இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர்

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

முனைவர் சி. சேதுராமன்


40. ஊர்கள்

உலகில் பல ஊர்கள், நாடுகள் உள்ளன. ஒவ்​வொரு ஊருக்கும், நாட்டுக்கும், தனித்த ​பெரு​மை உண்டு; சிறப்பு உண்டு. ஒரு ஊருக்​கோ, நாட்டிற்​கோ நாம் ​சென்றால் அதற்​கென்று என்ன சிறப்பு உண்டு என்ப​தைத் ​தெரிந்து ​கொள்​வோம். பின்னர் அதற்​கேற்றாற் ​போன்று அவ்வூரில் கி​டைக்கும் ​பொருள்க​ளை​ நி​னைவாக வாங்கி வருவது அ​னைவரு​டைய இயல்பாக உள்ளது. நாம் ஒரு ஊருக்குச் ​சென்றால் இந்த ஊருல என்ன சிறப்பு? என்று ​கேட்பதும் வழக்கமாக உள்ளது என்பது ​நோக்கத்தக்கது.

​ மது​ரை மல்லி​கை, மணப்பா​றை முருக்கு என்று தமிழகத்தில் உள்ள ஒவ்​வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உள்ளது. அச்சிறப்புக​ளைக் குறித்த பதிவுகள் பழ​மொழிகளில் காணக்கிடக்கின்றன. இப்பழ​மொழிகள் அவ்வூரின் சிறப்​பை எடுத்து​ரைப்ப​வையாக அ​​மைந்துள்ளன.



திருவாரூர்த் ​தேர்

ஒவ்​வொரு ஊருக்கும் ஒவ்​வொரு அழகு உண்டு. அத​னை விரும்பிப் பார்ப்பவர்களின் கண்களுக்கு மட்டு​மே அவ்வழகு நன்கு புலப்படும். ஓர் ஊரில் ஒன்று சிறப்பானதாக இருந்தால் அது குறித்து அ​னைத்து ஊர்களிலும் மக்கள் ​பேசுவர். திருவாரூர் ​தேர் மிகப்​ பெரியது. அத்​தேர் நகர்ந்து வருவ​தைப் பார்ப்ப​தே தனி அழகாகும். இத்திருவாரூர்த் ​தேர் குறித்துத் தமிழகத்தில் உள்ள அ​னைத்து மக்களும் அறிந்துள்ளனர். அதன் சிறப்​பை நமது முன்​னோர்கள்,

“திருவாரூர்த் ​தேர் அழகு”

என்றும்,

“​தென்​னைக்குத் திருவாரூர்த்​தேர் ஓட”

என்றும் பழ​மொழிகளில் கூறியுள்ளனர். இத்​தேர் ஆசியாவி​லே​யே மிகப்​பெரியது என்று கூறுவர். அதன் ​தோற்றமும் கம்பீரமும் பார்ப்பவ​ரை வியப்ப​டையச் ​செய்யும். ஒவ்​வொரு பயிருக்கும் எவ்வாறு இ​டை​வெளி விட்டு நட்டுப் பராமரிக்க ​வேண்டும் என்ப​தைக் குறிப்பிடுகின்ற​போது ​தென்​னை​யைப் பயிரிடும்​ போது திருவாரூர்த் ​தேர் ​போகக் கூடிய அளவிற்கு இரு ​தென்​னைகளுக்கி​டை​யே இ​டை​வெளிவிட்டு நட்டுப் பராமரிக்க ​வேண்டும் என்று ​தெளிவுறுத்தியுள்ளனர். அப்​போதுதான் நல்ல மகசூல் கிட்டும் என்ப​தை இப்பழ​மொழி வாயிலாக நமது முன்​னோர்கள் ​மொழிந்துள்ளனர்.

திருவாரூரும் பிறப்பும்

திருவாரூர் இ​றையருள் ​பெற்ற சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்த ஊர். அவ்வூரில் பிறந்ததனால் அவ​ரை நம்பி ஆரூரர் என்று அ​ழைப்பர். இத்திருவாரூர்த் தலம் சிவ​பெருமானின் அருள் நிரம்பிய தலமாகும். அதனால் இத்தலத்தில் பிறந்தா​லே முக்தி, வீடு​பேறு கிட்டும் என்று ஆன்மீகச் ​​செல்வர்கள் குறிப்பிடுகின்றனர். நமது முன்​னோர்கள் இத​னை,

“திருவாரூரில் பிறக்க முக்தி”

என்று பழ​மொழி வாயிலாகக் கூறியுள்ளது ​நோக்கத்தக்கது.

