இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்க இலக்கியங்களில் தமிழர் இசைக்கலை

பேராசிரியர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு


முன்னுரை

மனித வாழ்க்கையை மாண்புறச் செய்யும் ஆற்றலே கலைகளாகும். இயல்பாகத் தோன்றிய பொருளை இயற்கையாகவும், மக்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளைக் கலையாகவும், கலைப்படைப்பாகவும் கருதலாம். எல்லா உயிர்களையும் தன்பால் இசையச் செய்வதால் இசை எனப் பெயரிட்டனர்.. தொண்டையாலும், கருவிகளின் துணையாலும் இசைத்தனர். இசைக்கருவிகள் நான்கு வகைப்பட்டன. அவை தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, நரம்புக்கருவி என்பன. தமிழர்கள் பல்வேறு கலைகளைப் பயின்று இருந்தனர். இசைக்கலையில் மிகவும் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, தாளக்கருவி ஆகிய கருவிகள் புழக்கத்தில் இருந்தன. இசை, மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இருந்தது. கலைஞர்கள், அரசர்களால் ஆதரிக்கப்பட்டனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட இசையும் இசைக்கலைஞர்களும் சங்ககாலத்தில் எவ்வாறு போற்றப்பட்டனர் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க இலக்கியத்தில் இசைக்கூறுகள்

பத்துப்பாட்டில், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய இரண்டிலும் தமிழ் இசைக் கலைஞர்கள் பற்றிய பல செய்திகள் காணப்படுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்ற ஐந்து நிலங்களுக்கும் தனித்தனியே யாழ் முதலிய இசைக்கருவிகளும் பண்களும் குறிக்கப்பட்டுள்ளன. சங்கக் காலத்தில் நினைதொறும் தனித்தனிப் பண் உரியதாக்கப்பட்டிருந்தது. குறிஞ்சிக்குக் குறிஞ்சிப் பண்ணும் முல்லைக்குச் சாதாரிப் பண்ணும், மருதத்துக்கு மருதப்பண்ணும், நெய்தலுக்கு இரங்கற்பண்ணும், பாலைக்குப் பஞ்சரப் பண்ணும் எனப் பண்களைத் திணைதோறும் தனித்தனியாக உரித்தாக்கினர்.

“பாலை நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே” (பிங்கலம்.1375)

தோற்கருவிகளுடன் குறிஞ்சிக்குத் தொண்டகப் பறையும், முல்லைக்கு ஏறுகோட் பறையும், மருதத்திற்கு நெல்லரிகிணையும் முழவும், நெய்தற்கு மின் கோட்பறையும், நாவாய்ப் பம்பையும், பாலைக்குத் துடியும் பறைகளாகப் பயன்பட்டன.


நற்றிணை உணர்த்தும் இசை

பண்டைத் தமிழகம் இசைத் தமிழகம் இசைத் தமிழில் சிறந்து விளங்கியது. அதன் எதிரொலி நற்றிணைப் பாடல்களிலும் உள்ளது. இசைக் கருவிகள் பலவற்றை நற்றிணை நமக்குத் தெரிவிக்கிறது. துழல் (69), சீறியாழ் (189, 380), படுமலை (பாலைப்பண்) நின்ற நல்யாழ் (139), யாழ் (335), தொண்டகச்சிறுபறை (104), தண்ணுமை (130), முழவு (360), துடி (77), முரசு (93,197), தாளம் (95) எனப் பற்பல வாத்தியக் கருவிகள் இருந்தமை, நற்றிணையின் மூலம் தெரியவருகிறது.

மதுரைக்காஞ்சியில் இசை

குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை என்னும் நான்கும் அக்காலத்தின் நிலத்தை ஒட்டி வழங்கப்பட்ட இசை வகையாகும். செவ்வழிப்பண் முல்லை. நெய்தல் நிலத்திற்குரிய மாலையில் பாடப்படுவதாகும். மருதப்பண் காலையில் பாடப்படுவதாகும். யாழில் இசைக்க வல்லார் காலையில் மருதப்பண்ணை மதுரையில் வாசித்தனர் என்பதை,

“சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழேர் மருதம் பண்ணை” (மதுரை. 657-658)

என்ற மதுரைக்காஞ்சி அடிகள் மூலம் அறியலாம். ஒரு நாட்டின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வாயில்களாகக் கலைகள் திகழ்கின்றன. சங்ககாலத்தில் தோன்றிய நகரங்களுள் மதுரை தனிச்சிறப்புடன் திகழ்கிறது. அத்தகைய சிறப்பு பெற்ற மதுரையில் வாழும் மக்களிடம் காணப்பட்ட கலைகள் கட்டடம், சிற்பம், ஓவியம், இசை போன்றவற்றின் மூலம் வெளிப்படுகின்றது. இதன் மூலம் அவர்களது வாழ்வில் கலை இரண்டறக் கலந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

பரிபாடலில் இசைக்கருவிகள்

இசைத்தமிழுக்கு அடிப்படையான முதற்கருவி குழற்கருவியே. இக்கருவிக்குரியவர்கள் முல்லை நில மக்களே. திருப்பரங்குன்றத்திற்கும் மதுரைக்கும் இடையிலுள்ள வழியில் தும்பியும் வண்டும் ஒலிக்கின்றன. அவ்வொலியானது எழு துளையையுடைய புல்லாங்குழலிலும் ஐந்து துளையுடைய புல்லாங்குழலிலும் இசைச் சுருதியைப் போல உள்ளதாக நல்லந்துவனார் குறிப்பிடுகின்றார். இதனை,

“ஏழ்புழை யைம்புழை யாழிசை கேழ்த்தன்ன வினம்
வீழ்தும்பி வண்டொடு மிஞிறார்ப்ப” (பரி.8.22-23)

என்பதால் அறியலாம். மேலும்,

“கைவை திமிர்பு குழல் காண்குவோரும்” (பரி:19:41)

என்ற ஓரடி தவிரப் புல்லாங்குழல் என்ற ஓரடி பற்றிய செய்தி பரிபாடலில் காணப்படவில்லை.

