இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்


16. சமய நோக்கில் கற்பு நெறி

முனைவர் சே. கணேசன்

மணிமேகலை பௌத்த சமயத்தின் உயரிய கோட்பாடுகளை எல்லாம் தெளிவாக விளக்கும் ஒப்பற்ற இலக்கியமாகும். அன்பு, அறம், கற்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டு காப்பியம் அமைகிறது. வன்முறைகளை நீக்கி மென்முறைகளினால் உலகம் வாழ வேண்டும் என்ற புத்த சமயக் கொள்கைகளை வலியுறுத்துகிறது. காப்பியத்தில் சமயத்தின் தாக்கம் தலை தூக்கினாலும் அறச்செயல்களையும் கற்பு நெறியையும் மேம்படுத்துகிறது. மணிமேகலை, ஆதிரை, விசாகை, காருக மடந்தை, பீலிவளை போன்ற மகளிர் கற்பின் மேன்மையால் இயற்கையையும் வென்றனர். சிலப்பதிகாரத்தில் கண்ணகியைக் கற்புத் தெய்வமாகப் படைத்து உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் எனப் பேச வைத்தவர் இளங்கோ. அதன் தொடர்ச்சியான மணிமேகலையிலும் கற்பே மேம்பட்டதாகக் கொண்டு காப்பியத்தைப் படைத்தார் சாத்தனார். இவ்வகையில் அமையும் மணிமேகலையில் சமய நோக்கில் கற்பு நெறி என்னும் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது.

பத்தினிப் பெண்டிர்

மணிமேகலையில் பத்தினிப் பெண்டிர் இலக்கணம் சிறப்பாகப் போற்றப்படுகிறது. காதலன் இறந்தவுடன் பத்தினிப் பெண் இறந்து விடுகிறாள். தானே உயிர் போய் விட்டால் அவளுக்குக் கவலையில்லை. பாண்டியன் கண்ணகியின் உரை கோட்டு அதிர்ச்சியில் இறந்ததும் பாண்டிமாதேவியும் அக்கணமே உயிர் நீத்தாளே, அது ஒரு கற்பு நெறி. நெருப்பு பத்தினிப் பெண்டிருக்கு நீர்ப் பொய்கையாயிற்று. அதனால் தான் ஆதிரை தன் கணவன் கடலுள் மூழ்கினான் எனக் கேட்டதும் தீ மூட்டி அதில் குதித்தாள்.

தன் கற்பை வெளிப்படுத்த கண்ணகி மதுரைக்குத் தீ மூட்டினாள். சமய நோக்கிலும் பொது நோக்கிலும் எழுந்த இலக்கியங்களில் வரும் பத்தினிப் பெண்டிர்கள் எல்லாரும் இவ்வாறே இறுதி முடிவைத் தேடிக் கொண்டனர்.

கற்பு நெறி

மகளிர் தம் கற்பு என்னும் உயரிய நெறியினால் சமுதாயத்தில் மாண்புடையவராகக் கருதப்பட்டனர். அதுவே கணவனது பெருமைக்கும் உற்ற துணையாகக் கருதப்பட்டது. இளங்கோவடிகள் கற்பைக் கொழுந்து என்கிறார். வள்ளுவர் கற்பைத் திண்மை என்கிறார். அக இலக்கியங்கள் கற்பை நெருப்பு என்கிறது.

பெண் தன்மையின் தலைமைப் பண்பு அவரவர்க்கு ஏற்ற நிலையில் அமையும். பெண்ணாகப் பிறந்தவள் ஆணின் துணையைப் பெற்றவள் ஆவாள். மணிமேகலை இல்லறத்தைத் துறந்த கற்பரசி. ஆதிரை இல்லறத்தில் மேம்பட்ட கற்பரசி. இங்கு துணை மாந்தராக ஆதிரை படைக்கப்பட்டாலும் குணத்தில் அவள் தலைமைப் பண்புடையவள். அவள் கணவன் கணிகையரிடத்தில் பெரும் பொருள் இழந்தும் அவனை வெறுக்கவில்லை.

