........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிரிக்க சிரிக்க-59

 பொண்ணு மனசு காலி இருக்கா?

-சுபஸ்ரீஸ்ரீராம்.

ஒருவன்: எங்களுக்கு இரண்டு வீடு, பத்து ஏக்கர் நிலம், கார் எல்லாம் இருக்குடா.

மற்றவன்: அப்புறம் ஏண்டா இப்படி கஷ்டப்படற.

ஒருவன்: அதெல்லாம் அடமானத்துல இருக்கு.

*********

வீட்டுக்காரர்: என்னோட வீட்டுல நிறைய காலியா இருக்கு. உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அங்க குடியேறலாம்.

மற்றவன்: உங்க பொண்ணு மனசு காலியாக இருக்கா?

*********

ஒருவன்: உன் பேரு கருப்புசாமிதானே... உன் மனைவி உன்னைய கரும்புன்னு கூப்பிடுறாங்களே...

மற்றவன்: என்னைய சக்கையா பிழிஞ்சு எடுக்கத்தான் அவ அப்படி கூப்பிடுவாரு.

*********

மகன்: அப்பா அம்மாவும் கரண்ட்டும் ஒண்ணுன்னு சொல்றீங்க... ஆனால் வித்தியாசமிருக்குன்னு சொல்றீங்க...

அப்பா: கரண்ட் தொட்டால் ஷாக்கடிக்கும். உங்க அம்மா பேரைக் கேட்டாலே ஷாக்கடிக்கும்.

*********

ஒருவன்: கூட்டத்தில உன் மனைவி பேரைச் சுருக்கிச் செல்லமாக் கூப்பிட்டதுக்கு அங்கிருந்தவங்க எல்லோரும் ஓடிட்டாங்களா....?

மற்றவன்: ஆமாம். பாமாங்கிற அவ பெயரை பாம், பாம்னு சொல்லிக் கூப்பிட்டேன்.

*********

ஆசிரியர்: மூன்றையும், மூன்றையும் கூட்டினால் ஆறு வரும். புரியுதா?

மாணவன்: காவேரியா, வைகையா சார்?

சுபஸ்ரீஸ்ரீராம் அவர்களது பிற படைப்புகள

  முந்தைய சிரிப்புகள் காண

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.