|
இந்து மதம்
சில
ஆன்மீகக் குறிப்புகள்

-
விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயகர்
சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.)
-
பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம்,
கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
-
விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
-
பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
-
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி
தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே
பில்வார்ச்சனை செய்யலாம்.
-
துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக
உபயோகப்படுத்தக் கூடாது.
-
மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ்
இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
-
வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை
உபயோகிக்கக் கூடாது.
-
அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே
உபயோகப்படுத்த வேண்டும்.
-
ஒரு முறை இறைவன் திருவடிகளில்
சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது.
பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.
-
தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை
தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.
-
வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு
சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி
உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது
ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.
-
சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின்
மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
-
மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம்,
துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
-
முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை
பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
-
துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம்,
செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி,
நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.
-
பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை,
எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
-
திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும்,
பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத்
தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
-
அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம்,
நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும்.
திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
-
குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக்
குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
-
பெரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு
அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
-
கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு
போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
-
பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்,
தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.
நன்றி-
ஆர்.பி.வி.எஸ்.மணியன் தொகுத்த "எளிய ஆகம பூஜா முறை"

முந்தைய ஆன்மீகக் கருத்துக்கள் காண

|