இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

தூதிலக்கிய வளர்ச்சியில் வரன்முறை மாற்றங்கள்

முனைவர் ப. மீனாட்சி


சமூக நிகழ்வுகளை நிழலாய்த் தொடர்ந்து நிஜமாக்குபவை இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் தனிப்பட்ட மக்களின் வாழ்விற்கும், சமூகத்திற்கும், அரசியலுக்கும் பயனுள்ளதாக விளங்குகின்றன. மனிதனது பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வியல் கூறுகளை வகைமையுடன் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. இவற்றைப் பேரிலக்கியமெனவும், சிற்றிலக்கியமெனவும் இரண்டாகப் பகுக்கலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களுள் ஒன்றோ, இரண்டோ குறைந்து வரக்கூடிய இலக்கியத்தைச் சிற்றிலக்கியம் எனலாம். இதற்குப் “பிரபந்த இலக்கியம்” என மற்றொரு பெயரும் உண்டு. காலகட்டத்திற்கேற்ப சிற்றிலக்கியம் தன் கிளையைப் பலவாக விரித்துப் பரப்பியுள்ளது. அக்கிளைகளுள் ஒன்றே “தூது”. இத்தூது, இலக்கியமெனத் தனித்து வளர்ச்சி அடையத் துவங்கிய பிறகு கடவுளர், ஆசிரியர், வள்ளல் இவர்களுள் யாரேனும் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது. தூதிலக்கியங்கள் புலவர்களின் கற்பனைத்திறன், ஆளுமைத்திறன், கருத்துப் புலப்பாடு முதலானவற்றை வெளிக்கொணர்கின்றன. ஓர் இலக்கியம் செம்மையுற வேண்டுமானால், அதற்கான இலக்கண வரையறை அவசியமாகும். சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப வரன்முறையும் மாற்றங்களுக்கு உட்படுவது இயல்பென்பதை தூதிலக்கிய வளர்ச்சியின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.

தமிழ் இலக்கியங்களில் தூது

சிற்றிலக்கியங்கள் தொல்காப்பியத்தில் வேர் கொண்டு சங்க இலக்கியத்திலும், காப்பியங்களிலும் தம் பயணத்தைத் தொடர்ந்து இன்று தனி இலக்கியமாக ஆலமர விழுதைப் போல் வளர்ந்துள்ளது. சிற்றிலக்கியத் தோற்றம் குறித்து ஆராய்ந்த இளங்குமரன், “தொல்காப்பியமே பல சிற்றிலக்கிய வகைகளுக்குக் கால்கோள் செய்தது” என்றார். “பாட்டு, தொகை, பாவிகம் ஆகியவை பல சிற்றிலக்கியங்களை உருவாக்கின. அரசியல், கலையியல், தொழிலியல், வாழ்வியல், இறையியல் முதலியன சிற்றிலக்கிய வகைகளை உருவாக்குவதோடு உரமிட்டு வளர்த்தன” என்றும் கூறுகின்றார்” (1)

இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள் தேசப்பற்று, நாட்டு விடுதலை, தீண்டாமை, பெண்ணடிமை என்பது போன்ற சமுதாய விழிப்புணர்ச்சிக் கருத்துக்களை உட்கொண்டே இலக்கியங்களாக முகிழ்த்துள்ளன.



சங்க இலக்கியம்

சங்க இலக்கியத்தில் தூது குறித்த செய்திகள் அகம், புறம் என்று பிரித்து அறியக்கூடிய வகையில் விரித்து உரைக்கப்படுகின்றன. “முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை” என்றார் தொல்காப்பியர். ஆனால், அரசரும் பிறவும் தூதுக்குரியர் என்ற நிலை மாறி அரசியலில் பெண்பாலரும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அதியமான் நெடுமானஞ்சிக்காகத் தொண்டைமானிடம் அரசியல் தூதாகச் சென்ற ஔவையாரின் பாடல்,

“இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்டிரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன்நகரவ்வே: அவ்வே
பகைவரைக் குத்தி கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதங்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்க்ல் தலைவன்
அண்ணல் எம்கோமான் வைந்நுதி கோலே”
(2)

மேலும் தலைவன், தலைவி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் தூது போக்கும் நெறியும் சங்க .இலக்கியத்தில் காணப்படுவதை

“சூழ்கம் வம்மோ தோழிபாழ் பட்டுப்
பைதற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சு நீடிய பொருளே”
(3)

என்னும் பாடல் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

முன்னைய தூதுப் பாடலில் அறிவின் ஆழத்தையும், பின்னைய தூதுப் பாடலில் அன்பின் ஆழத்தையும் காண முடிகிறது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் கட்டுக்குள் வாழும் பெண்கள், தமது காமத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க இயலாது. அத்தகைய சூழ்நிலையில் தான் இத்தூது நிகழ்வு நடைபெறுகிறது. சங்கப் பாடல்களுள் அகத்துறைப் பாடல்களில்தாம் தூதுப் பாடல்கள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

“நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன்துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்பு அரும் பணைத்தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே”
(4)

என்னும் குறுந்தொகைப் பாடல் வரைந்து கொள்ளாமல் காலம் தாழ்த்திய தலைவனது செயலைக் கடிந்துரைப்பதாக உள்ளது. அவர் வருவார் என்று நம்பி இருக்கும் தலைவி, தன் மனப்பாட்டைத் தோழிக்கு எடுத்துரைத்து, தூது செல்லும் படி வேண்டுகிறாள். இதனைப் புலவர் பெருமக்கள் “புள்வாய்த்தூது” என்பர். இவ்வண்ணம் சங்க இலக்கியத்தில் தூது குறித்தச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.



திருக்குறள்

பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள், மனித வாழ்வியல் அறங்களைத் தொகுத்துரைக்கிறது. இதில் “தூது” என்னும் தனி அதிகாரமே உள்ளது. இதில் அரசியல் தூதுக்குரிய இலக்கணம் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் பொருட்பாலிலும், காமத்துப்பாலிலும் தூது பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

தூதுவர் பண்புநலன்

மனிதனாய் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட பண்புநலன்கள் உண்டு. இதில் தூதுவர்க்குரிய பண்பு நலன்களாகச் சிலவற்றை வள்ளுவர் வகுத்து உரைக்கிறார்.

“அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று”
(5)

கனவுத்தூது

தமிழரது பழமைப் பண்புகளில் தலையாயது விருந்தோம்பல். கனவில் விருந்தினர் வந்தாலும் உபசரித்தல் வேண்டுமென்பதை,

“காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து”
(6)

என்னும் குறள் வழி விளக்குகிறார்.

நெஞ்சுத்தூது

கடலாழத்தை அளவிட முடியும். ஆனால் ஒரு பெண்ணின் மன ஆழத்தை அளவி்ட முடியாது. அவளது உணர்வுகளும், எண்ண அலைகளும் நெஞ்சில் மட்டுமே பதிவாகியிருக்கும் என்பதால் “நெஞ்சனைத் தூதுப்” பொருளாகத் தேர்ந்தெடுக்கிறாள்.

“பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து”
(7)

“உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅ அய்வாழிய நெஞ்சு”
(8)

எனத் தலைவி, தன் நெஞ்சினைத் தலைவனிடத்துத் தூது அனுப்பிய செய்தியை விளக்குகிறார்.



பக்தி இலக்கியம்

அரசியலிலும், காதலிலும் தூது விடுத்தது போன்றே அடியார்கள் பரம்பொருளிடமும் தூது விடுத்தனர். இறைவனை நாயகனாகவும், தம்மை நாயகியாகவும் பாவித்துப் பாடியவை அகப்பொருள் மரபுகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. அகப்பொருளுக்கென்றிருந்த தூதின் நிலை, மாற்றம் பெற்றதோடு சமய இலக்கியங்களில் இறையருள் பெறுவதற்கும் இவ்விலக்கிய உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேவாரம்

சமயக்குரவர்களாகிய நால்வரது படைப்புகளிலும் தூது இடம் பெற்றுள்ளது. திருஞான சம்பந்தர் திருத்தோணிபுரத்து இறைவனுக்குத் தூது அனுப்பிய பதிகம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அளி, குருகு, வாரணம், நாரை, கபோதகம், அன்னம், அன்றில், கிளி, குயில் முதலிய பொருட்களைத் தூது அனுப்புவதை,

“சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால்
முறையாலே யுணத் தருவன் மொய்பவளத் தொடுதளரந்
துறையாரு கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் றிருநாம மெனக் கொருகாற் பேசாயே”
(9)

என்னும் பதிகப் பாடல் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

திருவாசகம்

மாணிக்கவாசகரது “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது பழம் பெருமை வாய்ந்த கூற்றாகும். இத்தன்மை வாய்ந்த திருவாசகத்தில்,

“நீலவுருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகிற் திகழும் கொடிமங்கை உள்ளுறைகோயில்
சீலம் பெரிதும் இனிய திருவுத்தர கோசமங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய்”
(10)

என்னும் பொருட்டு தூதுச் செய்தி இடம்பெற்றுள்ளது.



நாச்சியார் திருமொழி

ஆண்டாள் மேகத்திடம் விடுக்குமட விண்ணப்பங்கள் அவள் தன் காதல் உளப்பாங்கைப் பாங்குடன் எடுத்துரைக்கின்றன.

