|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற |
|
a |
|
கட்டுரை-25 சிங்கப்பூர் கணையாழி விழா' 2007 -பாண்டித்துரை, சிங்கப்பூர்.
சிங்கப்பூரில் தனி ஒரு மனிதனால், பிச்சினிக்காடு இளங்கோவால் ஏழு
ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கவிமாலை அமைப்பு இன்று விருட்சமாக எழுந்து
காடாகியுள்ளது.
துவக்கமாக திருமதி மீரா மன்சூர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, கவிமாலை
அமைப்பின் மூலமாக 5-ம் ஆண்டு கணையாழி -2007 விழா இனிதே துவங்கியது. கண்ணீர் துடைப்போம்
இயலாமை - கவிஞர் கோ.கண்ணன். காயங்களுக்கு மருந்து பூசுவோம்
உற்றுக் கவனி - கவிஞர் சுகுணா பாஸ்கர். பூத்தூவி வரவேற்போம்
நலம் கருதாமல் - கவிஞர் கலையரசி செந்தில் குமார். புன்னகையை புரிய வைப்போம்
இதயக் கதவை -கவிஞர் பாலு மணிமாறன்
இடையிடையே கவிஞர்களின் கவிதையின் செறிவினை தனக்கே உரிய அந்த துள்ளலில் சொல்லிச்
சென்ற கவிஞர் ந.வீ.விசயபாரதியின் சில வரிகள் விழாவின் தொடக்க உரையை "புதிய நிலா" பத்திரிக்கையின் ஆசிரியர் ஜகாங்கீர் அவர்கள் நிகழ்த்தினார். இவரது பேச்சு அனைவரையும் கவரும் ஒரு அம்சம் பல்வேறு கவிதை , கவிஞர் என்று உதாரணப்படுத்தி சிங்கப்பூர் கவிதை உலகத்தரத்துடன் போட்டி போடுகின்றன. அச்சூழலை ஏற்படுத்தியும் இருக்கிறது என்றார்.
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் புதுமைத்தேனீ அன்பழகன் அவர்கள் இந்த
ஆண்டின் கணையாழி விழா நாயகன் எழுத்தாளர் பி.பி.காந்தம் என்றார்.
இந்த ஆண்டின் சிங்கப்பூர் கணையாழி'2007 விருது எழுத்தாளர் பி.பி.காந்தம்
அவர்களுக்கு வழங்கப்பட்டது. யார்
இந்த காந்தம்? அனைவருக்கும் தெரிந்தவராயிருப்பினும் ,தெரியாத ஒரு சிலருக்காக
அவரைப் பற்றிய சிறு குறிப்பை உங்கள் முன்... சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ந.வரபிரசாத் கலந்து கொண்டு சிறப்பித்தார். கவிஞர் மாதங்கி , எழுத்தாளர்கள் சிங்கப்பூர் சித்தார்த்தன், ஜே.எம்.சாலி இளங்கண்ணன், ஜெயந்தி சங்கர், லெட்சுமி, ஒலி 96.8 – ன் செய்தி பிரிவின் பொன்-மகாலிங்கம், முனைவர் ரெத்தின வெங்கடேசன், தினமலர் நிருபர் புருசோத்தமன், சமூக ஆர்வலர் பிரவின்குமார், மேடைப் பேச்சளார்கள் சிவக்குமார், ஸ்டாலின், கவிமாலை கவிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வினை சிறப்பாக ஒளிப்பதிவாளர், பேச்சாளர் எம்.சே.பிரசாத் பதிவு செய்தார்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.