இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களில் இலக்கிய வளமை

சி. மகேஸ்வரி


முன்னுரை

பண்டைத் தமிழரின் அகப்புற வாழ்வை நமக்கு எடுத்துரைப்பன சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியப் புலவர்கள் இயற்கைச் சூழலுடன் வாழ்க்கையை இணைத்துப் பாடுவதில் மிகுந்த உளநாட்டம் உடையவர்களாக இருந்திருக்கின்றனர். மனித மனத்தின் வெளிப்பாடாகவும் உணா்ச்சியின் வெளிப்பாடாகவும் உள்ள சங்க இலக்கியத்தைப் பாடிய புலவர்கள் போற்றுதலுக்குரியவர்களாவர். அந்த வகையில் குறிப்பிடத்தக்கவர் ஒக்கூர் மாசாத்தியா் ஆவர். இவர் இயற்றிய பாடல்களில் இலக்கிய வளமை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

ஒக்கூர் மாசாத்தியார்

சங்க அக இலக்கியக் கவிஞா்களுள் குறிப்பிடத்தக்கப் பெண் கவிஞர் ஒக்கூர் மாசாத்தியார் ஆவார். இவர் பாண்டிய நாட்டில் திருக்கோஷ்டியூர்ப் பக்கத்தில் உள்ள ஒக்கூர் என்ற ஊரில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இவரின் இயற்பெயர் சாத்தியார். ஒக்கூர் என்பது இவர் பிறந்த ஊராகக் கருதப்படுகிறது. இவர் பாடிய பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பாகிய எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகையில் ஐந்தும் (126, 139, 186, 220, 275), புறநானூற்றில் ஒன்றும் (279), அகநானூற்றில் இரண்டும் (324, 384) ஆகும். ஆக மொத்தம் இவர் எட்டுப் பாடல்களைப் பாடியுள்ளார்.

ஒக்கூர் மாசாத்தியார் முல்லைத் திணையைப் பாடுவதில் வல்லவர் என்பது அவர் பாடிய பாடல்களிலிருந்து புலப்படுகின்றது. குறுந்தொகையில் 139-வது பாடலை மருதத்திணையிலும் மற்ற நான்கு பாடல்களை முல்லைத் திணையிலும் பாடியுள்ளார். புறநானூற்றில் ஒரு பாடலை மூதின் முல்லைத் துறையிலும் அகநானூற்றில் இரண்டு பாடல்களை முல்லைத் திணையிலும் பாடியுள்ளார். ஆக இவரை “முல்லைப் புலவர்“ என்று கூறுவோமானால் அது மிகையாகாது.



இலக்கிய வளமை

புலவர்கள் தாங்கள் இயற்றும் செய்யுளுக்கு அழகு சேர்ப்பதற்காக உவமை, உள்ளுறை, இறைச்சி, உருவம், மொழிநடை, பாடுபொருள், காட்சி அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதே இலக்கிய வளமை ஆகும்.

உவமை

ஒரு பொருளை முன்னர் அறிந்திராத ஒருவருக்கு அதனை அறிவிக்கும் பொருட்டு அதனோடொத்த வேறொரு பொருளைச் சுட்டி இதுபோல இது என்று கூறுவதே உவமையாகும். இவ்வுவமை தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் புரிய வைக்கவும் தெரிந்ததை மேலும் விளக்கம் பெற வைக்கவும் உதவுகின்றது இதனைத் தொல்காப்பியர்,

”உவமை என்பது கவிஞனின் அனுபவப் பொருள். அவன் ஏற்கனவே கண்டு வைத்த பொருளைப் புதிதாகக் காணும் பொருளோடு பொருத்தி வைத்து பொருள் காண்பது உவமை ஆகும்” என்று கூறுகின்றார் ரா. சீனிவாசன் (ச.இ.உப. 2)

ஒரு செய்தியைச் சுவைபடச் சொல்லவும், அழகுள்ள ஒரு பொருளைப் பற்றிக் கூறவும் உவமையைக் கவிஞர்கள் பயன்படுத்துவர். பண்பினாலும், செயலினாலும், பயன் தருவதாலும் உள்ள ஒற்றுமையை நுணிகியறியும் திறனுடையவர்கள் அவர்கள். ஆதலின், உவமை பற்றி செய்திகள் இயல்பாகவே பாடல்களில் அமைகின்றன. இவற்றை ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களிலும் பார்க்க முடிகிறது.

பொருள் தேடிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் தலைவியைக் காண வரவில்லை என்பதை,

”பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே-தோழி-நறுந்தன் காரே” (குறுந். 126)

”கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறு என முகையும் நாடற்குத்” (குறுந். 186)

என்ற பாடல்களின் மூலம் முல்லைக் கொடியிடத்தே விளங்கும் அரும்புகளை தலைவியின் பற்களுக்கு உவமையாக்கி அவளை நோக்கிச் சிரிப்பதாகக் கூறியுள்ளார். மற்றொரு பாடலில்,

“வெருகு சிரித்தன்ன, பசுவீ மென்பிணிக்
குறுமுகை அவிழ்ந்த நறுமலா்ப் புறவின் (குறுந். 220)

காட்டுப் பூனை சிரித்ததுபோல் முல்லை அரும்புகள் மலர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், மழை பெய்து வளர்த்த பசிய இளம் பயிர் இளம் கிளிப் பிள்ளையின் மேல் புதிதாக முளைத்து வரும் சிறகு போலவும், காற்று வீசுதலால் கிளைகளிலுள்ள மலர்கள் சிச்சிலிப் பறவையின் சிறகுகள் போலவும் காட்சி தருவதாக,

“தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன”
... ... ... ... ...
சிறற்சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த“ (அகம். 324)

என்ற பாடல்களின் மூலம் ஒக்கூர் மசாத்தியார், தம்முடைய பாடல்களில் உவமையை அழகாகக் கையாண்டுள்ளார் என்பதை நம்மால் காண முடிகிறது.



கற்பனை

நடக்காத ஒன்றை நடப்பதுபோல் கற்பனை செய்வது கற்பனையாகும். சங்க இலக்கியப் பாடல்கள் கற்பனைத்திறன் மிக்கவையாகும். பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்துச் சென்ற தலைவன் தலைவியைக் காண இன்னும் வரவில்லை. தலைவன் எவ்விடத்தில் உள்ளாரோ என்று தலைவியைப் பார்த்துக் கேட்பது போல முல்லைக் கொடியானது அரும்புகளையே பற்களாகக் கொண்டு தலைவியைப் பார்த்து சிரிக்கும் என்பதை ஒக்கூர் மாசாத்தியார்,

” பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொடு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே-தோழி-நறுந்தண் காரே!“ (குறுந். 126)

என்ற பாடலில் தலைவியை முல்லைக் கொடியாகவும், கார்காலத்தைத் தலைவனாகவும் கொண்டு, முல்லை வளம் பெற்றுப் பூத்துப் பொலிந்திருக்க தலைவி நலிந்திருத்தலை நினைத்து ஏங்குவது ஒக்கூர் மாசாத்தியாரின் கற்பனைத் திறனை பறைசாற்றுகின்றன.

காட்சி அமைப்பு

புலவர் தம் பாடலைப் பாட சூழல் என்பது முக்கியமானதாகிறது. சங்க இலக்கியப் பாடல்களை நாம் படிக்கும்போது, அச்சூழல் நம் கண்முன்னே காட்சி அமைப்பாகின்றது. பெண்பாற் புலவர்களும் தங்கள் பாடல்களை அவ்வாறே அமைத்துள்ளனா். முல்லைத் திணையின் சூழலை “அழகியல்“ தன்மைகளோடு நம் முன் படம் படித்துக் காட்டுகின்றார் ஒக்கூர் மாசாத்தியார். முல்லை நிலமும் அதற்குரிய கருப்பொருள்களும் உரிப்பொருளுமே கவிதைச் சூழல்களாக அமைந்துள்ளன. ஆற்றியிருத்தல் என்பது முல்லை நிலத்திற்கே உரிய தனித்தன்மையாகும். அதுவே ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் முதன்மை பெறுகின்றது. பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் தலைவியிடம் குறித்த காலத்தில் வருவதாகக் கூறிச் செல்கின்றான். ஆனால், அவனால் குறித்த காலத்திற்குள் வரவியலவில்லை. அதனால் தலைவியின் உள்ளம் தவிக்கின்றது என்பதை,

“ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்த
... ... ... ... ...
துயில்துறந் தனவால்-தோழி!-எம் கண்ணே (குறுந். 186)

என்ற பாடலின் மூலம் அற்றியிருத்தலை நம் கண்முன்னே காட்சிபடுத்தியுள்ளார் புலவர்.



கருப்பொருள்

நிலத்தில் காலத்தால் தோன்றுவது கருப்பொருளாகும். கருப்பொருள் என்பது ஒவ்வொரு நிலத்திற்கும் உரித்தான தெய்வம் முதலாகத் தொழில் ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு ஆகும் என்கிறது நம்பியகப்பொருள். கருப்பொருள் பற்றிய செய்தியை ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களிலும் காணமுடிகிறது என்பதை,

“பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்“ (குறுந். 126)

“மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகினம் மாலை உற்றெனப்” (குறுந். 139)

”கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி” (குறுந். 186)

“பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
... ... ... ... ...
வண்டுசூழ் மாலையும் வாநார்” (குறுந். 220)

“முல்லை ஊர்ந்த கல் உயர்வு ஏறிக் “ (குறுந். 275)

“தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த
... ... ... ... ...
வண்டு உண் நறுவீ துமித்த நேமி“ (அகம். 324)

“முயற்பறழ் உகளும் முல்லை அம் புறவில்
கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண்“ (அகம். 384)

“யாவை எறிந்து, களத்து ஒழிந்தனனே
... ... ... ... ...
பெருநிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே (புறம். 279)

என்ற பாடல்களின் மூலம் ஒக்கூர் மாசாத்தியார் தாம் பாடிய எட்டு பாடல்களிலும் முல்லை மலா், கோழி, காட்டுப் பூனை, வண்டு, கிளி, சிச்சிலிப் பறவை, யானை, பசு போன்ற கருப்பொருள்களை பயன்படுத்தியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.

பாடுபொருள்

இலக்கியக் கூறுகளில் ஒன்றாகக் கருதப்படுவது பாடுபொருளாகும், ஒரு செய்யுள் எந்தக் கருத்தினை முன் வைத்து பாடப்படுகிறதோ அவை பாடுபொருளாகும். சங்ககாலப் பாடுபொருள் என்பது காதல், வீரம் என்பனவாகும். வீரம் என்னும் நிலையில் குறிப்பிட்ட மன்னனின் ஆட்சிப் பெருமை, வீரத்தின் பெருமை, கொடைப் பெருமை போன்றவற்றைப் பறைசாற்றுகின்றது. போர்த் தொழிலே முதன்மையாக விளங்கிய அக்காலக்கட்டத்தில் வீரத்தினை நிலை நிறுத்தும் பாடல்கள் தோன்ற அதனைப் பொருளாகக் கொண்டு பாடல்கள் பல அமைக்கப்பட்டன.

அந்தவகையில் ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களிலும் வீரத்தைப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.

ஒரு பெண்ணானவள் முதல் நாள் நடந்த போரில் தன் தந்தையை இழந்தும், நேற்று நடந்த போரில் தன் கணவனை இழந்தும், இன்று போர்ப்பறை சத்தம் கேட்டதும் தன் குடிக்கு ஒரே மகனான அச்சிறுவனுக்கு தலையில் எண்ணெய் தடவிக் குடுமியை ஒப்பனை செய்து, அறையில் இருந்த வெண்மையான ஆடையை அவனுக்கு உடுத்தி வேலொன்றை எடுத்து, அவனது கையிலே கொடுத்து மகன் முகத்தை தன் முகத்துக்கு நேரே திருப்பி, “மகனே உன் தந்தையும் தன்னையரும் போர்செய்து தமது கடனைக் கழித்து நம் மறக்குடியின் புகழை நிறுவினர். நீ இப்போது போர்க்களம் நோக்கிப் போய்வா என்று அனுப்பி வைத்த நிகழ்ச்சியை,

“கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
... ... ... ... ...
செருமுகம் நோக்கிச் செல்க என வடுமே” (புறம். 279)

என்ற பாடலின் மூலம் ஒக்கூர் மாசாத்தியார் வீரத்தைப் பாடுபொருளாக வைத்து பாடியிருப்பதை பார்க்க முடிகிறது.


மொழிநடை

மனிதன் தன் எண்ணங்களையும் கருத்துக்களையும் மொழியின் வாயிலாக வெளிப்படுத்துகின்றான். ஒவ்வொருவரும் மொழியினை கையாளும் போது அவரவர்க்கு என்று தனியான ஒரு நடை உருவாகிறது. அவையே மொழிநடையாகும்.

ஒக்கூர் மாசாத்தியாரும் தனக்கென்று ஒரு மொழிநடையை அமைத்துக் கொண்டு தன்னுடைய பாடல்களில் எளிய நடையை அமைத்தும், உரையாடல் தன்மை பெற்றும், சிறப்பான பின்புலக் காட்சி அமைப்பினைக் கொண்டும், மண்சார்ந்த உவமைகள் நிறைந்தும் இயற்றியிருப்பதை நம்மால் காணமுடிகிறது.

முடிவுரை

மேற்கண்டவற்றின் வாயிலாக, ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் பாடுபொருளாக கற்பனை நயம் மிகுந்துள்ளதையும், இயற்கைச் சூழல் நிறைந்துள்ளதையும், தலைவி காத்திருத்தலையும் காண முடிகின்றது. கிராமிய மக்களின் மண் வாசனையை பதிவு செய்துள்ளார் என்பதையும் பார்க்கமுடிகிறது. உவமை, கற்பனைநயம், காட்சி அமைப்பு, கருப்பொருள், மொழிநடை போன்றவை ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களுக்கு இலக்கிய வளமை சேர்ப்பனவாக அமைந்துள்ளது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p105.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License