|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
இந்து மதம் அபிஷேகங்களால் வரும் பலன்கள்
நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே... சந்தனாதித் தைலம் - சுகம்தரும். திருமஞ்சனப்பொடி- கடன், நோய், தீரும். பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும். பால் - நீண்ட ஆயுள் கிட்டும். தயிர் - நன்மக்கட்பேறு கிடைக்கம். நெய் - வீடு பேறு அடையலாம். தேன் - சுகம்தரும், குரல் இனிமை தரும். கரும்பின் சாறு - நல்ல உடலைப் பெறலாம். இளநீர் - போகம் அளிக்கும். எலுமிச்சம் பழம் - பகைமையை அழிக்கும். விபூதி - போகமும், மோட்சமும் நல்கும். சந்தனக் குழம்பு, பன்னீர் - திருமகள் வருவாள். வலம்புரிச் சங்கு - தீவினை நீக்கும், நல்வினை ஆக்கும். நெல், எண்ணை - விஷ்சுரம் நிவர்த்தி. நீர் - சாந்தி உண்டாகும். வாழைப்பழம் - பயிர் விருத்தி ஆகும். வெல்லம் - துக்க நிவர்த்தி. சர்க்கரை - சத்ரு நாசம். அன்னம் - சகல பாக்கியங்களும் உண்டாகும். மாம்பழம் - வெற்றி கிடைக்கும். சொர்ணாபிஷேகம் - இலாபம் தரும். கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும். பால் பஞ்சாமிர்தம் - சம்பத்து நல்கும். -சுபாஷினி முருகன்
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.