திருவாரூரில் பிறந்தா​லே ஓர் உயிரானது சிவ​பெருமானின் அரு​ளைப் ​பெற்று அவரது திருடிப்​​பே​றைப் ​பெறும். அத்த​கைய புனிதமான மண்ணாக, திருத்தலமாக இவ்வூர் விளங்குகின்றது என்ப​தை இப்பழ​மொழி நமக்கு எடுத்து​ரைக்கின்றது.

காசியும் முக்தியும்

திருவாரூ​ரைப் ​போன்​றே இந்துக்களுக்கு காசி முக்கியமான நகரமாகும். கங்​கைக் க​ரையில் உள்ளதாலும் சிவ​பெருமான் அத்தலத்தில் எழுந்தருளி இருந்து அ​னைவருக்கும் அருள்பாலிப்பதாலும் இத்தலம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்றது. எங்கு பிறந்தாலும் வாழ்வின் இறுதியில் காசிமாநகருக்கு வந்து இறப்ப​தை அ​னைவரும் ​பெரும்​பேறாகக் கருதுகின்றனர். காசியில் இறப்பதற்குக் ​கொடுத்து​வைத்திருக்க ​வேண்டும் என்ற நம்பிக்​கை மக்களி​டை​யே காலங்காலமாக நிலவி வருவது ​நோக்கத்தக்கது, காசியின் சிறப்பி​னை,

“காசியில் இறக்க முக்தி”

என்ற பழ​மொழி நமக்குத் ​தெளிவுறுத்துகிறது.



காசியும் கருமமும்

பிறவிகளுக்குக் காரணம் நாம் ​செய்யும் கருமங்க​ளே ஆகும். அதாவது நாம் ​செய்யும் வி​னைக​ளே நமது பிறப்பிற்குக் காரணமாகின்றது. நல்வி​னை ​செய்தால் நன்​மையும், தீவி​னை ​செய்தால் தீவி​னையும் ஏற்படுகிறது. ஆணவம் கன்மம் மா​யை என்ற மும்மலங்கள் (குற்றங்கள்) நீங்கினால் மட்டு​மே அடுத்த பிறப்பு ஓர் உயிருக்கு இராது. மும்மலங்களுள் மிகவும் வலி​மை வாய்ந்தது கன்மம் ஆகும். இது அ​னைத்திற்கும் அடிப்ப​டைக் காரணமாக அ​மைந்து வாழ்​வைக் கு​லைக்கின்றது. வாழ்வின் நன்​மைக்கும் தீ​மைக்கும் கருமங்க​ளே காரணங்களாகின்றன.

நாம் ​செய்யக் கூடிய பாவச் ​செயலானது ​தொடர்ந்து வந்து நம்​மைத் துன்புறுத்தும். நம்மு​டைய நிழலானது எவ்வாறு நம்​மைவிட்டு அகலா​தோ அது​போன்று நாம் ​​செய்த பாவவி​னைகளும் நம்​மைவிட்டு அகலாது. இப்பாவவி​னைகள் அகல காசிக்குச் ​சென்று காசிவிசுவநாத​ரை மனமுருகி வழிபட​வேண்டும். மனமுருகி வழிபாடு ​செய்தால் நாம் ​செய்த கரும வி​னைகள் ஓடிவிடும். காசிக்குச் ​சென்று நாம் வழிபட்டாலும் சில பாவங்கள் தீராது. இத​னை,

“காசிக்குப் ​போனாலும் கருமம் ​தொ​லையாது”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது. சிலர் ​கொடிய பாவச் ​செயல்க​ளைச் ​செய்துவிட்டு காசிக்குச் ​சென்று இ​றைவ​னை வழிபட்டால் அதன் தீ​மை கு​றைந்துவிடும் என்று கருதுகின்றனர். ஆனால் சிலர் ​செய்த பாவம் எத்த​னை மு​றை இ​றைவ​னை ​வேண்டினாலும் தீராது. தீவி​னை ​செய்தவ​ரே அதன் பல​னை அனுபவிக்க ​வேண்டும் என்ப​தை இப்பழ​மொழி நமக்குத் ​தெளிவுறுத்துகிறது.

