........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

அப்பாவி சுப்பையா பதில்கள்-10

மாப்பிள்ளை பார்க்கப் பொண்ணு வந்திருக்கு.

-தேனி எஸ். மாரியப்பன்.

ஒருவர்: முள்ளை முள்ளாலதான் எடுக்கனும்னு சொல்றாங்களே...! அதுவும் ஒடிஞ்சு காலில குத்திட்டா?

அப்பாவி சுப்பையா: அதையும் இன்னொரு முள்ளால எடுக்கனும்.

_____________

போலீஸ்: காணாமல் போன உங்கள் வேலைக்காரியோட அடையாளம் சொல்ல முடியுமா?

அப்பாவி சுப்பையா: வலது மார்பில ஒரு மச்சம் இருக்கும் சார்

_____________

காதலி: நம்ம காதலை அப்பாகிட்ட சொல்லச் சொல்லி அவசரப்படுத்துறீங்களே...ஏன்?

அப்பாவி சுப்பையா: அப்போதான் உனக்கு வேற இடத்தில சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.

_____________

சோதனை அதிகாரி: உங்க வீட்டில ஐம்பது கிலோ தங்கம் இருக்குன்னு எங்களுக்குத் தகவல் வந்திருக்கு...!

அப்பாவி சுப்பையா: ஆமாங்க என் மனைவி தங்கம் ஐம்பது கிலோ எடை இருப்பாள்.

_____________

வங்கி அதிகாரி: உங்களுக்கு எந்த மாதிரியான லோன் வேணுமின்னு விருப்பப்படுறீங்க?

அப்பாவி சுப்பையா: திருப்பிக் கட்டாத லோன் இருந்தா கொடுங்க....

_____________

ஒருவர்: பொய் சொல்லக் கூடாது. பிறர் பொருள் மேல் ஆசைப்படக் கூடாது. பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.

அப்பாவி சுப்பையா: இந்த உலகத்திலே வாழக்கூடாதுன்னு சொல்லிடுங்க....

_____________

ஒருவர்: உன் மாமனாருக்குக் கால் வீக்கமாமே. போய்ப் பார்த்தியா...?

அப்பாவி சுப்பையா: கால் வீக்கத்தை என்ன பார்க்கிறது... முழு வீக்கமான பின்னால போய்ப் பார்த்துக்கலாமுன்னு இருக்கேன்.

_____________

ஒருவர்: சார் என்னைத் தெரியுதுங்களா...?

அப்பாவி சுப்பையா: நீங்க நல்லாத் தெரியுறீங்க... ஆனால் நீங்க யார்? எந்த ஊர்? என்கிற விபரம்தான் தெரியல...!

_____________

ஒருவர்: என் இரண்டு பொண்ணுகளையும் கட்டிக்கிறதாச் சொல்றீங்க...? உங்களுக்கு ஒரு பையன்தானே இருக்கான்.

அப்பாவி சுப்பையா: நான் ஒருத்தன் இருக்கேனே...!

_____________

ஒருவர்: என்னங்க மாப்பிள்ளை பார்க்கப் பொண்ணையும் கூப்பிட்டு வந்திருக்கீங்க...?

அப்பாவி சுப்பையா: நீங்க பெண் பார்க்க மாப்பிள்ளையையும் கூப்பிட்டு வந்தீர்களே...?

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய பகுதி காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.