........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத் படைப்புகள்

இலங்கை தும்புளுவாவை எனும் ஊரை சேர்ந்த எம்.வை.எம். மீஆத் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1953ல் இலங்கையில் தினகரன் வார மஞ்சரி பாலர் கழகம் மூலம் கட்டுரை கதை எழுதி இளம் எழுத்தாளர் ஆகிய இவரின் முதற் கவிதை 1961ல் ஈழத்துக் கவிமணி எம்.ஸி.எம். ஸபைர் நடத்தியமணிக் குரல்என்னும் சஞ்சிகையில் பிரசுரமானது. 1965ல் “ சீறும் நெற்கதிரே!’ என்ற கவிதை எம்.ஏ.றகுமான் நடாத்திய இளம்பிறை என்ற சஞ்சிகையில் வெளியானது. இலங்கையில் வெளிவரும் தினகரன், வீரகேசரி, நவமணி,ஆகிய தமிழ் தேசிய பத்திரிகைகளிலும், முத்துக்கமலம் உட்பட பல இணைய இதழ்களிலும் கவிதைகள் தொடர்ந்து எழுதி வருகின்றார். மேலும், இலங்கையில் வெளிவரும் பல ஆங்கில முன்னனி இதழ்களிலும் ஆங்கிலத்தில் கவிதை எழுதி வருகின்றார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இஸ்லாம், கல்வி, உளவியல், வரலாறு, சமய ஒப்பீடு, கலை இலக்கியம் கலாசாரம் போன்ற துறைகளில் எழுதப்பட்டு இலங்கையின் முன்னனி தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் மிழ் ஆங்கிலம் சிங்களம் மற்றும் பு மொழிகளுக்கான சிறந்த மொழி பெயர்ப்பாளரும் கூட. இவர் எழுதிய பல நூல்கள் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் வெளியாகியுள்ளன. இது தவிர சில மொழிபெயர்ப்பு நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்

இவர் ஹெம்மாதகம முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகரும் தலைவருமாவார். இவரது அயராத முயற்சியால் இப்பிரதேசத்தில் இளம் எழுத்தாளர்கள் பலர் உருவாகியுள்ளனர் இலக்கியக் கருத்தரங்குகள் இச்சங்கத்தினால் நடத்தப்பட்டு போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுரை, கவிதை, சிறுகதை எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

கௌரவப் பட்டங்கள், விருதுகள், பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

  •  “பத்ருல் உலூம்” (அறிவின் மாமதி) என்ற விஷேட பட்டமும் விருதும் பணப்பரிசும் சான்றிதழும் கலை இலக்கிய ஆய்வுத் துறைப் பங்களிப்புகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் முஸ்லிம் சமய கலாசார அமைச்சினால் 1993 ல் வழங்கப்பட்டன.

  • கலா புஷணம்” என்ற விஷேட பட்டமும் விருதும் பணப்பரிசும் சான்றிதழும் பணப்பரிசும் கலை இலக்கிய ஆய்வுத்துறைப் பங்களிப்புகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் கலாசார அமைச்சினால் 2005 ல் வழங்கப்பட்டன.

  • அளப்பரிய சமய கலாசார சமூக கல்விச் சேவைகளைப் பாராட்டி ஹி.1429-08-14 ல் தும்புளுவாவை அந்-நூர் அஹதிய்யா பாடசாலையினால் குறிப்பாக ஷபாப் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் அல் ஹாஜ் மவ்லவி எம்.எஸ்.எம்.தாஸிம் அவர்களால் தும்புளுவாவை அல்-அறபா முஸ்லிம் வித்தியாலயத்தில் நடந்த பாராட்டு வைபவத்தின் போது ஒரு விருது வழங்கப்பட்டது.

  • ஏ.எம்.ராஜா ஜிக்கி விருது” கண்டி ரத்ன தீப நிறுவனத்தினால் கலை இலக்கியகப் பணிகளுக்காக அமைப்பாளர் திரு.ராஜா ஜென்கின்ஸ் அவர்களால் 2010 ம் ஆண்டு கண்டி கெப்படிபொல ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்த பாராட்டு விழாவின் போது வழங்கப்பட்டுள்ளது.

  • இலக்கியச் செம்மல்” என்ற தேசிய கௌரவப் பட்டமும் சான்றிதழும் மலையக கலை கலாசார சங்கத்தின் (இரத்ன தீபம்) ஏற்பாட்டில் நாட்டின் உயர்ச்சிக்காகவும், மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றியமையைப் பாராட்டி 02.10.2010 ல் கண்டி கெப்படிபொல ஞாபகார்த்த மண்டபத்தில் கௌரவ பிரதம விருந்தினர் வீ.எஸ்.ராதா கிருஷ்ணன் ஜே.பி யு. எம் அவர்களால் வழங்கப்பட்டன.

எந்தக் கை மேலானது...? -பொன்மொழிகள்.

காற்றே வருக!!  -கவிதை.

மாலை வேளை! -கவிதை.

கூலிக்காரன் -கவிதை.

வெள்ளம் -கவிதை.

மாலை வேளை -கவிதை.

கோபம் இரு விதம் -சிறுவர் பகுதி.

நபி வழி வாழ்ந்திட...! -சிறுவர் பகுதி.

சுத்தம் தேவை நித்தம்! -சிறுவர் பகுதி.

ஆணவம் அழிந்து போகும்  -சிறுவர் பகுதி.

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு