........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - வற்றல், வடகம் மற்றும் பொடி வகைகள்-10

ஜவ்வரிசி அப்பளம்

தேவையான பொருட்கள்:

  • ஜவ்வரிசி – 250 கிராம்

  • பச்சை மிளகாய் – 8 எண்ணம்

  • எலுமிச்சம் பழம் - 2 எண்ணம்

  • உப்பு - சிறிது

  • பெருங்காயம் - சிறிது

செய்முறை:

1. பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரில் தண்ணீர் வைத்து, கொதித்ததும் ஜவ்வரிசியைச் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்க்கவும்.
3. தண்ணீர் தேவையானால் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜவ்வரிசி பாதி வெந்ததும், மேல் பாகம் கண்ணாடி போல் ஆகி, உள்ளே சிறிது மட்டும் வெள்ளை தெரியும் போது மூடிவைத்து, அடுப்பை அணைத்து விடவும்.
4. கெட்டியான விழுதாக இருக்கும் இந்தக் கலவையை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, பிளாஸ்டிக் பேப்பரில் வைத்துத் தண்ணீரைத் தொட்டுத் தொட்டு, கையால் பெரிதாக அப்பளமாகத் தட்டவும்.
8. இந்த அப்பளத்தை வெள்ளைப் பருத்தித் துணியில் சூரிய வெப்பத்தில் காயப் போட வேண்டும். இருபுறமும் காய்ந்த பின்பு எடுத்து வைத்துக் கொள்ளலாம். தேவையான போது எண்ணெய்யில் பொறித்துச் சாப்பிடலாம்.

குறிப்பு: ஜவ்வரிசிக்கு மொத்தமாக நீர்விட்டு கொதிக்கவிடக் கூடாது. சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் விட்டு கொதிக்க விட்டால்தான் ஜவ்வரிசி ஒட்டாமல் வேகும். கூடவே கரையாமல் இருக்கும்.

-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.

சித்ரா பலவேசம் அவர்களின் இதர படைப்புகள

ஜவ்வரிசி அப்பளம் உணவுக்குத் துணையாக வைத்துச் சாப்பிடலாம். தனியாகவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இந்த அப்பளம் மிகவும் விருப்பமான ஒன்று. 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு