இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பாண் மகளிர்

ச. பாலசுப்பிரமணியன்


இலக்கியம் என்பது சமூகத்தின் விளைச்சல் ஆகும். இலக்கியம் அந்தந்தக் காலச் சமூகத்தையும் அதன் பண்பாட்டையும் உள்ளீடாகக் கொண்டுள்ளது. சங்க இலக்கியத்தின் வழி, பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு மரபினை நுட்பமாக ஆராயும் போது, அவ்விலக்கியத்தின் சிறப்பையும் பயனையும் மேலும் சிறப்பாக உணர முடியும். அந்த வகையில் பாணர் சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். அகத்துறையானாலும் புறத்துறையானாலும் பாணரின் செயல்பாடு இன்றி எதுவும் இல்லை என்ற நிலையை அவர்கள் உருவாக்கியிருந்தனர். பாணர் சமூகத்தைச் சார்ந்த மகளிரும் இத்துறையில் சிறந்து இயங்கியுள்ளனர். பாணர்களில் ஆடவரைச் “சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைகாரர், பாணரென்ப” எனப் பிங்கல நிகண்டும், பாணர்களின் பெண்டிரைப் “பாடினி, விறலி, பாட்டி, மதங்கி, பாடல் மகடூஉ பாண்மகள்” எனத் திவாகரமும் குறிப்பிடுகின்றன. அவர்களில் குறிப்பாக;

1. பாடினி

2. விறலி

3. கட்டுவிச்சி

4. அகவன் மகளிர்

போன்றோரின் பங்கு அகத்துறையிலும் புறத்துறையிலும் குறிப்பிடத்தக்கது.

1. பாடினி

பாண் சமூகத்தில் பெண்டிர்கள் பாடினி, விறலி, பாட்டி, மதங்கி, பாடல் மகடூஉ, பாண்மகள் எனப் பலவாறு அழைக்கப்பெற்றனர். பாணர் கூட்டத்தில் பெண்கள் ‘பாடினி’ எனப்பட்டனர். பாணர்களைப் போல இவர்களும் பாடும் திறம் பெற்றிருந்தனர். மதுரைக் காஞசியில் ‘பாட்டியர்’ என்றும் பதிற்பத்தில் ‘பாடுமகள்’ என்றும் இவர்கள் கூறப்பட்டுள்ளனனர்.

“பாணர் வருக! பாட்டியர் வருக!”(மது.காஞ்சி. 749)

“ஆடுநடை அண்ணனிற் பாடுமகள் காணியர்” (பதிற்று.44)

“பாட்டியர், பாடமகள் என்போர் படினியே” என்று கைலாசபதி கூறுகிறார். பாடினியர் விறலியரைவிட இனிய குரலெடுத்துப் பாடுவதிலும் படைப்பதிலும் வல்லவர்களாக இவர்கள் இருந்துள்ளனர். புறநானூற்றில் இடம்பெற்றுள்ள ஔவையார் பாடினியே ஆவார். அவருடைய புறப்பாடலான

“சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!
... ... ... ... ...
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!”
(புறம். 235)

என்ற பாடல் அடிகள்கள் இத்தன்மையை நன்கு புலப்படுத்துகின்றன.



1.1. பாடினிதூது செல்லுதல்

பாண்குடியைச் சார்ந்தவரான ஔவையார் அதியமான் பொருட்டு தொண்டைமானிடம் தூதாகச் சென்ற செய்தி புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. தொண்டைமான் தன்படைப் பெருமையினைத் தூதுவந்த ஔவையாரிடம் காட்டினான். அப்படைக் கருவிகளைக் கண்ட ஔவையார் இவை பீலி அணியப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, அழகுபடச் செய்யப்பட்ட வலிய காம்பை உடையனவாய், நெய் பூசப்பட்டுக் காவலை உடைய கோயிலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியனின் கருவிகளோ பகைவரைக் குத்தியதால் கங்கும் நுனியும் முரிந்து கொல்லனது ‘பணிக்களரி’யில் எந்நாளும் கிடக்கின்றன. எம்தலைவனாகிய அதியமான் வறியவர்களின் சுற்றத்திற்குத் தலைவன் (இல்லோர் ஒக்கல் தலைவன்). செல்வமுள்ள போது அனைவர்க்கும் உணவு படைத்து, இல்லையாயின் உள்ளதனைப் பலரொடு கூட உண்ணும் பண்பாளன் என நயம்படப் பேசி தொண்டைமானைச் சிந்திக்கத் தூண்டி நிகழவிருந்த போரினைக் கைவிடச் செய்தார். இந்நிகழ்வினை,

“இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
... ... ... ... ...
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே.”
(புறம். 95)

என்ற புறப்பாடல் எடுத்தோதுகிறது. இவ்வாறு பாணர் சமூகத்தைச் சார்ந்த பாடினி (ஔவையார்) தூது சென்ற நிகழ்வைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

2. விறலியர்

விறலியர் ஆடுதல், பாடுதல், கிணை கொட்டுதல், தாளமிடல், வேடமிட்டு ஆடுதல், மெய்ப்பாடு தோன்ற நடித்தல், பாட்டியற்றிப் பாடுதல் போன்ற பலத்திறமைகளைக் கொண்டவர்களாகத் திழ்ந்துள்ளனர். சங்ககாலத்திலேயே விறலி என்பார்கள் பாடினி எனும் கலைஞர்களிடமிருந்து வேறுபட்டிருந்ததைக் காணமுடிகிறது. தொல்காப்பியர் கற்பியலில் பாடினி, விறலி இருவரும் தனித் தனியானவர்கள் எனக் கூறியுள்ளார். விறலியர் பாடுவதோடு ஆடுவதிலும் திறன் பெற்றிருந்தனர். சமூகப் படிநிலையில் பாடினி, விறலி இருவரும் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருந்தமை சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. விறலியர் ‘பாண்மகள்’ என்றும் அழைக்கப்பட்டனர்.

“செல்லா மோதில் பாண்மகள்” (பதிற்று. 60)

என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.



விறலியர் முழவு, யாழ், தூம்பு, எல்லரி, ஆகுளி, பதலை முதலான அனைத்து இசைக் கருவிகளையும் இசைக்க வல்ல ஆற்றல் படைத்தவர்கள் என்பதை

“வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,
... ... ... ... ...
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,
ஓரி கொலோ?அல்லன்கொல்லோ?
பாடுவல், விறலி!”
(புறம். 152)

என்ற புறப்பாடல் மூலம் அறியலாம்.

கூத்தார், பொருநர் ஆகியோரின் பெண்பால் மக்களே விறலியர் எனப்பட்டனர். தடாரிப் பறை, முழவு ஆகியவற்றின் இசைக்கேற்ப விறலியர் ஆடியதையும் கதை தழுவிய ‘நாடகம்’ ஆடுவதிலும் வல்லவர்களாக இருந்ததை

“புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்”
(பெரும்பாண்.109-110)

“நாடகமகளிர் ஆடுகளத்து எடுத்த
விசிவீங்கு இன்னியங் கடுப்பக் கயிறுபிணித்து”
(பெரும்பாண்.55-56)

எனும் பெரும்பாணாற்றுப்படை அடிகள் வழி அறிகிறோம். விறலியர் நல்ல நடன மங்கையராக விளங்கியுள்ளனர். அவர்கள் இசை, இலக்கணத்துடன் பாடும் திறனையும், அதற்கிணங்க ஆடும் திறனையும் ஒருங்கே பெற்றவர்கள் என்பதை

“ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்” (பதிற்று. 58)

“ஒருதிறம் பாடல் நல் விறலியர் ஒல்குடி நுடங்க” (பரி. 17)

எனும் பாடல் அடிகளின் மூலம் தெளியலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விறலியர் பிழையறப் பாடவும், ஆடவும் வல்லவர்களாய் இருந்த அதே நேரத்தில், யாழ் இசைப்பதிலும் திறன் படைத்தவர்களாய் இருந்தனர் என்பதை

“சுகிர் நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தல்நும் விறலியர்”
(புறம். 109)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன.

மேலும், போரில் மன்னன் வெற்றி பெற்று வீதி உலா வருகையில் அவனது தேரின் பின்பு விறலியர் குரவைக் கூத்தாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை

“வஞ்சமில் கோலானை வாழ்த்தி வயவரும்
அஞ்சொல் விறலியரு மாடுபவே வெஞ்சமரில்
குன்றேர் மழகளிறுங் கூந்தற் பிடியும்போற்
பின்றேர்க் குரவை பிணைந்து”
(புற.வெண்பா.162)

என்ற புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.



