........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

அப்பாவி சுப்பையா பதில்கள்-3

 எனக்கு யாரையும் திட்ட வராதே...

-தேனி எஸ். மாரியப்பன்.

ஒருவர்: நாய் கடிச்சதுக்கு ஊசி போட நாயோட போறீங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம். டாக்டர் கடி வாயிலே ஊசி போடனும்னு சொன்னார்.

_____________

டாக்டர்: உங்க வியாதி குணமாகனுமின்னா கோழி சாப்பிடுறத நிறுத்தனும்..
அப்பாவி சுப்பையா: கோழி கண்டதைச் சாப்பிடும். அதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்...!

_____________

டாக்டர்: ஒரு வாரமாக இருமலுன்னு சொல்றீங்க... இதுவரைக்கும் என்ன செய்து கொண்டிருந்தீங்க...?
அப்பாவி சுப்பையா: இருமிக் கொண்டேதான் இருந்தேன்.

_____________

டாக்டர்: உங்களைத் தினம் ஒரு பச்சை முட்டை சாப்பிடச் சொன்னேனே... சாப்பிட்டீங்களா?
அப்பாவி சுப்பையா: பச்சை முட்டையே கிடைக்கலை டாக்டர்... எல்லாக் கடைகளிலும் வெள்ளை முட்டைதான் கிடைக்குது.

_____________

ஒருவர்: உங்களைத் திட்டக்குழுவிலே சேர்த்திருக்காங்க...
அப்பாவி சுப்பையா: அய்யோ... எனக்கு யாரையும் திட்ட வராதே...

_____________

ஒருவர்: ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் எவ்வளவு இடைவெளி விட்டீங்க...?
அப்பாவி சுப்பையா: ஐந்தடி இடைவெளி விட்டுத்தான் படுக்க வைக்கிறேன்..

_____________

மனைவி: நான் மூணுமாசமா முழுகாம இருக்கிறேங்க...
அப்பாவி சுப்பையா: அதனால்தான் இப்படி நாற்றமெடுக்குதா...?

_____________

ஒருவர்: உற்பத்தியைப் பெருக்குவது அவசியம்னு விவசாயத்துக்குத்தான் சொன்னோம்.
அப்பாவி சுப்பையா: நாங்க பிள்ளைங்களைப் பெத்துக்கச் சொல்றீங்களோன்னு... பத்துப் பிள்ளைகளைப் பெத்துக்கிட்டோம்.

_____________

ஒருவர்: தொண்டை கட்டி இருக்குன்னு டாக்டர்கிட்டே போக வேண்டியதுதானே...?
அப்பாவி சுப்பையா: அவர் கட்டின்னு சொன்னால் ஆபரேசன் பண்ணச் சொல்வாரே...!

_____________

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய பகுதி காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.