இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பெரியாழ்வார் பாசுரங்களில் தாய் பாவனை

முனைவர் பா. பொன்னி
உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா்,
எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.


முன்னுரை

இறைவனுக்கும் உயிர்களுக்கும் இடையிலான உறவு நிலைகளைப் பல்வேறு நிலைகளில் சுட்டுவா். பக்தி இலக்கியங்களில் இறைவனைத் தலைவனாக, தோழனாக, குழந்தையாக, ஆள்பவனாக எண்ணிப்பாடும் நிலையினைக் காணமுடிகிறது. பக்தி நெறியில் செல்பவர்களுக்கு, அவா்களது மனதில் இயல்பாக எழுகின்ற காமம், குரோதம், பயம், நட்பு, இன்ப துன்ப உணா்வுகள் தம்முடைய நிலையில் குற்றம் உடையவையாக மாறுவது இல்லை. இத்தகைய உறவுநிலைகள் மூலமாகவே இறைவனை அடைவது எளிதாகும். பெரியாழ்வார் பாசுரங்களில் காணப்படும் தாய்பாவனையை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

நவவித சம்பந்தம்

பாகவதம் இறைவனிடம் மனதைச் செலுத்துவதனை “ விரோதம், பக்தி, பயம், பிரியம், காமம் ஆகிய இவற்றிலே எதன் மூலமாவது பகவானிடம் மனதைச் செலுத்த வேண்டும். இப்படிச் செலுத்தும் யாரும் பகவானை விட்டு விலகி இருக்க முடியாது ” (1) என்று குறிப்பிடுகிறது.

"இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் இடையே ஒன்பது விதமான உறவுநிலைகள் இருப்பதாகச் சுட்டுவா்.

1. காப்பவன் - காக்கப்படுபவன்

2. தந்தை அல்லது தாய் - மகன்

3. ஆண்டான் - அடிமை

4. கணவன் - மனைவி

5. அறிபவன் - அறியப்படுபவன்

6. உடையவன் - உடைமை

7. உயிர் - உடல்

8. தாங்குபவன் - தாங்கப்படுபவன்

9. அனுபவிப்பவன் - அனுபவிக்கப்படுபவன்

இவை ஒன்பதையும் நவவித சம்பந்தம் என்று கூறுவா் ” (2)

இதனை;

"1. ரக்சய ரக்சயக சம்பந்தம்

2. பிதா புத்ர சம்பந்தம்

3. சேஷ சேஷி சம்பந்தம்

4. பா்த்து பார்யா சம்பந்தம்

5. ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம்

6. ஸ்வ ஸ்வாமி சம்பந்தம்

7. சரீர சரீரி சம்பந்தம்

8. ஆதாரா தேய சம்பந்தம்

9. போக்த்து போக்ய சம்பந்தம்” (3) என்று வடமொழியில் குறிப்பிடுவா்.

இவ்வுறவுகள் வைணவா்களின் திருமந்திரத்தில் இருந்து பெறப்படுவதாகச் சுட்டுவா்.



தாய்பாவனை

வத்ஸா என்பது கன்றினைக் குறிக்கும் வடசொல்லாகும். திருமாலுக்குரிய பண்புகளில் ஒன்றாக வாத்சல்யம் என்பதும் குறிக்கப்படுகின்றது. கன்றின் மேல் பசு கொள்ளும் அன்பினைப் போல் இறைவனும் உயிர்களின் மேல் அன்பு உடையவன் என்பதையே இப்பண்பு உணா்த்துகின்றது. அத்தகைய தாய்சேய் நிலையே வாத்சல்ய பாவமாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் அடியவா்கள் இறைவனுடைய உயா்வையும் தம்முடைய தாழ்வையும் மறந்து போகிறார்கள். இறைவனைத் தம்முடைய குழந்தையாக பாவித்துத் தம்மைத் தாயாகவும் தந்தையாகவும் எண்ணிக் கொள்கின்றனா். காப்பவனை காக்கப்படும் மழலையாகக் கருதி தாலாட்டு பாடுகின்றனா்.

பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாசுரங்களில் தாய் பாவனையைக் காணலாகிறது. குலகேராழ்வார் தயரதன் நிலையிலிருந்து ஒரு பதிகம் பாடியுள்ளார்.

பெரியாழ்வாரின் திருமொழியில்

வண்ண மாடங்கள் (1-2), சீதக் கடலுள் (1 - 3), மாணிக்கங் கட்டி (1 - 4), தண்முகத்துச் சுட்டி (1 - 5), உய்ய வுலகு படைத்து (1 - 6), மாணிக்கக் கிண்கிணி (1 - 7), தொடர்சங் கிலிகை (1 - 8), பொன்னியற் கிண்கிணி (1 - 9), வட்டு நடுவே (1 - 10), மெச்சூது சங்க (2 - 1), அரவணையாய் ஆயரேறே (2 - 2), பேய்பா டுடைய (2 - 3), வெண்ணெ யளைந்த (2 - 4), பின்னை மணாளனை (2 -5), வேலிக்கோல் வெட்டி (2 - 6), ஆனிரை மேய்க்க நீ (2 - 7), இந்திர னோடு (2 - 8), வெண்ணெய் விழுங்கி (2 - 9), தன்னே ராயிரம் (3 - 2), அஞ்சன வண்ணனை (3 - 2), சீலைக் குதம்பை (3 - 3) எனத் தொடங்கும் பதிகங்கள் தாய்பாவனையில் அமைந்துள்ளன.

