|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற |
|
a |
|
கட்டுரை-10 பொங்குக... தமிழுணர்வுப் பொங்கல்..! -ஆல்பர்ட், அமெரிக்கா.
இவர்கள் "சேற்றில்" கை வைத்தால்தான் நாம் "சோற்றில்"
கை வைக்க முடியும். யார் இவர்கள்? உழவர் பெருமக்கள். உழவர்கள் - தமிழர்கள்;
அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள் தான்...
பொங்கல் பண்டிகை. இந்தத் தமிழர் திருநாள்... பொங்கல் திருநாள்... உலகெங்கும்
உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா! .தை மாதம் கொண்டாடப்படுவதால் "தைத் திருநாள்" என்றும் அழைக்கிறோம். உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி, கண்ணின் கருமணி போல பாதுகாக்கின்ற உழவனின் இந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால்தான் அவன் மடியும் கனக்கும்; மனமும் நிறைந்திருக்கும். அதனால்தான் மகன், மகள் திருமணம் அல்லது சீர்செனத்தியோடு புத்தாடைகள் வாங்குவதையே உழவன் ஒத்திப் போட்டுக் கொள்வது வழக்கம்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியே இதனால்
ஏற்பட்டதுதானே! "பரிதியே பொருள் யாவிற்கும் முதலே" என்கிற முறுக்கு மீசைகாரக் கவிஞன் பாரதியின் கதிரவன் வணக்கப் பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனை முதன்மைப்படுத்தி வணங்குதல் கடைப்பிடிக்கப் படுகிறது. எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்குத் துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ஆண்டில் நல்ல விளைச்சலைத் தர வேண்டியும் பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள்.
கதிரவன் கணக்கு...
எண்சாண் உடம்பும் பூமித் தரையில் பட விழுந்து
பரிதியின் ஆசி பெறுவர். அதன் பின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு இவர்களும்,
இவர்களுக்கு அவர்களும் பொங்கல் வழங்கி உண்டு மகிழ்வார்கள்!
மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் " உழவர்களின்
உற்ற நண்பர்கள் கால்நடைகள் தான். நிலத்தை உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது
சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, (வீட்டுக்கு வெளிச்சம் தர
பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து) எண்ணற்ற விதங்களில் பயன்படும் கால்நடைகளை
கெளரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது. காணும் (கன்னிப்) பொங்கல்
நான்காவது நாளைக் காணும் பொங்கலாக அனுசரிப்பார்கள். காணும்
பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும்
பெரியோர் ஆசி பெறுதல் இந் நாளில்தான். தெருக்களில் ஒலி பெருக்கிகள் காதைத்
துளைக்கும். அந்த நற்பணி மன்றம், இந்த நல சங்கம், ரசிகர் மன்றங்கள் என்று போட்டி
போட்டுக் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல்,
வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
சண்டித்தனம் செய்யும் காளைகளின் கொட்டத்தை அடக்கி வெற்றி வாகை சூடுபவர்களுக்கு பரிசுகள் பண முடிப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடை பெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து குவிந்து விடுவார்கள். இலட்சக் கணக்கானவர்கள் திரண்டு வந்து இந்த ஜல்லிக்கட்டைப் பார்ப்பார்கள். இந்த ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு வருடமும் அடங்காத காளைகள் வீரர்களைப் படு மோசமாக காயப் படுத்தி விடும். