இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

13. சங்ககாலப் புலவர்களின் மழை குறித்த சிந்தனை


இரா. உமாதேவி
தமிழ் ஆர்வலர்

முன்னுரை

சங்ககால வாழ்க்கை முறை இயற்கையமைப்பை அடிப்படையாகக் கொண்டது. மக்களின் உணவு, தொழில், பழக்க வழக்கங்கள் பொழுதுபோக்குகள், மனப்பாங்கு, சமய நம்பிக்கை என அனைத்தையும் சங்க இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாக அமைவது நீர் என்றால் அது மிகையாகாது. அந்நீரிற்கு அடிப்படையாக அமைவது மழை. சங்க இலக்கியங்களைப் படைத்த புலவர்கள் மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தத்தமது பாடல்களில் ஆங்காங்கே மழை பற்றிய செய்திகளை கூறிச் சென்றுள்ளனர்.

தொல்காப்பியரும் மழையும்

தொல்காப்பியர் அன்பின் ஐந்திணைகளுள் முல்லைக்குரிய முத்ற்பொருளைக் கூறுமிடத்து ஆவணி, புரட்டசி ஆகிய இரு மாதங்களைக் கூறுகிறார். இது நமது மரபுப்படி மழை பொழியும் காலமாகும். இதனை,

“காரும் மாலையும் முல்லை” (தொல்.பொரு.நூ.6)

எனும் நூற்பாவின் வழி அறியலாம்.

மழையின் சிறப்பு

கொடை வள்ளல்களில் சிறந்தவனாகக் கருதப்பெறும் பாரியின் வள்ளல்த் தன்மையினைக் கூறுமிடத்து,

“மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே” (புறம். 107)

எனக் கபிலர் மழையினைப் பற்றி உரைக்கிறார்.



மழையின் தேவை

மழைதான் அனைத்திற்கும் அடிப்படை. பசுமை வறண்டு காணப்படும் நிலப்பகுதியில் மழை பொழிதலை ஒழித்து மேகம் வேறு இடத்திற்கு சென்றுவிடும் என்பதனை நன்கு அறிந்திருந்தனர். அதனால் தான்,

“பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வானுலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்” (அகம்.185 : 8-10)

என்ற அடிகளைப் பாட முடிந்தது. அதுமட்டுமா, மழை பொழியாது வெறுமானம் ஆகுவதினால் உண்டாகும் துன்பத்தினை,

“உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைக்கால் நீங்கிய மாக விசும்பல்” (அகம்.141 : 5-6)

எனும் பாடல் அடிகள் மழை பொழியாது பொய்த்துப் போனால் உழவுத்தொழில் உட்பட அனைத்துத் தொழில்களுமே பாழ்படும் என்றுரைக்கின்றது.

மழையின் வரவு

அவ்வையார் போன்ற புலவர்கள் மழை வருவதனை நன்கு கணித்திருந்தனர். கார் கொண்ட கருமேகங்கள் இடி மின்னலுடன் வருவது பாறை இடுக்குகளிலுள்ள பாம்புகளை நடுநடுங்க வைத்தது என்பதனை,

“கேழ்கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப
படுமலை உருமின் உரற்று குரல்” (நற். 129 : 7-8)

எனும் அடிகள் விளக்குகின்றது.

நீல நிறமுடைய வானத்தில் கருநிற மேகங்கள் சூழ்ந்துள்ளது. அம்மேகக் கூட்டத்திற்கிடையே மின்னல் மின்னுவதால் பெரிய பாறைப் பிளவுகளைக் கூட நன்றாகக் காண முடிகிறது. பின்னர் மழை பொழிந்தது என்பதனை,

“காயாக் குன்றத்து கொன்றை போல
மாமலை விடரகம் விளங்க மின்னி...
வியலிரு விசும்பகம் புதைப்ப பாஅய்ப்
பெயல் தொடங் கினவே பெய்யா வானம்” (நற். 371)

எனும் பாடலின் வழி உணரலாம்.



மழை உருவாக்கம்

மழை மேகங்கள் உருவாதற்கு பரந்த விரிந்த கடலிலுள்ள நீர்தான் ஆதாரம். சூரிய வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி மேலே செல்கிறது. அவ்வாறு சென்ற நீராவியை பூமியிலுள்ள காற்று மண்டலங்களின் வழி மழையாகப் பொழிகிறது. இதனை,

“பனித்துறைப் பெருக்கடல் இரந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே” (அகம்.183)

எனும் அடிகளில் அறியலாம்.

மேலும், அதிக நீரை உடைய மேகங்கள் மேலே அதிக தூரம் செல்லாமல், முதற் சூலை உடைய மகளிர் போல கீழேயே நின்று மழை பொழிவதனை,

“கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்புலர் கல்லாது தாங்குபு புணரிச்” (குறுந்.287 : 5-6)

என்று கச்சிப்பேட்டு நன்னாகையார் எனும் புலவர் எடுத்துரைக்கிறார்.

காற்றும் மழையும்

‘ஆடியில் காற்றடிச்சா ஐப்பசியில் மழை பொழியும்’ எனும் பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. பண்டையத் தமிழர்கள் மழையோடு காற்றினை தொடர்புபடுத்தியிருக்கின்றனர். காற்றால் தான் மழை ஒரே இடத்தில் பொழியாமல் பல இடங்களுக்கும் பரவிச் செல்கின்றது. கார்கால மேகம் காற்றில் அடித்துச் செல்லும் காட்சியை,

“நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே” (ஐங். 492)

எனும் அடி விளக்குகின்றது.

காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுவதனை நன்குணர்ந்த புலவர்கள் வலமாகச் சுற்றுவதனை,

“வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொடு பெயல் தொடங்கின்றே வானம்” (ஐங். 469)

எனவும்,

“கடல் முகந்து கொண்ட காமஞ்சூல்
மாமழை சுடர்நிமிர் மின்னொடு வலன் ஏர்பு” (அகம். 43)

எனவும் சுட்டப்படுகிறது.

மேலும் முல்லைப்பாட்டில்,

“நனந்தலை உலகம் வளையிநேமியொடு
வலம்புரி பொறித்த மாதங்கு தடக்கை” (முல் - 1-2)

என காற்று வலம் நோக்கிச் செல்வதனைத் தெளிவாக நப்பூதனார் உரைக்கிறார்.

கீழ்க்காற்று கடல் தொழில் செய்பவர்களுக்கு உகந்ததல்ல. ஏனெனில் அது மழை பொழியும் காலம் என்பதனை நன்குணர்ந்த புலவர்,

“கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த” (நற். 140)

என்கிறார்.



காற்றினால் மேகம் தள்ளப்படுவதால் மலையினால் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கு மழை பொழிகின்றது என்பதை,

“வளிபொரு மின்னொடு வானிருள் பரப்பி
விளிவுடன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்” (பதி.12)

எனும் பாடலடி விளக்குகின்றது.

முடிவுரை

பண்டைய இலக்கியங்களைப் படைத்த புலவர்கள் இன்றைய நவீன விஞ்ஞானிகள் பெறாத அறிவினைப் பெற்றிருந்தனர் என்பதனை இக்கட்டுரையின் வழி அறிந்தோம். மேலும், மழையின் அவசியம், அதனது உருவாக்கம், பொழிவு போன்ற பல்வேறு சிந்தனைகளையும் புலவர்கள் சங்கப்பாக்களின் மூலம் கூறிச் சென்றுள்ளனர்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p13.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License