இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

சகிப்புத் தன்மை

முகில் தினகரன்


அந்தப் பேருந்து மெல்ல நகர ஆரம்பித்ததும் எங்கிருந்தோ ஓடி வந்து அவசரமாய்த் தாவி ஏறி கூட்டத்தினுள் முண்டியடித்து நுழைய முற்பட்ட அந்த இளைஞன் தெரியாத்தனமாய் ஒரு நடுத்தர வயதுக்காரரின் காலை தன் பூட்சுக் காலால் மிதித்து விட்டு நடுநடுங்கிப் போனான். தொடர்ந்து அவரிடமிருந்து வந்து விழப் போகும் வசை மழைகளைத் தாங்கிக் கொள்ள அவன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்க அந்த நடுத்தர வயதுக்காரரோ சிறிதும் கோபமின்றி 'பார்த்து தம்பி” என்று அமைதியாயச் சொல்லிவிட்டு சிநேகமாய்ப் புன்னகைத்தார். வியப்பு மேலோங்க விக்கித்துப் போய் சிலையாய் நின்றான் அந்த இளைஞன். 'இந்தக் காலத்திலும் இப்படியொரு மனிதரா?”

மேலே விவரிக்கப்பட்ட காட்சியில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய பாத்திரம் 'அந்த நடுத்தர வயதுக்காரர்” என்றால் அதைவிடக் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சம் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயம்.

ஆம்!! சகிப்புத் தன்மை.

மனிதனுடைய சமுதாயப் பண்பாடுகளில் மிகவும் முக்கியமானவொன்று சகிப்புத் தன்மை. இது ஆண்டவன் தந்த பரிசு எனலாம். ஏனெனில் இது எல்லா மனிதர்களிடத்திலும் சமமான அளவில் இருப்பதில்லை. சிலர் மிகவும் சகிப்புத் தன்மை உடையவர்களாக இருப்பர். சிலரோ சிறிதும் சகிப்புத் தன்மை அற்றவர்களாக இருப்பர். பொதுவாகவே சகிப்புத் தன்மைக் குணம் அதிகமாய் உள்ளவர்கள் வாழ்க்கையை எல்லாச் சூழ்நிலைகளிலும் எளிதாகக் கடந்து விடுகின்றனர். மாறாக சகிப்புத் தன்மைக் குணம் குறைவாய் உள்ளவர்களோ அரைவேக்காட்டுத் தனமான அதிரடி முடிவுகளால் அல்லலுற்று… அவதிப்பட்டு அழிந்து விடுகின்றனர்.



சகிப்புத் தன்மை என்பது வலிமை

நடப்புச் சமூகத்தில் நல்லவர்களாகவும் பெருந்தன்மைப் பண்பாளர்களாகவும் இருப்பவர்கள் பலமுனைகளிலிருந்து வருகின்ற பல்வகையான சொல்லடி மற்றும் இடர்பாடுகளைத் தாங்க வேண்டியிருக்கும். அவ்வாறான பல்முனைத் தாக்குதல் நிகழும் போது அவர்கள் தங்கள் சகிப்புத் தன்மைக் குணத்தைக் கேடயமாக்கி அமைதி காப்பர். அந்த அமைதிதான் அவர்களின் ஆற்றலுக்கு அறிகுறி… வலிமைக்கு உதாரணம். அவர்களுடைய அந்த ஆற்றலானது நாட்பட... நாட்பட ஆன்மபலமாக மாறி அவர்களின் வாழ்க்கையை மேலும் மேலும் வளம் பெறச் செய்து விடுகின்றது. சகிப்புத் தன்மையில் பக்குவமடைந்தோர் என்றுமே பிறருடன் பிணக்குகள் கொள்வதில்லை. மாறாகப் பிறர் கூறும் கடுஞ்சொற்களைக் கூட இன்சொல் கொண்டு இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வர்.

ஒரு நிறுவனத்தில் மேலாளர் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு இந்தச் சகிப்புத் தன்மைக் குணமானது தலையாய பலமாகும். அவர் தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சிறு சிறு தவறுகளுக்காக அவர்களைத் தண்டிப்பது பணி நீக்கம் செய்வது போன்றவற்றில் ஈடுபடாமல் தன் சகிப்புத் தன்மைக் குணத்தின் மூலம் அவர்களின் முதல் தவறைச் சகித்து… இரண்டாம் தவறைத் திருத்தி… மூன்றாம் தவறை முறைப்படுத்தினாரென்றால் அங்கு நான்காம் தவறின் நிகழ்வே நின்று போய்விடும். அத்தோடல்லாது தொடர்ந்து தவறே செய்த அந்தப் பணியாளர் குறிப்பிட்ட அந்தப் பணியில் நிபுணத்துவம் பெற்று விளங்கவும் சந்தர்ப்பம் ஏதுவாகின்றது. இது போன்ற சூழ்நிலையில் அந்த மேலாளருக்கு அவரின் சகிப்புத் தன்மைக் குணமே ஒரு பலமாகி… அவருக்கும் பணியாளர்களுக்குமிடையே ஒரு பாலமாகவம் அமைகின்றது.



