|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
| 1 | ||
|
அறிவிப்புகள் அறிவிப்புகள் அறிவிப்புகள் அறிவிப்புகள் அறிவிப்புகள்
இலவசமாக அறிவிக்கலாம்! தமிழ் கருத்தரங்கம், கவியரங்கம், தமிழ்ச் சங்க கூட்டங்கள், தமிழ் நூல், குறும்படம் மற்றும் ஆவணப்பட வெளியீடுகள் என்று தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் இங்கு வெளியிடப்படும். மேலும் தமிழ் இதழியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பாராட்டு நிகழ்ச்சிகள் என்று அனைத்து விதமான அறிவிப்புகளும் இடம் பெற உள்ளது. மேற்காணும் அனைத்து விதமான நிகழ்ச்சிகள் உலகில் எங்கு நடக்கவிருந்தாலும் அது குறித்த செய்திகளை இந்த அறிவிப்புகள் பகுதிக்கு அனுப்பி வைக்கலாம். இந்த அறிவிப்புகள் முற்றிலும் இலவசமானது. இந்தப் பகுதியில் தமிழ் ஆர்வலர்களது இழப்புகள் கூட படத்துடன் வெளியிடப்படும். தமிழ் ஆர்வலர்கள் இழப்பிற்கு செய்தி அனுப்புபவர்கள் தவறுகள் ஏதும் நிகழ்ந்திடாதவாறு முழு விபரத்துடன் அனுப்ப வேண்டும். அனைத்து அறிவிப்புகளுக்கும் அந்த செய்திகள் அனுப்புபவர்கள்தான் முழுப் பொறுப்பு என்பதுடன் இதில் முத்துக்கமலம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்புகள் பகுதிக்கு உண்மைத் தகவல்களை மட்டும் அனுப்பி உதவிட வேண்டுகிறோம். 1முதல்14 -ம் தேதி வரையிலான அறிவிப்பு செய்திகள் 28ம் தேதிக்கு முன்பாகவும் 15 முதல் 31 -ம் தேதி வரையிலான அறிவிப்பு செய்திகள் 12ம் தேதிக்கு முன்பாகவும் அனுப்பப் பட்டால் மட்டுமே அறிவிப்பு செய்திகள் வெளியிட இயலும் என்பதால் குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி பயன்பெற வேண்டுகிறோம். -ஆசிரியர் குழுவினர்.
அறிவிப்புக்கான செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
அறிவிப்புகள் கீழே... |
||
|
|
||
| as | ||
|
|
||
| as | ||
|
அகில இந்திய ஆன்மீக மாநாடு மற்றும் 39-வது கல்கி ஜெயந்தி விழா
இடம்:
மனுஜோதி
ஆசிரம தியான மையம் ( சத்திய நகரம், முக்கூடல் சமீபம், திருநெல்வேலி
மாவட்டம்.) நாட்கள்:
15-07-2008 முதல் 22-07-2008 வரை பேசுபவர்கள்:
தேவாசீர்
லாறியின் குமாரர்கள்
மற்றும் பலர் குறிப்பு:
இவ்விழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் வருகையை முன்னதாக
அஞ்சல் அட்டை மூலம் தெரிவித்தால் தாங்கள் தங்குவதற்கான இடம், உணவு இலவசமாக செய்து
தரப்படும். முகவரி:
மனுஜோதி
ஆசிரமம்,
ஓடைமறிச்சான் அஞ்சல், பஸ்ரூட்:
திருநெல்வேலி
சந்திப்பு
பேருந்து நிலையத்திலிருந்து
மனுஜோதி
ஆசிரமத்திற்கு (பஸ் எண்: 34D,
34G ) பஸ் வசதி உள்ளது.
தகவல்: தூத்துக்குடி
பாலு.