சாதுவன் என்போன் தகவலன் ஆகி
அணியுரை தன்னை யகன்றனன் போயிக்
கணிகை யொருத்திக் கைத்தூண் நல்க
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டிக்
காண மிலி யெனக் கையுதிh;க் கோடலும் (மணி. ஆதிரை 310)

சாதுவன் கணிகையரிடத்தில் பெரும் பொருளை இழந்தான். அவனைப் பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி அனுப்பினாள். மீண்டும் கப்பலில் வணிகருடன் திரவியம் தேடச் செல்கிறான். கடலில் மரக்கலம் உடைந்துவிடுகிறது. மரக்கலப் பலகை ஒன்றில் மிதந்து நாகர்கள் வாழ்கின்ற பகுதியில் சேர்ந்தான்.



மரக்கலத்தில் தப்பித்த சிலர் ஆதிரையிடம் சாதுவன் இறந்து விட்டான் எனக் கூறினர். ஆதிரை மனம் ஒடிந்து விடுகிறாள். தன் கணவன் சென்ற உலகத்திற்கே தானும் செல்லத் துடிக்கிறாள். ஊர் மக்களை அழைத்தாள்.

ஊரீரேயோ ஒள்ளழல் ஈமம்
தாரீரோ எனச் சாற்றினள் (மணி. ஆதிரை 2223)

விறகுகளை அடுக்கித் தீக்குள் புகுந்தாள். தானே குழி தோண்டி அதில் படுத்தாள்.

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்

என்ற சிலம்பு வரி ஆதிரைக்குப் பொருந்துகிறது. அவள் நெருப்புக்குள் புகுந்ததும் அவள் பூசிய சந்தனம், சூடிய மாலை, அசைந்த கூந்தல் எரியவில்லை.

திருவின் செய்யோள் போன்றினிதிருப்ப

திருமகள் செந்தாமரை மலரில் வீற்றிருப்பது போன்று காட்சி தந்தாள். ஈமத்தீச் சுடவில்லை. ‘தீயும் கொல்லாத தீவினை யாட்டியேன்‘ எனப் புலம்புகின்றாள் அப்போது அசரீரி ஒன்று, ஆதிரை கேளாய்! உன் கணவன்

நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கம் சார்ந்தனன் பல்லாண்டிரான் (மணி. ஆதிரை 1516)

எனக் கூறக் கேட்கிறாள். பொய்கையில் நீராடியவள் போலப் புதுப் பொலிவுடன் திகழ்ந்தாள். தன் கணவன் வந்ததும் விருந்தோம்பலை மேற்கொண்டாள்.

ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால்
பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென (மணி. ஆதிரை 128129)

என்று காயசண்டிகை ஆதிரையின் விருந்தோம்பல் பண்பினைக் கூறி முதல் பிச்சையை ஆதிரையின் கையில் எடுப்பாயாக என்று மணிமேகலையிடம் கூறியதும் மாசற்ற கற்புத் தெய்வமான ஆதிரையின் வீட்டில் சென்று மணிமேகலை ‘புனையா ஓவியம்’ போல் நின்றாள். பத்தினி ஆதிரையும் அவளை வலம் வந்து முறைப்படி வணங்கி அமுத சுரபி நிரம்ப அன்னமிட்டாள்.

அமுத சுரபியின் அகன் சுரை நிறைதரப்
பாரகம் அடங்கலும் பசிப் பிணி அறுகென
ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்தென (மணி. ஆதிரை 133136)

இவ்வுலக உயிர்கள் எல்லாவற்றின் பசியும் இவ்வுணவிலிருந்து நீங்குக என்று கூறி உணவிட்டாள். இக்கற்புக்கரசியின் மேலான பண்பினை ஆராய்ந்தால் வியக்கும். யாசித்து வந்தவர்களுக்குப் பசிப்பிணி போக்கியவர்கட்கு வீடுபேறு உறுதி. மேலும் பெண்மைக்கே உரிய அடக்கம், பொறுமை, இரக்க குணம், தன் கணவனைத் தவிர வேறு ஒருவரை நினைத்துக் கூடப் பார்க்காத தூய உள்ளம் ஆதிரையிடம் நிறைந்திருந்தன.