யாழ்

குழற்கருவிக்கு அடுத்த நிலையிலிருப்பது யாழ் எனும் கருவி. குழற்கருவி முந்தையதாயினும் அதில் இல்லாத வாய்ப்பு யாழில் இருப்பதால் யாழ்க் கருவியின் மூலமே இசை அதிகமாக வளர்ந்தது என்பர். இசை நூல் வல்லோர். பரிபாடலில் யாழ் பற்றிய செய்தி பரவலாகக் காணப்படுகிறது. சங்க இலக்கியங்கள் மட்டுமின்றி, சிலப்பதிகாரம், பெருங்கதை முதலான காப்பியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் உள்ளன.

“புரிநரம்பின் கொளைப் புகல் பாலை யேழும்
எழூப்புணர் யாழும்” (பரி.7.77-78)

என்பதன் மூலம் யாழானது பாலையேழினையும் உடைய புரிதரம்பின் கண் இனிய இசையைத் தருகின்றது என்பதை அறியலாம்.


பட்டினப்பாலையில் இசைக்கலை

சங்ககாலத்தில் உள்ளோர் ஆடல், பாடல் இசைக்கருவிகளைக் கையாளுவதில் திறமை படைத்தவர்களாய்த் திகழ்ந்துள்ளனர்.

“முதுவாய் கோடியர் முயளின் ததும்பி” (பட்.பாலை.253(அடி))

கூத்தர்கள் முழவு முழக் குழலில் வல்லவர்களாகவும்,

“பாணர் படுமலை பண்ணிய எழாலின்” (குறுந்.பா.323)

பாணர்கள் யாழ் இசைத்தலில் வல்லவர்களாகவும் திகழ்ந்தமையினை இச்சங்கப் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.


குறுந்தொகையில் பாணர்

சங்ககாலக் கலைஞர்களாகக் குறிக்கத்தக்கவர்களில் பாணர், பொருநர், விறலியர், கூத்தர், ஓவியர், சிற்பர், துடியர் ஆகியோர் நிலை ஆராய்தற்குரியது. பண் என்னும் சொல்லை முதன்மையாகக் கொண்ட பாணர் பாடுவார். யாழிசைப்பார் என இரு வகைப்படுவர். இவரை யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பிரிப்பார். தலைவனுக்குத் தூதாக வந்த பாணனை ஏற்றுக் கொண்ட தலைவி அவனைப்பற்றித் தன் தோழியிடம்,

“அன்னா யிவனோ ரிளமா ணாக்கள்
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தினூரும் பெருஞ் செம்மனெ”(குறுந்.33)

என்று அவனின் நாவன்மையப் புகழ்கிறாள்.

குறுந்தொகையில் பறை

‘பறை’ என்பது எடுத்தியம்பல் என்னும் பொருள்படும். கூறுதல் என்னும் பொருளில் மலையாளத்தில் வழங்கப்பெறுகிறது. பறை, தமிழர் வாழ்க்கையோடு ஒன்றிய இசைக்கருவி யாழும், பறையும் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருளாக ஓதப்படும். பிற்காலத்தில் தான், ‘பறை’ இழவுக் கருவியாகிறது. நெய்தற்பறை மட்டுமே சாக்காட்டு பறையாகும்.

“பறைபடப் பணில மார்ப்ப இறை கொள்பு
தொன் மீதாலத்துப் பொதியில் தோன்றிய
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே”(குறுந்.15)

என்பதில் மணத்திற்குரியதாகப் பறை கூறப்பெற்றது.

முடிவுரை

காலந்தோறும் இசை என்பது பல்வேறு மாற்றங்களைப் பெற்றாலும் அவை மொழிகள் தோன்றும் முன்பே மனிதனின் தகவல் பரிமாற்றக் கருவியாக இருந்துள்ளது. அதன் வளர்ச்சி நிலையே சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. காலப்போக்கில் சங்ககால இசைக்கருவிகள் காணாமல் போனது. இருப்பினும் அவைகளைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. தற்போது இருக்கும் இசைக்கருவிகளையாவது நாம் பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முயல்வோம்.

பயன்பட்ட நூல்கள்

1. தமிழண்ணல் (உரை), குறுந்தொகை, முல்லை பதிப்பகம், சென்னை, பதி.2002.

2. சிதம்பரனார். சாமி (உரை), பட்டினப்பாலை, அறிவுப்பதிப்பகம், பதி.2008.

3. புலியூர்க்கேசிகன் (உரை), பரிபாடல், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பதி.2010.

4. பொ.வெ.சோமசுந்தரனார் (உரை), மதுரைக்காஞ்சி, கழக வெளியீடு, பதி.1956.

5. புலியூர்க்கேசிகன் (உரை), நற்றிணை, உமா பதிப்பகம், பதி.2013.

6. சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி நிகண்டுகள், சாந்தி சாதனா அறக்கட்டளை, பதி.2018.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p253.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License