகிறது. இச்சொல் சான்றோர் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

மேலும் முல்லைப்பாட்டில் இளவண்டு என்றச் சொல் சான்றோரைக் குறிப்பிடுகிறது. `இனநாரை’ என்ற சொல் நெடுநல்வாடையில் காணப்படுகிறது. இச்சொல்லும் சான்றோரைக் குறிப்பதாகவே கையாளப்பட்டுள்ளது.

இனவரைவியலும், இலக்கியமும் என்பதில் உள்ள இனவரைவியல் இனக்கூட்டத்தினைக் குறிப்பதாகும். இனவரைவியல் அறிவுச்சார்ந்தும். இலக்கியம் என்பது வாழ்வியல் சார்ந்தும் இயங்கக் கூடியவையாகும். இவற்றை உற்று நோக்கும் போது, தொல்காப்பியத்தில் நமக்கு விடை கிடைக்கிறது. தொல்காப்பிய அகத்திணையியலில்,

``முதல் எனப்படுவது நிலம் பொழுது இண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே’’


நூற்பா இனவரைவியலுக்கும் இலக்கியத்திற்கும் சான்றாக அமைகின்றது.

இனவரைவியலும், நாவலும்

மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து சற்று மாறுபட்டு இனக்குழுவாக வாழத் தொடங்கிய காலம் தான் இனவரைவியலுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். தமிழ்ச்செல்வியின் நாவல்களில் இனவரைவியல் கோட்பாடு விரவி இருக்கின்றன. இவற்றில்;

கீதாரி - முல்லைத்திணைக்கோட்பாடும்

ஆறுகாட்டுத்துறை - நெய்தல் திணைக்கோட்பாடும்

அளம், கற்றாழை - பாலைத் திணைக்கோட்பாடும்

மாணிக்கம், கண்ணகி, கற்றாழை, கீதாரி, அளம் - பெண்ணியம் முன்நிறுத்தி எழுதப்பட்ட கதையாகும்.

அளம் நாவலில் பொருள் தேடச் சென்ற கணவன் திரும்பவில்லை. அதனால் சுந்தராம்பாள் என்ற பெண் குடும்பச் சிக்கல்களை எதிர் நோக்குகிறார். அவளின் வாழ்க்கை, நாளும் போராட்ட வாழ்வாக அமைகிறது. `சாண் ஏறினால் முழம் சறுக்கும்’ என்ற அளவில் இவளின் வாழ்க்கைச் சூழல் அமைகிறது.

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

`கீதாரி’ நாவலில் கெடை வைத்து ஆடு மேய்க்கும் குடும்பத்தின் வாழ்வியலைக் கூறுகிறது. முல்லைக்கோட்பாட்டுடன் இயைந்து வரைவியலுக்குட்பட்ட கதையாக விளங்குகிறது. இதில் வரும் `கரிச்சா’ என்ற பெண்ணின் வாழ்க்கை துயரமும் வறுமையும் நிறைந்த வாழ்க்கையாக அமைவதைக் காணலாம்.

பிரிதலும், பிரிதல் துன்பமும்

`அளம்’ என்ற நாவல் பாலைத்திணையின் அடிப்படையிலும், பாலைத்திணை மக்களின் வாழ்வியல் சூழலை மையமாக வைத்தும், பாலை என்பது வறுமையின் பிறப்பிடமாக இருக்கிறது என்பதைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. ஆனால் அளம் நாவலில் பிரிவின் துயரத்தைக் காட்டுகிறது. கம்பராமாயணத்தில் சீதையைப் பிரிந்த இராமன் நிலையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியைப் பிரிந்த கோவலன் நிலையும் வறுமையுடையதாகவே பார்க்க முடிகிறது.

இரங்கலும், இரங்கல் நிமித்தமும்

`ஆறுகாட்டுத்துறை’ என்ற நாவல் நெய்தல் நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. கடலும் கடல் சார் பகுதியும் மையமிட்டு இந்நாவலில் நகர்கிறது. சமுத்திரவல்லி என்ற பெண்ணின் இல்வாழ்க்கை அறநெறியைக் கொண்டது. ஆறுகாட்டுத்துறை நாவல், இரங்கல், இரங்கல் நிமித்தத்தில் சமுத்திரவல்லியின் துயரம் இரங்கலாகவே இருக்கிறது. இரங்கலைப் பத்து வகை என நம்பியகப்பொருள் கூறுகிறது.

``நனவினான் நல்காதவரைக் கனவினான்
காண்டலின் உண்டென் உயிர்’’


என்கிறது திருக்குறள்.

சமுத்திரவல்லிக்கு இரண்டு கணவன் இருக்கும் நிலையில், மூவரும் ஒன்றாக ஒரு ஊரில் வாழ முடியாத அவலத்தில் இருக்கின்ற போது, ஒருவர் மற்றொருவருக்கு விட்டுக் கொடுக்கும் வாழ்வியலை, தியாக உணர்வைக் காட்டும் சமூகமாக நாவலைக் கட்டமைத்திருப்பது படைப்பாளரின் உயரிய சிந்தனையைக் காட்டுகிறது. சமுத்திரவல்லியின் வாழ்க்கை இரங்கலுக்குரிய நிலையில் உருவாக்கப்பட்டிருப்பது, படைப்பாளரின் உன்னத போக்கும் உயரியத் தன்மையையும் காட்டுகிறது. மேலும் கதைக்களம் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. இங்கு வாழும் மக்களில் உயர்வு தாழ்வு இல்லை. எல்லோருக்கும் ஒரே தொழில் என்ற நோக்கில் நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்ணியமும், இனவரைவியலும் என்ற தலைப்பிற்கு இணங்க படைப்பாளரின் படைப்புகள் வழி இக்கட்டுரை ஆராய்ந்து பெண்களுக்கு ஏற்படும் துன்பங்கள், மக்களின் வாழ்வியல் சமூகம் உருவாக்கம் இடப்பெயர்வு, புலம் பெயர்தல், பொருளீட்டல் பல்வேறு காரணங்களால் பெண்களின் வாழ்க்கையில் இடம்பெற்று அவர்கள் மிகுந்த சமுதாயச் சிரமங்களுக்கு ஆளாகுவதை சு. தமிழ்ச்செல்வி நாவல்கள் வழியே ஆராய்ந்து முடிவுகள் கொடுக்கப்படுகின்றன..

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p112.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License