சாதுவன் தீய ஒழுக்கத்தில் கணிகையரிடம் பெரும் பொருளை இழந்து மீண்டும் திரும்ப வந்த போது கணவன் மேல் இரக்கம் கொண்டாள். கணவனோடு புண்ணியங்கள் செய்தாள்.

சைவ அடியாரான காரைக்கால் அம்மையார் தன் கணவனுக்குப் பயன்படாத அழகு வீண் எனக் கருதி இறைவனிடம் தனக்குப் பேயுருவம் கேட்டுப் பெற்றார். இது சைவ சமயக் கற்பு நெறிக்குச் சான்று.

சிலம்பில் வரும் கண்ணகி தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்திருந்தாலும் அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கருதினாள். அவன் இறப்பின் செய்தி கேட்டுப் புயல் போன்று சென்றாள். தன் கணவனின் பிரிவை நினைத்து உள்ளம் உருகினாள். பதினான்கு நாட்கள் கழித்துத் தன் கணவனோடு மேலுலகம் சென்றாள்.

மாதவியும் கோவலனின் பிரிவைத் தாங்க முடியாதவளானாள். இல்லறம் துறந்தாள் துறவு பூண்டாள்.

உணவில் பகுத்துணவு, பாத்தூண் மிகச் சிறப்புடையதாகும். பிச்சையிட்டாள் பத்தினிப் பெண் ஆதிரை. பெற்றவள் மாபத்தினி மேகலை. அவள் இட்ட உணவு அமுத சுரபியில் விழுந்ததும் அது பெருந்திரளாகப் பெருகியது. புத்த சமயம் பசிப்பிணி போக்க விழையும் ஒப்பற்ற அறநெறிச் சமயமாகும்.



மணிமேகலை விசும்பின் வழியே சென்று வஞ்சி நன்புறத்தே இறங்கிக் கண்ணகி கோட்டம் புகுந்தாள். அங்கே கற்புக் கடன் பூண்ட அன்புத் தாய் கண்ணகி, கொடை வள்ளல் கோவலன் இருவரும் தெய்வச் சிலையாக நின்றனர். அவர்களை வணங்கிக் குணம் பல ஏத்தி நின்றாள் மணிமேகலை.

‘தாயே தாங்கள் உடன் இறத்தலும் கைம்மை நோன்பும் விடுத்தீர். முத்திக்குரிய தவ நெறியும் பேணாது கற்புக் கடமை ஒன்றையே பேணிய தென்னே! என்று அழுது நின்றாள் மேகலை.

ஒப்பற்ற பத்தினிக் கடவுளான கண்ணகி பேசினாள். எனது கணவனுக்கு உற்ற இடுக்கண் பொறாது மதுரையை எரித்துப் பாழ்படுத்தினேன். என்றாள் கண்ணகி. கணவனுக்குத் துன்பம் இழைத்தவர்களைக் கற்புடைய மாதர் விட்டு வைக்கவில்லை.

நறுமணக் குழவியே இந்தக் கயிலை மூதூரில் பல சமயவாதிகள் உள்ளனர். அவரவர் சமயப் பொருள்களைக் கேட்டு உணர்ந்து அவற்றை விலக்கிப் புத்த ஆகம வழியே பின்பற்றக் கடவாய். நீ வேற்றுருக் கொண்டு செல்க‘ என ஏவினாள் கண்ணகி தெய்வம்.

மணிமேகலையும் ஒரு மாதவன் வடிவில் தாங்கி வழியே தேவாலயம், வேதிகை, சாலை, முனிவர் ஆகியோர்களைச் சந்தித்தாள். பின்பு மாதவக் கோலத்துடன் புத்தர் தவப்பள்ளியை அடைந்து அறவண அடிகளை வணங்கினாள். அடிகள் புத்த தத்துவத்தை விளக்கினார்.

புத்த நெறி

ஆசையே துன்பத்திற்கு அடிப்படை. அவாவை அறுத்தால் வீடு பேறு கிடைக்கும் என்றார். அவ்வாறே மணிமேகலையும் ஆசையை நீக்கி, தவத்திறம் பூண்டு புத்தரை வணங்கி வீடு பெற்றாள்.

