........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

      
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

1
கிடைக்கப் பெற்றோம் கிடைக்கப் பெற்றோம் கிடைக்கப் பெற்றோம் கிடைக்கப் பெற்றோம்

  • சிங்கப்பூரிலிருக்கும் இளம் எழுத்தாளர்கள் சிலரது முயற்சியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து வெளியிடப்பட்ட நாம் காலாண்டிதழ் (தனிச்சுற்றுக்கு மட்டும்) (ஜுலை-செப்டம்பர்'08) கிடைக்கப் பெற்றோம். ஒரு இதழுக்கான அன்பளிப்பு: ரூ 15/-

துபாய் ஆசிப் மீரான் அவர்கள் நேர்காணலில் தமிழ் இலக்கியம் குறித்த பல அரிய கருத்துக்களை வழங்கியிருப்பது சிறப்பாக இருக்கிறது.

சிங்கப்பூரில் இருக்கும் பல இளம் கவிஞர்களின் கவிதைகளுடன் வேறு சிலரது கவிதைகளும் இடம் பெற்றிருக்கிறது.

சிறுகதைகள், கட்டுரைகள், நிகழ்வுகள் என்று பல இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது.

சிங்கப்பூரிலில் இருக்கும் சில இளம் படைப்பாளர்களின் அதிவேகமான முயற்சியில் இலக்கியம் படைக்கப் புறப்பட்டிருக்கும் இந்த இதழில் வெளியிடும் படங்களை மட்டும் தெளிவாக்கினால் "நாம்" அனைவரும்  படிக்க மட்டுமில்லாது பாதுகாக்கக் கூடியதாகவும் மாறிவிடும்.

தொடர்புக்கு:

நாம் காலாண்டிதழ்,
மே/பா இரா.நீதிப்பாண்டி,
ஊராட்சி மன்றச் சாலை,
அ.காளாப்பூர்-630 501,
சிவகங்கை மாவட்டம்.
e-mail:
naaamagazine@gmail.com

  • கரூரில் இருந்து நாகை.எஸ்.பாலமுரளி என்பவரை ஆசிரியராகவும், ச.தேவராஜன் என்பவரை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் வெற்றிநடை மாத இதழ் (ஜீலை'2008) கிடைக்கப் பெற்றோம். ஆண்டுச்சந்தா:ரூ 84/-

பிளாஸ்டிக் பயங்கரம் கட்டுரை சிறியதாக இருந்தாலும் பிளாஸ்டிக்கினால் வரக்கூடிய ஆபத்தை உணர முடிகிறது

பேசாமல் பேச வைக்கும் சுவேதாவின் ஓவியத் திறன் குறித்த கட்டுரை தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

பக்கம் முழுவதும் கட்டுரைகளாகவும், செய்திகளாகவும் இருப்பது வாசிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படுத்துவதாக இருக்கிறது. பக்கங்களை அதிகமாக்கி இடையிடையே சிறிசிறு துணுக்குகள், சிரிப்புகள் கவிதைகள் என்று அதிகமாக இருந்தால் "வெற்றி நடை" போடலாம்.

தொடர்புக்கு:

வெற்றிநடை மாத இதழ்,
94, திண்ணப்பா நகர் (விஸ்தரிப்பு),
காந்திகிராமம்,
பசுபதிபாளையம் அஞ்சல்,
கரூர்- 639 004.

e-mail: vetrinadaieditor@gmail.com

  • திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் மனுஜோதி ஆசிரமத்திலிருந்து வெளியாகும் மனுஜோதி  காலாண்டிதழ் (மே-ஜீலை'08)  கிடைக்கப் பெற்றோம். இது ஒரு இலவச வெளியீடு.

ஆன்மீகப் பார்வையில் திருக்குறள் குறித்த கட்டுரை நன்றாக இருக்கிறது.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடமிருந்து கற்றறிந்து கொள்ள வேண்டியவை மூலம் நம் வாழ்க்கைக்கான நிறைய தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளைக் கொண்ட ஆன்மீகக் கருத்துக்கள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.

தொடர்புக்கு:

மனுஜோதி காலாண்டிதழ்,
மனுஜோதி ஆசிரமம்,
சத்திய நகரம், ஓடைமறிச்சான் அஞ்சல்,
பாப்பாக்குடி (வழி)-627 602,
திருநெல்வேலி மாவட்டம்.
e-mail:
manujothi@sancharnet.in

-தாமரைச்செல்வி

கடந்த கிடைக்கப் பெற்றோம் காண

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.