........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

அப்பாவி சுப்பையா பதில்கள்-12

காலேஜில யாரும் சேர மாட்டேங்கிறாங்களா...?

-தேனி எஸ். மாரியப்பன்.

ஒருவர்: கதை எழுதிக் கவருக்குள்ள இரும்புத் துண்டு ஒன்னும் போட்டு அனுப்பறீங்களே...?

அப்பாவி சுப்பையா: கதையில வெயிட் இல்லன்னு திருப்பி அனுப்பிடுறாங்களே...!

_____________

ஒருவர்: உங்களோட மனமகிழ் மன்றத்தில கல்யாணம் ஆனவங்களை மட்டும்தான் சேர்ப்பீங்களாமே...?

அப்பாவி சுப்பையா: ஆமாம். அவங்களுக்குத்தானே மகிழ்ச்சி தேவையாயிருக்கு.

_____________

ஒருவர்: பெரிய மாட்டுப் பண்ணை வைக்கிற அளவுக்கு உங்களை ஊக்கப்படுத்தியது உங்களோட பெற்றோரும் ஆசிரியருமா...?

அப்பாவி சுப்பையா: ஆமாம், அவங்கதான் படிப்பே வராத என்னை அடிக்கடி நீ மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு சொல்லுவாங்க...!

_____________

ஆசிரியர்: உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது தெரியுமா?

அப்பாவி சுப்பையா: தெரியாது சார். எனக்கு வந்த கண்டங்களில் பெரியது சிறு வயசில கிணற்றில விழுந்ததுதான்.

_____________

டாக்டர்: உங்களுக்கு எப்படி இவ்வளவு அடிபட்டுச்சு...?

அப்பாவி சுப்பையா: என்னோட அம்மாவுக்கும் மனைவிக்கும் நடந்த சண்டையில் இடையில மாட்டிக்கிட்டேன்.

_____________

ஒருவர்: உங்க காதல் அந்தப் பொண்ணோட அம்மாவுக்குத் தெரிந்தும் தொடருதா எப்படி?

அப்பாவி சுப்பையா: இப்ப அவளோட அம்மாவும் என்னைக் காதலிக்கிறாள்.

_____________

ஒருவர்: பெரிய தொழிலதிபரான நீங்க தொடங்கின காலேஜில யாரும் சேர மாட்டேங்கிறாங்களா... ஏன்?

அப்பாவி சுப்பையா: முட்டைக் கடை வச்சிருந்த என்னோட காலேஜில சேர்ந்தா முட்டைதான் கிடைக்கும்னு யாரோ வதந்தியைக் கிளப்பி விட்டுட்டாங்க...!

_____________

ஒருவர்: கல்யாணம் முடிஞ்சதும் கதை எழுதனும்னு உங்களுக்கு எப்படி ஐடியா வந்தது?

அப்பாவி சுப்பையா: என் மனைவியோட அப்பா பழைய பேப்பர்கடை வச்சிருக்காரே...!

_____________

ஒருவர்: இவ்வளவு பெரிய தாடி வளர்த்திருக்கீங்களே... காதல் தோல்வியா...?

அப்பாவி சுப்பையா: இல்லை. காதலிச்சவளையேக் கல்யாணம் பண்ண வேண்டியதாப் போச்சு...!

_____________

ஒருவர்:  பெரிய ஜவுளிக் கடைகளில் திருடிக்கிட்டிருந்த நீ இப்போ என்ன பண்ணிக்கிட்டிருக்க...?

அப்பாவி சுப்பையா: சின்னதா ஜவுளிக்கடை ஒண்ணு வச்சிருக்கேன்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய பகுதி காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.