சமய நோக்கில் கற்பு நெறி

நல்ல குடியில் பிறந்தவர்களுக்குக் கன்னிப் பருவத்திலேயே கற்பு காவலாக அமைந்துவிடும். இல்லறத்தில் நல்லறம் செய்து கற்புக்கு வேலி அமைத்துக் கொண்டாள் ஆதிரை. அவள் தன்னைக் கொண்டவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என வாழ்ந்தாள்.

தெய்வம் தொழாள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்ற குறள் ஆதிரைக்குப் பொருந்திற்று. கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர் என்பது சமயங்களின் கொள்கை.



காவிரிக் கரையில் பார்ப்பினி மாருதியைச் சுகந்தன் என்ற சிறுவன் ‘நீ வா‘ என்று காமக் குறிப்புடன் அழைத்தான். அவள் கலங்கினாள்.

மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகார்
புக்கேன் பிறன் உளம் புரிநூல் மார்பன்
முத்தீப் பேணும் முறை எனக்கு இல்

என்று கலங்கினாள். நான் கற்புடையவளாக இருந்திருந்தால் என்னைப் பார்த்தவனுக்குக் காமக்குறிப்பே தோன்றியிருக்கக் கூடாது என உள்ளம் பதைத்தாள். கற்பின் மேன்மையை இங்கு நினைத்தாலே தமிழன் என்ற பெருமை நமக்குக் கிடைக்கும்.

கற்புக்கரசி கண்ணகி மதுரை மாநகர மக்களைப் பார்த்து நீதி கேட்டு அழுதாள். இயற்கையும் அழுது மறைந்தது.

விசாகை

விசாகை என்ற கற்பரசி தன் மாமன் மகனோடு இல்லற வாழ்க்கை வாழாமலே இருவரும் சேர்ந்து அறம் செய்தனர்.

காருக மடந்தை

நாட்டிலே பஞ்சம் இருந்தது. காருக மடந்தை என்பாளைக் காப்பாற்ற இயலாமல் கணவன் கைவிட்டான். அப்போது அவள் கர்ப்பிணி. கணவன் சென்ற பின் அவளுக்குக் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை ஒரு அந்தணாளன் எடுத்து வளர்த்தான். பின்னர்க் காருக மடந்தை உடலை வளர்க்க உடலை விற்கும் இழி தொழிலை மேற்கொண்டாள். அந்தணாளன் இல்லறத்தில் வளர்த்த அவளின் மகனும் இவள் தன் தாய் என்று அறியாமல் அவளைக் கூடினான். பின்னர்ச் செய்தியறிந்து மாளாத் துயரில் இருவரும் மாண்டனர்.

பீலிவளை

மணிமேகலையில் வரும் பீலிவளை நாகலோகத்து மன்னன் மகள். அவள் சோழ மன்னனை மணந்து கற்பு நெறியோடு புத்த பீடிகையைக் கண்டு தொழுது கற்பு நெறியோடு வாழ்ந்தாள்.

மணிமேகலைக் காப்பியம் சமயச் செய்திகளைக் கொட்டி வைத்த காப்பியம் அன்று. மனித வாழ்வுக்குச் சிந்திக்கத்தக்க உயர்ந்த ஒழுகலாறுகள் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. தம் கொள்கையில் எவ்வளவு இடர் வரினும் விட்டுக் கொடுக்காத தன்மையுடன் வாழ வேண்டும். மணிமேகலையை இல்லறம் இழுத்தது. ஆனால் அதற்கு அவள் உடன்படவில்லை. ஆடற் கணிகையர் குலத்திலே பிறந்தவள் என்றாலும் அவள் குலத்தொழிலைத் தீத்தொழில் என உணர்ந்தாள். அதனால் தான் கணிகை மரபில் பிறந்த பெண்ணின் பெயரில் ஓர் இலக்கியம் தோன்றியதே அக்காலத்தில் எழுந்த ஒரு புரட்சி எனலாம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s1/p16.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License