........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குட்டிக்கதை-90

தவறு செய்யாதவர் யார்?

வேதபாரகரும், பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டு வந்தனர். அவள் விபச்சாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள்.

அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர்.

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாய் உறவு கொண்டிருந்த போது கண்டு பிடிக்கப்பட்டாள். மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல்லெறிந்து கொல்ல வேண்டும். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீர் சொல்கிறீர்?” என்று கேட்டனர்.

யூதர்கள் இந்தக் கேள்வியை இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்டனர்.

இயேசுவின் மீது ஏதாவது குற்றம் சுமத்தவே அவர்கள் விரும்பினர். ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரலால் எழுதிக் கொண்டிருந்தார்.

யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதாவன் எவனாவது இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் மட்டும் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்.”என்றார்.

பிறகு இயேசு மறுபடியும் கீழே குனிந்து தரையில் எழுத ஆரம்பித்தார்.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக விலகிப் போயினர்.

முதலில் ஒரு முதியவர்கள் விலகினர். பிறகு மற்றவர்கள் விலகினர்.

அந்தப் பெண்ணோடு இயேசு மட்டும் தனித்து நின்றார்.

அவள் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

இயேசு அவளை ஏறிட்டுப் பார்த்து, “பெண்ணே, எல்லோரும் போய்விட்டார்கள். ஒருவனும் உன்னைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லையா?” என்று கேட்டார்.

அதற்கு அவள், “ஆண்டவரே எவரும் என்னைத் தண்டனைக்குட்படுத்தித் தீர்ப்பளிக்கவில்லை” என்றாள்.

பிறகு இயேசு, “நானும் உனக்குத் தீர்ப்பளிக்கவில்லை. இப்பொழுது நீ போகலாம். ஆனால் மறுபடியும் இப்படி பாவம் செய்யாதே” என்றார். 

 

முந்தைய குட்டிக்கதைகள் காண

 

 

                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.