3. கட்டுவிச்சி

கட்டுப் பார்த்தல் என்பது தொடக்கக் காலத்தில் அகத்துறைக்குரியதாக இருந்தது. இக்காலத்தில் புறத்துறைக்குரியதாக மாறிவிட்டது. கட்டுப் பார்த்தல் தொழிலைக் கட்டுவிச்சி என்னும் பாணர் குலத்தைச் சார்ந்த பெண்களே அக்காலத்தில் மேற்கொண்டுள்ளனர். பண்டைக் காலத்தில், நற்றாய், தலைவியினுடைய காம நோயைத் தீர்க்கவும், தலைவியின் வேறுபாட்டை ஆராயும் பொருட்டும் கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கட்டுப் பார்க்கும் வழக்கத்தினைத் தொல்காப்பியம்,

“அவள் விலங்குறினும்; களம் பெறக் காட்டினும்;
பிறன் வரைவு ஆயினும்; அவன் வரைவு மறுப்பினும்;
முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப்
புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்”
(தொல்.களவி. 24)

என்று கூறுகிறது.

அதாவது “கட்டு விச்சியும் வேலனும் தாம் பார்த்த கட்டினாலுங் கழங்கினாலும் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்யாக்கால் இம் மையல் தீராதென்று கூறுதலின் அவ்விருவரும் தம்மின் ஒத்த திறம் பற்றியதனையே செய்யுஞ் செய்தியிடத்தும்” என நச்சினார்கினியர் உரை வகுத்துள்ளார். கட்டுவிச்சியர் நெல் பரப்பிக் குறி சொல்வார்கள். இம்முறைப்படி கட்டுவிச்சி முறத்தில் நெல்லை இட்டு அதனை எண்ணுவர். எண்ணுமுன் தெய்வங்களை அழைத்துப் பாடுவர். பின் அந்நெல்லை இரட்டை இரட்டையாக எண்ணும்போது ஒற்றைப்படையாக வந்தால் நலம் உண்டாகும் என்று அவர்கள் நம்பினர்.



4. அகவன் மகள்

கட்டுவிச்சியைப் போன்று அகவன் மகளும் குறி பார்க்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை, தெய்வங்களை அழைத்துப் பாடும் அகவன் மகளே! சங்கின் மணிகளால் ஆன மாலையைப் போன்ற வெண்மையான கூந்தலையுடைய அகவன் மகளே! பாட்டுக்களைப் பாடுவாயாக. அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் புகழ்ந்து பாடும் பாட்டை மீண்டும் பாடுவாயாக என்று குறுந்தொகை குறிப்பிடுகிறது. இதனை,

“அகவன்மகளே! அகவன்மகளே!
மனவுக் கோப்பு அன்ன நல் நெடுங் கூந்தல்
அகவன்மகளே! பாடுக பாட்டே;
இன்னும், பாடுக, பாட்டே-அவர்
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே”
(குறுந். 23)

என்ற அடிகள் மூலம் அறியலாம்.

இப்பாடல் அகவன் மகளைக் கொண்டு குறிபார்ப்பதைக் கூறுகிறது. இன்று குற்றாலம் தொடங்கித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் குறி கூறும் மலைக்குறவர், அகவன் மகளிரின் வழிவந்தவர்கள் ஆவர். அகவன் மகளிர் பாட்டுப்பாடும் முதுமகளிராக இருந்துள்ளனர்.

முடிவுரை

பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு உலகளவில் பெண்களுக்கான முக்கியத்துவம் உணரப்பட்டது. ஆனால் சங்ககாலத் தமிழகத்தில் பெண்கள் மிக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்பட்டுள்ளனர். அவர்களின் தனித்தன்மைகளும், கலைத் திறமைகளும் வெளிக்கொணரப்பட்டு சமூகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டன. சந்ததி சந்ததியாக அவர்கள் தங்களைச் சார்ந்துள்ள மக்களை மகிழ்ச்சிப்படுத்தவும், துயறுற்ற போது ஆற்றுப்படுத்தவும் தங்கள் வாழ்நாள் முழுமையையும் அர்பணித்தவர்கள். போர் காலங்களில் வீரர்கள் தங்களின் காயங்களை மறந்து போரிட அவர்களுக்குக் கலைச்சேவையைப் புரிந்த பாடினியர், வெற்றி பெற்று மன்னன் வீதி உலா செல்கையில் அவர்களின் தேரின் பின்பு கூத்தாடும் விறலியர், தலைவியின் காம நோயைப் போக்க இறைவனை அழைத்துப் பாடும் அகவன் மகள் மற்றும் கட்டுவிச்சி போன்றோர் சங்க கால மக்களின் வாழ்வியலோடு நீக்கமற நிறைந்திருந்தனர் என்றால் அது மிகையாகாது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p137.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License