சகிப்புத் தன்மை என்பது குடும்ப நெறி

சகிப்புத் தன்மை மறந்த குடும்பங்களில் கணவன் மனைவி உடன்பிறப்புக்கள் என்னும் உறவு முறைகள் யாவும் உடைந்து போய்விடுகின்றன. ஒற்றுமை நிலை கெட்டுக் குடும்பமே கலைந்து போகும் நிலை ஏற்பட்டுவிடும். சகிப்புத் தன்மைக் குணம் நிறைந்த குடும்பங்களில் ஒவ்வொருவரின் உறவு முறைகளும் உறவின் தன்மைகளும் தெளிவாகத் தெரிவதால் ஒற்றுமையுணர்வு ஓங்கும்.

சமீப காலங்களில் குடும்ப நீதி மன்றங்களில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கான ஆதாரக் காரணம் சகிப்புத் தன்மையைத் தொலைத்து விட்ட தன்மையே. ஒரு சிறிய நெல்லிக் கனியை எடுத்து கண்ணருகே வைத்துப் பார்க்க அது பூசணிக்காய் அளவில் பெரிய தோற்றத்தையே தரும். அதே போல்தான் வாழ்க்கை ஓட்டத்தில் மனித உறவுகளுக்குள் ஏற்படும் சிறிய சிறிய பிரச்சினைகளும். அவற்றை நாம் வெகு அருகில் நின்று கூர்ந்து நோக்கினால் அவை பூதாகரமாய்த்தான் தோன்றும். வித்தியாசம் நம் பார்வையிலேதானன்றி பிரச்சினையில் அல்ல.



சகிப்புத் தன்மை என்பது ஏற்றத்தின் அறிகுறி

இன்றைய இளைஞர்கள் சகிப்புத் தன்மைக் குணத்தை இளமையிலிருந்தே பழகி வருதல் வேண்டும். அவ்வாறு பழகி வருவார்களேயாயின் அவர்களின் எதிர்கால வாழ்வு நிச்சயம் ஏற்றமிக்கதாகத்தான் அமையும். இளைஞர்கள் முதலில் தங்களின் சகிப்புத் தன்மையை தங்களிடத்திலேயே காட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மற்றவர்களிடத்திலும் காட்டுதல் வேண்டும். யாராவது…ஏதாவது குறை கூறும் போது அதைப் பெரிய விஷயமாகக் கொண்டு அதற்காக நொந்து போய் வருந்துவது… தங்களைத் தாங்களே மனத்தால்… உடலால் வருத்திக் கொள்வது போன்றவை சகிப்புத் தன்மையற்ற தவறான அணுகு முறைகள். அது மட்டுமல்ல மனிதப் பண்பையே மறந்த மாபெரும் குற்ற முறைகள்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்டிப்புக்கள் தங்களின் எதிர்கால வளத்தினை முன்னிறுத்தியே நிகழ்த்தப் படுகின்றன என்பதனை உணர்ந்து அவற்றைச் சகித்துத் தங்களைச் செதுக்கிக் கொள்ளும் பட்சத்தில் மாணவர்கள்… மாமனிதர்களாக முடியும்.



சகிப்புத் தன்மை என்பது சமூகநெறி

'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்று கிறித்துவ வேதம் உரைப்பது போல சகிப்புத் தன்மையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் சமூகத் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருக நல்வாய்ப்பு அமைகின்றது. தொட்டில் தொடங்கி காடு வரை நம்மைப் பீடித்திருக்கும் பெரு நோய்களான சாதி மற்றும் மதம் போன்றவைகளுக்கு சரியான மாற்று மருந்து சகிப்புத் தன்மைக் குணமே. மற்றவர்களின் இடையூறுகளை நாம் சகித்துக் கொள்ளப் பழகிடும் போது அதுவே அவர்களை வெல்லும் வழியாக மாறுகின்றது. அது மட்டுமன்றி நம்முடைய அந்தக் குணமே அவர்களுக்குத் தங்கள் தவறினை உணர்த்தி மாற்றத்தையும் ஏற்படுத்தி விடுகின்றது.

சகிப்புத் தன்மை என்பது அஹிம்சை நெறி

சகிப்புத் தன்மைக் குணத்திற்கான சத்திய உதாரணமாய்த் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் தன்னுடைய பக்குவப்பட்ட சகிப்புத் தன்மையால் ஆங்கில சாம்ராஜ்யத்தையே அசைத்தவர் என்பது நானிலமறிந்த உண்மை. வன்முறைகளாலும் போராட்டங்களாலும் சாதிக்க இயலாத பல அரும் பெரும் சாதனைகளை சகிப்புத் தன்மையென்னும் அஹிம்சை ஆயுதத்தால் சாதிக்கலாம் என்பதை அகிலத்திற்கு உணர்த்தியவர் அண்ணல் காந்தியடிகள்.

இருட்டு வெளிதனிலே இழுத்துச் செல்லும்
குருட்டு வாழ்விற்கோர் குந்தகம் நேராது
மருட்டும் பாதையிலே மலிந்துள இடர்தனையே
விரட்டும் வழிகாட்ட வீரியகுண மொன்றுண்டு…

அதுதான்… சகிப்புத் தன்மை

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p37.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License