|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
அப்பாவி சுப்பையா பதில்கள்-12 காலேஜில யாரும் சேர மாட்டேங்கிறாங்களா...? -தேனி எஸ். மாரியப்பன்.
ஒருவர்: கதை எழுதிக் கவருக்குள்ள இரும்புத் துண்டு ஒன்னும் போட்டு அனுப்பறீங்களே...? அப்பாவி சுப்பையா: கதையில வெயிட் இல்லன்னு திருப்பி அனுப்பிடுறாங்களே...! _____________ ஒருவர்: உங்களோட மனமகிழ் மன்றத்தில கல்யாணம் ஆனவங்களை மட்டும்தான் சேர்ப்பீங்களாமே...? அப்பாவி சுப்பையா: ஆமாம். அவங்களுக்குத்தானே மகிழ்ச்சி தேவையாயிருக்கு. _____________ ஒருவர்: பெரிய மாட்டுப் பண்ணை வைக்கிற அளவுக்கு உங்களை ஊக்கப்படுத்தியது உங்களோட பெற்றோரும் ஆசிரியருமா...? அப்பாவி சுப்பையா: ஆமாம், அவங்கதான் படிப்பே வராத என்னை அடிக்கடி நீ மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு சொல்லுவாங்க...! _____________ ஆசிரியர்: உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது தெரியுமா? அப்பாவி சுப்பையா: தெரியாது சார். எனக்கு வந்த கண்டங்களில் பெரியது சிறு வயசில கிணற்றில விழுந்ததுதான். _____________ டாக்டர்: உங்களுக்கு எப்படி இவ்வளவு அடிபட்டுச்சு...? அப்பாவி சுப்பையா: என்னோட அம்மாவுக்கும் மனைவிக்கும் நடந்த சண்டையில் இடையில மாட்டிக்கிட்டேன். _____________ ஒருவர்: உங்க காதல் அந்தப் பொண்ணோட அம்மாவுக்குத் தெரிந்தும் தொடருதா எப்படி? அப்பாவி சுப்பையா: இப்ப அவளோட அம்மாவும் என்னைக் காதலிக்கிறாள். _____________ ஒருவர்: பெரிய தொழிலதிபரான நீங்க தொடங்கின காலேஜில யாரும் சேர மாட்டேங்கிறாங்களா... ஏன்? அப்பாவி சுப்பையா: முட்டைக் கடை வச்சிருந்த என்னோட காலேஜில சேர்ந்தா முட்டைதான் கிடைக்கும்னு யாரோ வதந்தியைக் கிளப்பி விட்டுட்டாங்க...! _____________ ஒருவர்: கல்யாணம் முடிஞ்சதும் கதை எழுதனும்னு உங்களுக்கு எப்படி ஐடியா வந்தது? அப்பாவி சுப்பையா: என் மனைவியோட அப்பா பழைய பேப்பர்கடை வச்சிருக்காரே...! _____________ ஒருவர்: இவ்வளவு பெரிய தாடி வளர்த்திருக்கீங்களே... காதல் தோல்வியா...? அப்பாவி சுப்பையா: இல்லை. காதலிச்சவளையேக் கல்யாணம் பண்ண வேண்டியதாப் போச்சு...! _____________ ஒருவர்: பெரிய ஜவுளிக் கடைகளில் திருடிக்கிட்டிருந்த நீ இப்போ என்ன பண்ணிக்கிட்டிருக்க...? அப்பாவி சுப்பையா: சின்னதா ஜவுளிக்கடை ஒண்ணு வச்சிருக்கேன்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.