........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிரிக்க சிரிக்க-39

 ஓட்டல் வாசலில் கழுதைகள்!

-குரு.சுப்ரமணியன்

ஒருவன்: இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?

மற்றவன்: சட்டம் ஒரு இருட்டறையாச்சே, அதனாலேதான்

*********

ஒருவன்: பீச்லே கடலை விக்கற பையன் ஏன் சோகமா இருக்கான்?

மற்றவன்: இங்கே வர்றவங்க அவங்களே கடலை போட்டுக்கறாங்களேன்னுதான்.

*********

ஒருவன்: ஆனாலும் அந்த டாக்டர் ரொம்ப அநியாயம் பண்றாரு?

மற்றவன்: என்ன செஞ்சாரு?

ஒருவன்: திருடின கிட்னிக்களை வச்சு ஒரு கிட்னி பாங்க் ஆரம்பிச்சுட்டாரே.

*********

ஒருத்தி: எங்க இருபததைந்தாவது மணநாளுக்கு ராப்பிச்சை ஒரு பரிசு அனுப்பியிருக்கான்

மற்றவள்: என்ன அது?

ஒருத்தி: ருசியாக சமைப்பதெப்படிங்கற புஸ்தகம்தான்.

*********

ஒருவன்: என்ன கல்யாணப் பெண்ணோட கழுத்து, காது, கையிலேயெல்லாம் பூவைச் சுத்தி அனுப்பியிருக்காங்க?

மற்றவன்: பொன்னு வைக்கற இடத்திலே பூ வச்சாப் போதும்னு சம்பந்திங்க சொல்லி இருந்தாங்களாம்.

*********

ஒருவன்: அந்த ஹோட்டல் வாசலிலே ஏன் அத்தனை கழுதைங்க நிக்குது?

மற்றவன்: அங்கே பேப்பர் மசாலா சூப்பரா இருக்குமாம்.

*********

ஒருவன்: உங்க படத்தை நான் இருபது தடவை பார்த்தேன், தெரியுமா?

மற்றவன்: அடே! அவ்வளவு பிரமாதமாயிருந்ததா?

ஒருவன்: இல்லை. எத்தனை தடவை பார்த்தலும் கதையே புரியலியே.

*********

ஒருவன்: நீதிபதியையே நடன நிகழ்ச்சிக்கு ஜட்ஜாப் போட்டது தப்பாப் போச்சு.

மற்றவன்: ஏன்?

ஒருவன்: மேஜையிலே 'ஆர்டர், ஆர்டர்'னு தட்டறத்துக்கு மரச்சுத்தி கேக்கறாரு.

குரு.சுப்ரமணியன் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய சிரிப்புகள் காண

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.