“வான் கொண்டு கிளர்ந்தெளுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்சிதறித் திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனையுட லிடந்தான்
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே”
(11)

இரண்யனை வதம் செய்த நரசிம்ம மூர்த்தியிடத்து தன் அன்பினை எடுத்துரைக்கும்படி மேகத்தை ஆண்டாள் தூது விடுவதாக உள்ளது.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கையாழ்வாரால் படைக்கப்பெற்றது. பெரிய திருமொழி,

“திருத்தாய் செம்போத்தே
திருமாமகள் தன்கணவன்
மருந்தார் கொல்புகழ் மாதவனைவரத்
திருத்தாய் செம்போத்தே”
(12)

செல்வத் திருமகளது மணாளனான திருமாலிடத்துத் தூது செல்லுமாறு பணிக்கும் நிகழ்வினை பெரிய திருமொழி வரிகள் உணர்த்துகின்றன.

திருவாய்மொழி

நம்மாழ்வரது படைப்பாகிய திருவாய்மொழியில்,

“தூதுரைத்தல் செப்புமின்கள் தூதுமொழிவாய் வண்டினங்காள்
போதிரைத்து மதுநுகரும் பொழில்மூழிக் களத்துறையும்
மாதரைத்தம் மார்பகத்தே வைத்தார்க்கென் வாய்மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே”
(13)

நன்கு மணம் வீசும் மலரினது தேனை உறிஞ்சி அதனுள் திளைத்திருக்கும் வண்டினை எம்பெருமானிடத்து தூது அனுப்புவதாக உள்ளது. இவ்வண்ணம் பக்தி இலக்கியங்களில் தூதுச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

முடிவுரை

* கி.பி.12 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.19ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை சிற்றிலக்கிய வளர்ச்சிக்காலம் எனலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்றைய சமூக நிகழ்வுகளை வெளிக்கொணர்வதாகப் படைப்புகள் பல உருவாயின.

* சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த தூது தொல்காப்பியர் காலந்தொட்டே சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியமென முகிழ்த்து, இன்று தகவல் தொழில் நுட்பத்தில் வானளாவிய வாகை சூடியுள்ளது.

* புலவரது ஆளுமைத் திறனையும், கற்பனைத் திறனையும் காலப் போக்கினையும், சமூக நிகழ்வினையும் தூதிலக்கியங்கள் வெளிக் கொணர்கின்றன.

* தூதிலக்கிய நோக்கும் பயனும் சமுதாய விழிப்புணர்ச்சியை மையமாகக் கொண்டது என்பதை இலக்கியப் பதிவுகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.



அடிக்குறிப்புகள்

1. தமிழ்ப் போராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சி வரலாறு, ப.144.

2. ஔவை. துரைச்சாமிப்பிள்ளை (உ.ஆ), புறநானூறு, பா.எ.35.

3. ஔவை துரைச்சாமிப்பிள்ளை (உ.ஆ) ஐங்குறுநூறு, பா.எ.317

4. வி. நாகராஜன், குறுந்தொகை மூலமும் உரையும், பா.எ.266.

5. மு. கருணாநிதி, (உ.ஆ), திருக்குறள், ப.141.

6. மேலது, ப.249.

7. மேலது, ப.253.

8. மேலது, ப.245.

9. ஞானசம்பந்தன், தேவாரத் திருப்பதிகங்கள், 1:14:10.

10. வி. கரு. இராமநாதன் (பதி.ஆ), திருவாசகம் மூலமும் உரையும், ப.223.

11. ராஜகோபாலன் (உ.ஆ), நாச்சியார் திருமொழி, ப.85.

12. அ. மணவாளன் (தொ.ஆ) தமிழில் பக்தி இலக்கியம். ப.80.

13. அரங்கராஜன் (பதி.ஆ) திருவாய்மொழி,ப.27.

துணைநூற்பட்டியல்

1. தமிழ் பேராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சி வரலாறு, பச்சையப்பன் ஆய்வரங்கம், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை, 1998.

2. துரைச்சாமிபிள்ளை.ஔவை (உ.ஆ), புறநானூறு, கழகவெளியீடு, சென்னை, 1947.

3. துரைச்சாமிபிள்ளை.ஔவை(உ.ஆ), ஐங்குறுநூறு, கழகவெளியீடு, சென்னை, 1947.

4. கருணாநிதி. ஆ (உ.ஆ), திருக்குறள் தெளிவுரை, திருமகள் பதிப்பகம், சென்னை.

5. நாகராஜன். வி., குறுந்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

6. இராமநாதன் வி. கரு. (பதி.ஆ), திருவாசகம், ஸ்ரீ இந்து பதிப்பகம், சென்னை, 7 ஆம் பதிப்பு - 2010.

7. அரங்கராஜன், திருவாய்மொழி, அமுதா நிலையம், சென்னை, 1986.

8. மணவாளன் அ. அ. (தொ.ஆ), தமிழில் பக்தி இலக்கியம், சாகித்திய அகாதெமி வெளியீடு, புதுதில்லி, 2004.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p143.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License