-
வால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீ மத்
ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும் , சிற்சில ஸர்க்கங்களை பாராயணம் செய்தால்
ஒவ்வொரு காரியமும் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க பாலகாண்டத்தில் சீதா கல்யாணத்தை காலை,
மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
-
குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக பாலகாண்டத்தில் புத்திர காமேஷ்டி
பாயாஸதான பாராயண கட்டத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
-
சுகப்பிரசவத்திற்கு பாலகாண்டத்தில் ஸ்ரீ ராமாவதாரத்தை காலையில் பாராயணம் செய்ய
வேண்டும்.
-
கெட்ட வழியில் செல்லும் பிள்ளை திருந்தி வாழ அயோத்யா காண்டத்தில் கௌசல்யா ராமா
ஸம்வாதத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
-
அரச காரியங்களiல் வெற்றி கிட்ட அயோத்யா காண்டத்தில் ராஜதர்மங்களை காலையில்
பாராயணம் செய்ய வேண்டும்.
-
ஏவல், பில்லி, பேய், பிசாசு நீங்க சுந்தர காண்டத்தில் லங்கா விஜயத்தை மாலையில்
பாராயணம் செய்ய வேண்டும்.
-
பித்தம் தெளிய சுந்தர காண்டத்தில் ஹுனுமத் சிந்தையை காலையில் பாராயணம் செய்ய
வேண்டும்.
-
தரித்திரம் நீங்க சுந்தர காண்டத்தில் சீதா தரிசனத்தை காலையில் பாராயணம் செய்ய
வேண்டும்.
-
பிரிந்தவர் சேர சுந்தர காண்டத்தில் அங்குலீயக பிரதானத்தை காலை, மாலை இரு
வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
-
கெட்ட கனவுகள் வராமலிருக்க சுந்தர காண்டத்தில் திரிஜடை ஸ்வப்னத்தை காலையில்
பாராயணம் செய்ய வேண்டும்.
-
தெய்வ குற்றம் நீங்க சுந்தர காண்டத்தில் காகாசுர விருத்தாந்தத்தை காலையில்
பாராயணம் செய்ய வேண்டும்.
-
ஆபத்து நீங்க யுத்த காண்டத்தில் வீபிஷண சரணாகதியை காலையில் பாராயணம் செய்ய
வேண்டும்.
-
சிறை பயம் நீங்க யுத்த காண்டத்தில் வீபிஷணன் சீதையை ஸ்ரீ ராமரிடம் சேர்த்ததை
காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
-
மறு பிறவியில் சகல சுகம் பெற யுத்த காண்டத்தில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை
காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
-
குஷ்டம் போன்ற நோய்கள் தீர யுத்த காண்டத்தில் ராவண கிரீட பங்கத்தை காலை, மாலை
இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
-
துன்பம் நீங்க யுத்த காண்டத்தில் சீதா ஆஞ்சநேய ஸம்வாதத்தை காலையில் பாராயணம்
செய்ய வேண்டும்.
-
மோட்ச பலன் கிடைக்க ஆரண்ய காண்டத்தில் ஜடாயு மோட்சத்தை காலையில் பாராயணம் செய்ய
வேண்டும்.
-
தொழிலில் இலாபம் அடைய அயோத்யா காண்டத்தில் யாத்ரா தானத்தை காலை, மதியம், இரவு
என்று மூன்று வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.