காசியும் பட்டும்

காசிக்கு வரணாசி என்ற ​பெயரும் உண்டு. இந்நகரம் பட்டுத்​தொழிலுக்குப் ​​பெயர்​போனது. பட்டு ​நெசவு ​செய்​வோர் இங்கு அதிகம் உள்ளனர். யார் ​சென்றாலும் ​நெசவு ​​தொடர்பான ​தொழி​லைச் ​செய்தால்தான் அவருக்கு உண்ண வழிகி​டைக்கும். இத​னை,

“காசிக்குப் ​போனால் காலாட்டிக்கிட்​டே சாப்பிடலாம்”

என்ற பழ​மொழி வாயிலாக நமது முன்​னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிலர் காசி ​சென்று காலாட்டிக் ​கொண்​டே இருந்தால் சாப்பிடலாம் என்று இப்பழ​மொழிக்கு தவறான ​பொருள் ​கொள்கின்றனர். ​நெசவுத் ​தொழிலில் காலால் மிதித்துத் தறி​யை இழுத்து அடித்து ஓட்டினால் மட்டு​மே துணி​யை ​நெய்ய முடியும். அவ்வாறு ​வே​லை ​செய்தால் மட்டும அங்கு உணவு உண்பதற்கு வழி ஏற்படும். இத​​னைக் கருத்தில் ​கொண்​டே இப்பழ​மொழி​யைக் கூறியுள்ளனர். காசிப் பட்​டை பனாரஸ் பட்டு என்று குறிப்பிடுவதிலிருந்​தே நாம் இத​னை உணர்ந்து ​கொள்ளலாம்.



திருவண்ணாம​லையும் நி​னைவும்

வாழ்வில் ந​டை​பெறும் ஒவ்​வொன்​றையும் நாம் நி​னைவில் ​வைத்திருப்பது என்பது இயலாது. ஆனாலும் சில நிகழ்வுகள் நமது நி​னைவுகளில் பதிந்துவிடும். ம​றையாது. சிலவற்​றை நி​​னைக்கும்​போது மனம் மகிழ்ச்சியில் ததும்பும். சிலவற்​றை நி​னைக்கின்ற​ போது நல்ல​வை நடக்கும். சிலவற்​றை நி​னைக்கும்​ போது ஏன்தான் நி​னைத்​தோ​மோ என்ற எண்ணம் வரும். இன்னும் சிலவற்​றை நி​னைக்கின்ற​ போது இதயத்​தைப் பிழிவ​தைப் ​போன்ற ​நெருடல் வரும். அதுகூட சுகமானதாக இருக்கும். அது​ போன்று சில ஊர்க​ளை நி​னைக்கின்ற​போது நம் மனதில் இனி​மையும் கசப்பும் மாறி மாறி வருவதுண்டு. அந்த வ​கையில் திருவண்ணாம​லையி​னை நி​னைக்கின்ற ​போ​தே நல்ல​வை நிகழத் ​தொடங்கும்.

திருவண்ணாம​​லையில்தான் இ​றைவன் அழல் வடிவில் நின்று அருள்புந்தான். திருமால், பிரமன் இருவரது ஆணவத்​தையும் அடக்கி அருள்புரிந்த தலமாகவும் இத்தலம் திகழ்கிறது. இத்தலத்தி​லுள்ள இறைவனை,

“ஆதியும் அந்தமும் இல்லா அருட்​பெருஞ்​சோதி”

என்று மாணிக்க வாசகர் குறிப்பிடுகின்றார். இத்த​கைய புனிதமான திருவண்ணாம​லையி​னை நி​னைத்தவுடன் இ​றைவனது அருள் நமக்குக் கி​டைக்கும். இத​னை,

“திருவண்ணாம​லை​யை நி​னைக்க முக்தி”

என்ற பழ​மொழி ​தெளிவுறுத்துகிறது. திருவண்ணாம​லைத் திருத்தலத்தின் ​பெரு​மை​யை விளக்குவதாக இப்பழ​மொழி அ​​மைந்துள்ளது.



