........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிரிக்க சிரிக்க-44

 கல்யாணமாகும் வரை பிரம்மச்சாரி!

-குரு.சுப்ரமணியன்.

ஒருவன்: நம்ம ஆளு கொத்தனாரோட எங்கே போறாரு?

மற்றவன்: ஓசோன் படலத்திலே ஓட்டை விழுந்திருக்கறதாச் சொல்றாங்க இல்லியா, அதை அடைக்கத்தான்.

*********

முதலாமவர்: உங்க பையன் பிரம்மச்சாரியாவே இருக்கப் போறானாமே?

இரண்டாமவர்:
அப்படியா, என்கிட்டே சொல்லவேயில்லையே?

முதலாமவர்: கல்யாணமாகற வரைக்கும் தான்...

*********

மனைவி: எதிர் வீட்டு வயசான அம்மாவோட ஏன் காரணமில்லாமே அடிக்கடி சண்டை போடறே?.

கணவன்: அவங்க பார்க்கறதுக்கு அசப்பிலே உங்க அம்மா மாதிரியே இருக்காங்க.

*********

ஒருத்தி: காசிக்குப் போயிட்டு வந்த உங்க மாமியார் எதை விட்டாங்க?

மற்றவள்: உயிரைத்தான்.

*********

ஒருவன்: சிங்காரச் சென்னைங்கற பெயரை ரீங்காரச் சென்னைன்னு மாத்தணும்னு அவங்க போராட்டம் நடத்தறாங்களே ஏன்?

மற்றவன்: சென்னை முழுக்க கொசுத்தொல்லை அதிகமா இருக்கற காரணத்தினாலேதான்.

குரு.சுப்ரமணியன் அவர்களது மற்ற படைப்புகள்

    முந்தைய சிரிப்புகள் காண

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.