........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

அப்பாவி சுப்பையா பதில்கள்-21

முதலிரவில் லைட்டை அணைப்பது ஏன்?

-தேனி எஸ். மாரியப்பன்.

ஒருவர்: உங்க மனைவி எதுக்கு உங்களை அடித்தார்கள்...?

அப்பாவி சுப்பையா: பொறுத்தது போதும்... என்பதற்குப் பதிலா பெருத்தது போதுமுன்னு வாய் தவறிச் சொல்லிட்டேன்..!

_____________

ஒருவர்: இருமல் நிற்க மாட்டேங்குதுங்க...?

அப்பாவி சுப்பையா: அப்படின்னா அங்க உட்கார வையுங்க...! இல்ல படுக்க வையுங்க...!

_____________

பியூன்:  சார் மணி ஆறாகுது. வீட்டுக்குப் போகலையா...?

அப்பாவி சுப்பையா: இன்னிக்கு வருமானம் ஒன்னும் இல்ல... வீட்டுக்குப் போனால் மானம் போகும்...!

_____________

டாக்டர்: நான் இன்னும் உங்களுக்கு ஊசியே போடலை. அதற்குள் இப்படி கத்துகிறீர்களே?

அப்பாவி சுப்பையா: உங்க நர்சைப் பார்த்ததும் எனக்கு என் மனைவி ஞாபகம் வந்துட்டுது டாக்டர்...!

_____________

நீதிபதி: மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டீர்களாமே...?

அப்பாவி சுப்பையா: ஏமாற்றி திருமணம் செய்யலீங்க... நான் விரும்பித்தான் திருமணம் செய்துக்கிட்டேன்!

_____________

தந்தை: எல்லாப் பாடத்திலயும் நூறு மார்க் வாங்கிட்டியா... ஆச்சர்யமாயிருக்கே...?

அப்பாவி சுப்பையா: ஆமாம்ப்பா... எல்லாப் பாடத்துக்கும் சேர்த்து வாங்கியிருக்கேன்.

_____________

போலீஸ்: என்னய்யா அநியாயம். சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே?

அப்பாவி சுப்பையா: என் மாமியாரும், மாமனாரும் வந்து ஆறு மாதம் ஆகுது. வேற என்ன செய்ய?

_____________

ஒருவர்: போலி டாக்டருன்னு தெரிந்தும் அவரிடம் போய் வைத்தியம் பார்க்கறீங்களே?

அப்பாவி சுப்பையா: அவருகிட்டதான் பீஸ் குறைவா இருக்கு!

_____________

ஒருவர்: முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?

அப்பாவி சுப்பையா: மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான்.

_____________

ஒருவர்:  நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்...

அப்பாவி சுப்பையா: அப்ப குப்புசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லு...!

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய பகுதி காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.