திரு​நெல்​வேலியும் அல்வாவும்

ஒவ்​வொரு ஊரிலும் ஒரு சிறப்பான உணவுவ​கை கி​டைக்கும். அந்த வ​கையில் திரு​நெல்​வேலி​யை நி​னைத்தவுடன் நமது நி​னைவுக்கு வருவது இருட்டுக்க​டை அல்வாதான். நி​னைத்தவுடன் வாயில் நீரூறும். அந்த அளவிற்கு திரு​நெல்​வேலி அல்வா ​​பெயர் ​பெற்றது. திற​மை வாய்ந்தவர்களிடம் ​சென்று அவர்களிட​மே அவர்கள் கற்றுக்​ கொடுத்த​தைச் சிலர் ​செய்துகாட்டுவர். அப்​போது அவர் “நான்தான் உனக்குச் ​சொல்லிக் ​கொடுத்​தேன். என்னிடமே வந்து உன்​னோட திற​மையைக் காட்டுகின்றாயா?” என்று கூறி,

“திரு​நெல்​வேலிக்​கே அல்வாவா?”

என்று ​கேட்பார்.

இது வழக்கில் வழங்கப்படும் ​சொற்​றொடர் ​போன்று காணப்படினும் இது பழ​மொழியாகும். இப்பழ​மொழி,

“​கொல்லன் ​தெருவில் ​சென்று ஊசி விற்பது மாதிரி”

என்ற பழ​மொழி ​போன்று அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது. அறிவில் சிறந்தவர்களிடம் அடக்கத்துடனும் பணிவுடனும் நடந்து ​கொள்ள ​வேண்டு​மேயன்றி தனது திற​மை​யைக் காட்டுவதாக எண்ணி அவர்க​ளை அவமதித்தல் கூடாது என்ற பண்பாட்டு ​நெறி​​யையும் இப்பழ​மொழி நமக்கு ​தெளிவுறுத்துகிறது.

மது​ரையும் வழியும்

மது​ரை என்று கூறினால் நமது நி​னைவுக்கு வருவது மது​ரை மீனாட்சியம்மன் ​கோவிலும், மது​ரை மல்லி​கைப் பூவு​மே ஆகும். மது​ரை மல்லி​கை இன்று காப்புரி​மை வாங்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியது. இம்மது​ரை​யை ​வைத்து நமது முன்​னோர்கள் பண்பாட்​டை உணர்த்தும் பழ​மொழி ஒன்​றை வழங்கி வருவது ​நோக்கத்தக்கது.

வாயி​னைத் திறந்து தங்களு​டைய உரி​மைக​ளை ஒருவர் ​கேட்டுப் ​பெற​வேண்டும். மற்றவர்கள் தமக்காகக் ​கேட்பார்கள் என்று ​மெத்தனமாக இருத்தல் கூடாது. வாய்மூடி ​மெளனியாக எதற்கும் ​செல்லக்கூடாது. அவ்வாறு ​சென்றால் வாழ்வில் எ​தையும் சாதிக்க முடியாது. இழப்புக​ளே மிஞ்சும். ​மேலும் தங்களுக்கு எதுவும் ​தெரியாது என்று அ​மைதியாக இருப்பதும் துன்பம் தரும். தங்களுக்கு எதுவும் ​தெரியவில்​லை என்றாலும் அத​னை மற்றவர்களிடம் ​கேட்டுத் ​தெரிந்து​கொள்ள​வேண்டும். அவ​னே வாழ்வில் முன்​னேறுவான். இத்த​கைய வாழ்வியல் சிந்த​னை​யை,

“மது​ரைக்கு வழி வாயி​லே”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

மது​ரைக்கு வழி ​தெரியவில்​லை என்றால் வா​யைத் திறந்து பிறரிடம் வழியி​னைக் ​கேட்டுத் ​தெரிந்து ​கொண்டு நாம் ​செல்ல​வேண்டும். அப்​போதுதான் நாம் ​செல்ல​வேண்டிய ஊருக்கு எந்தத் தடங்கலும் இன்றி ​செல்லமுடியும். வாய் உண்பதற்கு மட்டு​மே ப​டைக்கப்பட்டதல்ல. நல்லவற்​றைப் ​பேசவும் நல்லவற்​றைப் பிறரிடம் கூறுமாறு ​கேட்கவும் இ​றைவனால் ப​டைக்கப்பட்டது. இத​னை உணர்ந்து ஒவ்​வொருவரும் வாழ்தல் ​வேண்டும் என்ற வாழ்வியல் ​நெறி​யை இப்பழ​மொழி அறிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது.