தாய்மை நிலை

தன்னலமற்ற தூய அன்பினைக் காணவேண்டும் என்றால் அதனைத் தாயினிடத்தில் மட்டுமே காணலாகும். குழந்தையின் ஒவ்வோர் அசைவைக் கண்டு ரசிப்பதிலும், அதன் வளா்ச்சியைக் கண்டு மகிழ்வதிலும், பிள்ளையின் குறும்புத் தனங்களைக் கண்டு வெளியே கோபம் கொள்வது போல் நடித்தாலும் மனதிற்குள் இன்பம் கொள்வதிலும் தாயின் பங்கு இன்றியமையாததாகும். பிள்ளையின் மேல் பிறா் சொல்லும் குற்றங்களை ஏற்க மறுப்பதும் தாயின் இயல்பு. குழந்தையைச் சிறிது நேரம் காணாவிட்டால் கூட என்ன தீங்கு நோ்ந்ததோ என்று அஞ்சி, தீங்கு நேரக் கூடாது என்று காப்பிடுவதும் கண்ணேறு கழிப்பதும் தாயின் உள்ளம். இத்தகைய தாய்மை உணா்வினை பெரியாழ்வாரிடம் காணமுடிகிறது.



பெரியாழ்வார் பாசுரங்களில் தாய்மை

பெரியாழ்வார் தாய்மை உணா்வை ஏறிட்டுப் பாடி இருக்கிறார் என்பதனை விட கண்ணனின் தாயாகவே மாறி இருக்கிறார் எனலாம். பெரியாழ்வார் யசோதை நிலையில் நின்று பாடினாலும் ஆரம்ப நிலையில் அவரால் கண்ணன் தேவகி பெற்ற பிள்ளை என்பதனை முழுவதுமாக மறந்து விட இயலவில்லை.

"சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி

கோதைக் குழலா ளசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி" (பெரியாழ்வார் திருமொழி 1 - 3 :1)

"மைத்தடங் கண்ணி யசோதை வளா்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுபிள்ளை" (பெரியாழ்வார் திருமொழி 1 - 3 :12)

என்ற பாசுர அடிகள், பெரியாழ்வார் கண்ணனைத் தேவகியின் மகனாக, யசோதையின் வளா்ப்பு மகனாக உணா்வதனை வெளிப்படுத்துகின்றன. ஆனால் பாசுரங்களின் எண்ணிக்கை செல்லச் செல்ல அவா் கண்ணனைத் தன் பிள்ளையாகவே குறிப்பிடுகிறார்.

“என் மகன் கோவிந்தன்” (பெரியாழ்வார் திருமொழி 1 - 5: 1)

“என் சிறுக் குட்டன்” (பெரியாழ்வார் திருமொழி 1 - 5 :2)

“என் மகன்” (பெரியாழ்வார் திருமொழி 1 - 5: 3)

என்ற பாசுர அடிகள் இதனை விளக்குவனவாக அமைகின்றன.



பல்லாண்டு பாடுதல்

பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும் அருளிச்செயலின் தொடக்கமாக அமைந்துள்ளன. திருப்பல்லாண்டில் ஒவ்வொரு பாசுரத்திலும் பல்லாண்டு பல்லாண்டு என்று கூறி இறைவனுக்கு நன்மையை வேண்டிக் காப்பிடப்பட்டிருப்பதால் இதற்குப் பல்லாண்டு என்ற பெயா் ஏற்பட்டது. முதலில் நிற்கும் திரு என்பது மேன்மையையும் தெய்வத்தன்மையையும் உணர்த்துகிறது. பல்லாண்டு பாடுதலை மங்களாசாசனம் எனக் கூறுவது வைணவ மரபு. மங்களம்-நன்மை, ஆகாசனம் - விரும்புதல் நன்மைகளை விரும்புதல் என்று பொருள். பெரியாழ்வார் எம்பெருமானிடம் அவனுக்கே நன்மைகளை வேண்டிப் பாடிய பாசுரங்களே திருப்பல்லாண்டாகும். பக்தி மேலீட்டால் பெரியாழ்வார் தன்னையும் மறந்து இறைவனின் அழகுக்குக் கண்பட்டு விடுமோ? என்று காப்பு கட்டுகிறார். “கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது“ என்பார்கள். மற்றவா்கள் குழந்தையின் அழகினைக் கண்டு ரசிப்பார்களே தவிர, குழந்தைக்குக் காப்பிட மாட்டார்கள். பெற்ற தாய் மட்டும்தான் தன் குழந்தைக்குக் கண்பட்டு விடுமோ என்று அச்சப்படுவாள். அத்தகைய தாய்மை உணா்வோடு பெரியாழ்வார் திருமாலுக்குப் பல்லாண்டு பாடுகிறார். இத்திருப்பல்லாண்டில் மட்டுமல்லாது பெரியாழ்வார் திருமொழியிலும் பல்லாண்டு கூறுவதைக் காணலாகிறது.

“பண்ணோ் மொழியாரைக் கூவி முளையாட்டிப்
பல்லாண்டு கூறுவித்தேன்” (பெரியாழ்வார் திருமொழி 3 - 3 : 9)

“பண்பல பாடிப் பல்லாண் டிசைப்ப பண்டு” (பெரியாழ்வார் திருமொழி 1 - 10: 5)

“எல்லா விடத்திலுமெங்கும் பரந்துபல் லாண்டொலி” (பெரியாழ்வார் திருமொழி 4 - 2 : 2)

என்று பெரியாழ்வார் திருமொழியில் பல இடங்களில் பல்லாண்டு இடம் பெறுகிறது. பல இடங்களில் கிருஷ்ண அவதாரச் செய்திகளைக் கூறிப் பல்லாண்டு பாடுகிறார். இராம அவதாரத்தைக் குறித்து,

“ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதா் வாழ் இலங்கை
பாழாளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” (பெரியாழ்வார் திருமொழி 1 - 1 : 3)

என்று ஓா் இடத்தில் மட்டும் குறிப்பிடுகிறார். இதற்கு வியாக்யானக்காரா்கள் குறிப்பிடும் பதில் சுவையானது. இராமாவதாரத்தில் பிள்ளைகள் நால்வரும் அரக்க குலத்தை அடக்கவல்ல மிடுக்கோடு நற்குணமும் பொருந்தியவா்கள். அவா்களின் தந்தையோ இந்திரனுக்கு எதிரான சம்பாசுரனையே கொன்ற பெருவீரன். அமைச்சா்களோ அளவற்ற ஞானம் பொருந்திய வசிட்டா் முதலான பெருமக்கள். ஊரோ பகைவா் எவரும் புகமுடியாத திருவயோத்தி. இராமன் பிறந்து வாழ்ந்த காலமோ மிக நல்ல காலமான திரேதாயுகம். இப்படி அனைத்துமே பாதுகாப்பாக அமைந்தமையால் அவ்வதாரத்தைக் குறித்து அச்சம் கொள்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் கிருஷ்ணாவதாரத்திலோ முற்றிலும் வேறான நிலைமை. அவன் பிறந்த இடமோ கம்சனுடைய சிறைக்கூடம். கம்சனோ கிருஷ்ணனைக் கொல்வதற்காகக் காலம் பார்த்து அசுரா்களை ஏவி விடும் கொடியவன். தகப்பனோ சாது இடையன். ஊரோ இடைச்சேரி. கிருஷ்ணனோ தமையன் ஒரு கணம் பிரிந்தால் பாம்பின் வாயில் விழும் தீம்பன். அவன் பிறந்ததோ கலியுகத்திற்குத் தோள் தீண்டியான (நெருங்கியதான) துவாபரத்தின் இறுதி. ஆதலின் அவனுக்குப் பல்லாண்டு கூறிக் காப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை” (4) என்று குறிப்பிடுவா்.

இவ்வாறு பெரியாழ்வார் கண்ணனைத் தன் மகனாகவே எண்ணி அன்பு செலுத்துகிறார். இறைவனிடம் கொண்ட அளவற்ற அன்பின் காரணமாகவே பெங்கிப் பெருகிய பரிவினால் மற்ற ஆழ்வார்களை விட மிக்க பெருமையுடையவா் என்னும் பொருளில் இவா் பெரியாழ்வார் எனப்பட்டார் என்பதனை இதன் வழி அறியலாகின்றது.

சான்றெண் விளக்கம்

1. அ. லெ. நடராஜன் ( உ.ஆ. ), ஸ்ரீமத் பாகவதம் ப.21

2. பூ. ஜெயராமன், குலசேகர ஆழ்வார் ப.27.

3. மேலது .

4. ம. பெ. சீனிவாசன், பெரியாழ்வார் ப.34

துணைநூற்பட்டியல்

1. நடராஜன் அ. லெ. - ஸ்ரீமத் பாகவதம், புக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 135 பவழக்காரத்தெரு, சென்னை.

2. ஜெயராமன். பூ - குலசேகராழ்வார், அநுராகம், 10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகா், சென்னை (2000)

3. சீனிவாசன் ம.பெ - பெரியாழ்வார், சாகித்ய அகாதெமி, புதுடெல்லி. (1999)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p209.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License