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் வீர சாகசத்துடன் காளையை மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கி வெற்றி வாகை சூடுவார்கள். அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் கோவை, கம்பம், காங்கேயம், இராமாநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் போன்ற இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டு வருவார்கள். இத்தகைய காளைகள் விவசாயத்திற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்ப்பார்கள். இது தமிழகத்தில் மிகப் பழமையான வீர விளையாட்டாகும். மன்னர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது. (ஆனால் இப்போது மாப்பிள்ளை ஜல்லிக்கட்டுக்கு போறார்னு தெரிஞ்சா, இந்த இடம் நம்ம புள்ளைக்கு ஒத்து வராது என்று ஒதுங்கி விடுவார்கள். மாடு முட்டி குடல் சரிஞ்சு செத்துப் போனா மக வாழாவெட்டியாப் போயிருவாள் என்று மகளைப் பெற்ற மகராசர்கள் சிந்தனைதான் காரணம் )
இது
தவிர "ரேக்ளா ரேஸ்" எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம்
கூட பல இடங்களில் நடை பெறும். இதற்கும் ஏராளமான கூட்டம் கூடும். எந்த வண்டி
ஜெயிக்கும் என்று வேடிக்கை பார்ப்பவர்கள் பந்தயம் கட்டுவது வழக்கம். சேவல்கள் எகிறி எகிறி சண்டை போட்டுக் கொள்ளும். சண்டையில் சேவல்களின் காலில் உள்ள கத்தியால் இரண்டுக்கும் காயம் ஏற்படலாம். ஆனால் ஆக்ரோசமான சண்டையில் எதாவது ஒரு சேவல் தலை சாய்ந்துவிடும். ஜெயித்த சேவலுக்குரியவர் தோற்ற சேவலை எடுத்துக் கொள்வார். ஆனால் எந்தச் சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுபவர்கள் கூட்டம் தான் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். இது சில இடங்களில் அடிதடி, கத்திக்குத்து வரை போய் விடுவதும் உண்டு.
இப்படி நடக்கும் இடங்களில் அடுத்த தடவை சாவக்கட்டு கிடையாது என
போலீசார் தடை விதித்து விடுவதும் உண்டு. அவர்களுக்கு 'கடுக்காய்' கொடுத்து
விட்டு வேறு இடத்தில் ரகசியமாக சாவக்கட்டை நடத்துவார்கள். இது ஒரு சூதாட்டம்
போல் நடப்பதால் பெரும்பாலும் கோழிச் சண்டை நடத்த போலீஸ் தடை இருக்கும். அதை
எல்லாம் மீறி சாவக்கட்டு பொங்கல் திருநாளில் தமிழகத்தில் நடந்து வருகிறது.
பொங்கல் திருநாளில் கிராமங்களில் கோழிக் குழம்பு மணக்கிறது என்றால் அது
பெரும்பாலும் சாவக்கட்டில் சாவடிக்கப்பட்ட சேவல் குழம்பு மணமாகத் தானிருக்கும்
என்றால் அது மிகை இல்லை. வார வேலை நாட்களில் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதில்லை. வார இறுதியில் சனி அல்லது ஞாயிறு அன்று அங்கங்கேயுள்ள தமிழ் அமைப்புகள் பொங்கல் விழா என்று நடத்துவார்கள். ஏன் கொண்டாடப்படுகிறது என்றோ அவற்றின் மூலம் என்ன என்று தங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ளச் செய்யவேண்டும் என்பதில் அக்கறை கொள்வதில்லை. இதில் கலந்துகொள்வோர் அவரவர் இல்லங்களிலிருந்து சமையல் செய்து கொண்டுவரும் விதவிதமான பொங்கல் வகைகளோடு மற்ற பதார்த்தங்களோடு தமிழர்கள் ஒன்றுகூடி உணவருந்தி விட்டு சிறுவர் சிறுமியர் கலை நிகழ்ச்சிகள் என்று ஏற்பாடு செய்து மகிழ்கின்றனர். இன்னும் பலர் இந்த நாளில் திரைப்படங்களை திரையிட்டு பார்த்து ரசித்தோ பொழுதைக் கழிக்கின்றனர். நான்கு நாள் நிகழ்வை நான்கு மணி நேர நிகழ்வுகளாக நடத்தி சந்தோஷிக்கின்றனர்.
சில இடங்களில் விதி விலக்காக, பட்டிமண்டபம், அல்லது சிறப்புப்
பேச்சாளர்களைக் கொண்டு உரை நிகழ்த்துவதைக் காண முடிகிறது.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.