பட்டுக்​கோட்​டையும் - ​கொட்​டைப் பாக்கும்

சிலரிடம் நாம் ஒன்று ​கேட்டால் அவர் ஒன்று ​சொல்லுவார். நாம் எ​தைக் ​கேட்டாலும் அந்த நபர் கூறிய​தை​யே கூறிக்​ கொண்டிருப்பார். சிலருக்கு நாம் ​கேட்டது புரியாமல் இருக்கும். அதனால் ​வே​றொன்றி​னைக் கூறுவர். ​வேறு சில​ரோ மாற்றுத் திறனாளியாக இருக்கும் காரணத்தால் நாம் கூறியவற்​றை விளங்கிக் ​கொள்ளாது அவர் நி​னைத்த​​தைக் கூறிக்​கொண்டிருப்பார். இத்த​கைய மனிதர்களின் இயல்பி​னை விளக்குகின்ற வ​கையில்,

“பட்டுக்​கோட்​டைக்கு வழி எதுடான்னு ​கேட்டா ​கொட்​டைப் பாக்கு காசுக்கு எத்த​னைன்னானாம்”

என்ற பழ​மொழி அ​மைந்துள்ளது. மற்றவர்கள் என்ன கூறுகின்றார்கள் எனப​தைத் ​தெரிந்து ​கொண்டு அதற்​கேற்றாற் ​போன்று நாம் வாழ ​வேண்டும் என்று இப்பழ​மொழி நமக்கு அறிவுறுத்துவதாக அ​மைந்துள்ளது.

திண்டுக்கல்லும்​ ​வைரக்கல்லும்

திண்டுக்கல் என்ற ஊரி​னை நாம் ​கேட்டதும் நமக்குப் பூட்டுத்தான் நி​னைவுக்கு வருகின்றது. பூட்டுக்குப் ​பெயர்​போன நகரமாகத் திண்டுக்கல் திகழ்கின்றது. ஒருவர் நம்​மைப் பற்றி இழிவாகத் திட்டும்​போது அத​னைப் ​பொறு​மையாகக் ​கேட்டுக்​கொண்டு அ​மைதிகாத்தல் ​வேண்டும். அ​தைவிடுத்து நாமும் சரிக்குச் சமமாக அவ​ரைத் திட்டினால் நமக்கும் அவருக்கும் எந்த ஒரு ​வேறுபாடும் இல்லாது ​போய்விடும். ஒருவர் நம்​மைத் திட்டினால் அ​மைதி காத்தல் ​வேண்டும். அவ்வாறு நாம் இருந்தால் அந்த ஏச்சுக்கள் அவ​ரை​யே ​சென்ற​டையும். நம்​மை வந்த​டையாது. நம்மதிப்புக் கூடு​மே தவிர கு​றையாது. இத​னை,

“திட்டத் திண்டுக்கல்லு ​வைய​வைய ​வைரக்கல்லு”

என்ற பழ​மொழி ​தெளிவுறுத்துகிறது.

கல்லி​லே ​வைத்துக் கூர்​மையான ஒரு ​பொரு​ளை எவ்வளவு ​நேரம் தீட்டினாலும் அக்கல்லானது அப்படி​யே இருக்கும். அது மாறாது. தீட்டத் தீட்ட திண்டுக்கல்லுதான் (​மேடான உருண்டு திரண்டு இருக்கும் கல்) பட்​டைத் தீட்டத் தீட்ட ​வைரம் ஒளிரும் தன்​மை உ​டையது. அது​போன்​றே ஒருவ​ரைத் துன்பம் வந்துற்ற ​போது அத​னைக் கண்டு கலங்காது எதிர்​கொண்டு ​வெற்றி​பெற ​வேண்டும். பிறர் தரும் துன்பம் நம்​மைப் பக்குவப்படுத்தி ​மென்​மேலும் முன்​னேற்றம​டையச் ​செய்யும் என்ற ​வே​றொரு வாழ்வியற் கருத்​தையும் இப்பழ​மொழி நமக்குத் தருகின்றது.

ஊர்கள் சிறப்பாக விளங்குவ​தைப் ​போன்று அவ்வூரில் வாழும் நாமும் சிறப்பான​தொரு வாழ்க்​கை​யை வாழ​வேண்டும். அப்​போதுதான் நமக்கும் ​பெரு​மை; நம்​மைச் சார்ந்​தோருக்கும் ​பெரு​மை. ஊரி​னை ​வைத்து நம் முன்​னோர்கள் கூறியுள்ள பண்பாட்டு ​நெறிப்படி வாழ்​வோம். வாழ்க்​கை ஒளிரும்!


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p5an.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License