|
||
| அச் | ||
|
பிரம்மா-நூல் வெளியீடு
இடம்:
உமறுப்புலவர் தமிழ்மொழி மையம், சிங்கப்பூர். நாள்: 20-07-08, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி. தமிழ் வாழ்த்து: ஈழத்துத்தாய் வள்ளியம்மை சுப்பிரமணியம். வரவேற்புரை: தன்முனைப்புப் பேச்சாளர் கண்டனூர் சசிகுமார். வாழ்த்துப்பா: கவிஞர் சின்னபாரதி. விழாத்தலைமை: திருமதி புஷ்பலதா கதிரவேலு, சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய அதிகாரி. இவர்களைப் பற்றி- இவர்கள்:
கவிஞர். கோட்டை பிரபு
- சொல்லருவி பெரி. சிவக்குமார் நூல் வெளியீடு:
தமிழ்த்தொண்டர்
போப்ராஜ் என்கிற நாகை தங்கராஜ் முதன்மைப் பிரதி பெறுபவர்:
தமிழ் நெஞ்சர்
என்.ஆர்.கோவிந்தன்BBM
சிறப்புரை: சொல்லின் செல்வர் முனைவர் இரத்தின வெங்கடேசன் நிகழ்ச்சி நெறியாளர்: கவிதை நதி கவிஞர் ந.வீ.விஜயபாரதி நன்றியுரை:
கவிஞர். (நீதிபதி)
பாண்டித்துரை
பிரம்மாக்களுடன்
இணைந்து அழைப்பவர்கள்:
ந.வீ.விஜயபாரதி, கண்டனூர்
சசிகுமார், கவிஞர் சின்னபாரதி, அறிவுநிதி, மணிசரவணன்.
தகவல்: பாண்டித்துரை,
சிங்கப்பூர்.
|
||
| as | ||
|
தமிழ் இணைய வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்
முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியராக இருக்கும் நான் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் மூலம் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் " ஆய்வியல் நிறைஞர்" (M.Phil.,) பட்டத்திற்காக "தமிழ் இணையச் சிற்றிதழ்கள்-ஓர் ஆய்வு" எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் ஆய்வு செய்து வருகிறேன். இந்த ஆய்வுப்பணிக்கு தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தின் இணைப் பேராசிரியரும் "தமிழ்த்திணை" இணைய இதழின் ஆசிரியருமான, முனைவர். தி. நெடுஞ்செழியன் அவர்கள் வழிகாட்டுனராக உதவிட முன் வந்துள்ளார். இந்த ஆய்வுப்பணிக்கு இணையதள வாசகர்களிடமிருந்து சில தகவல்கள் எனக்குத் தேவையாக இருப்பதால் கீழ்காணும் பட்டியலில் உள்ள கேள்விக்கான விடையைப் பூர்த்தி செய்து கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறேன். தங்களுக்குத் தெரிந்த தமிழ் இணைய வாசக நண்பர்களுக்கும் இதை அனுப்பி அவர்களையும் பதில் அனுப்பி உதவிடச் செய்திடவும் வேண்டுகிறேன். நன்றி. -தேனி. எம். சுப்பிரமணி
கேள்விப்பட்டியல் 1. இணையதள வாசகரின் பெயர்: 2. முகவரி: 3. கணிப்பொறி குறித்த அறிவு: 4. தாங்கள் விரும்பிப் பார்க்கும் தமிழ் இணைய இதழ் / தமிழ் வலைப்பூக்கள் அவற்றின் தன்மை ( சமூகம் / இலக்கியம் / நகைச்சுவை / ஆன்மீகம் / பகுத்தறிவு / சமையல் / ஜோதிடம் / பல்சுவை... போன்று எது என்பதுடன் அதனுடைய இணைய முகவரியும் குறிப்பிடவும்) 5. தமிழ் இணைய தளங்கள் பற்றி எப்படி அறிந்தீர்கள்? எத்தனை ஆண்டுகளாக தமிழ் இணைய தளங்களை வாசித்து வருகிறீர்கள்? 6. தமிழ் இணைய இதழ் வாசிப்பதில் தங்களுக்குள்ள விருப்பங்கள்-வெறுப்புகள் மற்றும் அதற்கான காரணங்களைக் குறிப்பிடுங்கள்: 7. தமிழ் அச்சுப் பத்திரிகைகளை விட தமிழ் இணைய இதழ்கள் சிறப்பானது என்று கருதுகிறீர்களா? ஏன்? 8. தமிழ் இணைய இதழ்களில் இடம்பெறும் விளம்பரங்கள் குறித்த தங்கள் கருத்து: 9. தமிழ் இணைய இதழ்களை வாசிப்பதுடன் மட்டும் இருந்து விடுகிறீர்களா? அல்லது தாங்களும் இதழ்களுக்கு படைப்புகள் அனுப்பி வைக்கிறீர்களா? 10. தமிழ் இணைய இதழ்களில் பிரபலமானவர்களது படைப்புகள் இல்லாமல் புதியவர்கள் படைப்புகள் அதிக அளவில் இடம் பெறுவது குறித்து தங்கள் கருத்து: 11. தமிழ் இணைய இதழ் / தமிழ் வலைப்பூக்கள் அதிகரித்து வருவது குறித்து தங்கள் கருத்து: |
||
|
உங்கள் தேடுதலை
இங்கே துவங்குங்கள் |
||
| முகப்பு | ||
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.