........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

அப்பாவி சுப்பையா பதில்கள்-4

 மனைவிக்கு ஊசி போடும்போது நீங்க ஏன் கத்துறீங்க...?

-தேனி எஸ். மாரியப்பன்.

ஒருவர்: உங்க மனைவி காணாமல் போய் ஒரு மாசம் ஆகியும் வேணுமின்னுதான் தேடாமல் இருந்தீங்களா...?
அப்பாவி சுப்பையா: இல்லீங்க....வேணாமுன்னுதான் தேடாமல் இருந்தேன்.

_____________

ஒருவர்: உங்க வகுப்பில அரசியல்வாதியோட பையனை எப்படி சமாளிக்கிறீங்க...?
அப்பாவி சுப்பையா: அவனுக்குத்தான் என்னோட சேரைக் கொடுத்து உட்காரச் சொல்லிடுறேனே...!

_____________

ஒருவர்: உங்க கல்யாணத்துக்குப் பிறகு யோகம் அடிக்குமுன்னு சொன்னாங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாங்க... மனைவியா வந்தவ பின்னி எடுக்கிறா...!

_____________

ஒருவர்: உங்களைத் தொண்டர்களெல்லாம் உரம் ஏறிய தலைவர்ன்னு சொல்றாங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம் என் படம் போட்ட வால் போஸ்டரிலதான் அதிகமா சானி அடிச்சிருக்காங்க....!

_____________

ஒருவர்: உங்க மனைவிக்கு ஊசி போடும் போது நீங்க ஏன் கத்துறீங்க...?
அப்பாவி சுப்பையா: எனக்கு ஊசி போடும் போது வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருந்தீங்கன்னு
வீட்டுக்குப் போனதும் அவ கத்துவாளே...!

_____________

ஒருவர்: உங்க மனைவி கோவிச்சுக்கிட்டு சாப்பிடாம போயிட்டாங்களா...?
அப்பாவி சுப்பையா: என் மனைவி கோவிச்சுட்டு சமைக்காமல்தான் போயிட்டாங்க...!

_____________

ஒருவர்: சத்யசோதனை படிச்சீங்களே... எந்த இடத்தில உங்களுக்குக் கண்ணீர் வந்தது...?
அப்பாவி சுப்பையா: எங்க வீட்டு மாடியிலதான்...!

_____________

ஒருவர்: உங்க மனைவி கையில் ஒரு மூடியோட இருக்காங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாங்க...ஏதோ ஒரு விஷயத்தை மூடி மறைக்கப் போறா...!

_____________

ஒருவர்: உங்களுக்கு நடக்கிற ஆபரேசனில நீங்க பிழைக்கனுமுன்னு டாக்டரே பிரார்த்தனை பண்றாரே...
அப்பாவி சுப்பையா: அப்புறம் அவரிடம் வாங்கின ஒரு லட்சம் ரூபாயைத் தர வேண்டாமா?

_____________

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய பகுதி காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.