|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
அப்பாவி சுப்பையா பதில்கள்-5 அடிக்கடி ஏப்பம் விடுவீங்களே...எப்படி நின்றது? -தேனி எஸ். மாரியப்பன்.
ஒருவர்: வீட்டுக்குள்ளே மணலைக் கொட்டி வைத்திருக்கீங்களே....? அப்பாவி சுப்பையா: ஆமாம். என் மனைவிக்குக் கோபம் வந்தால் மண்ணை வாரித் தூற்றுவாள். அதுக்குத்தான். _____________ ஒருவர்: உன் மாமனார் சொத்தைப் பிரிச்சதுல உனக்கு என்ன பங்கு கிடைத்தது? அப்பாவி சுப்பையா: இரண்டு லட்சம் கடன் வந்தது. _____________ ஒருவர்: உங்க கோழியைக் காணோமுன்னு சொல்லிக்கிட்டிருந்தீங்களே...கிடைச்சதா? அப்பாவி சுப்பையா: ரெண்டு பிளேட் கோழிப் பிரியாணி கிடைச்சது. _____________ ஒருவர்: டாக்டர் உங்களைப் பூரியே சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டாரா? அப்பாவி சுப்பையா: ஆமாம் காற்றுள்ள பொருள் சாப்பிட்டா ஏப்பம் வருமாம். _____________ ஒருவர்: தூங்கும்போது கூட கையைக் கட்டிக்கிட்டுத் தூங்குவீங்களாமே...? அப்பாவி சுப்பையா: அப்புறம் என் மனைவி முன்னால எப்படித் தூங்கறது?! _____________ ஒருவர்: உங்களுக்கும் உங்க காதலிக்கும் ஒரே நேரத்தில திருமணமா? இதிலென்ன ஆச்சரியம்? அப்பாவி சுப்பையா: எனக்கு மதுரையிலும் அவளுக்கு திருச்சியிலும் திருமணம். _____________ ஒருவர்: உங்கப்பா வீட்டுக்குள்ளே சரிசரின்னு மட்டும் சொல்லிக்கிட்டிருக்காரே? அப்பாவி சுப்பையா: ஆமாம். அவர் என் அம்மாவிடம் பேசிக்கிட்டிருக்கார். _____________ ஒருவர்: பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியிருக்காயே...எப்படி? அப்பாவி சுப்பையா: மாலை ஆறு மணிக்கு மேல் எனக்கு கண் தெரியாதே...! _____________ ஒருவர்: உங்களுக்கு சங்கீத ஞானம் இருந்ததால அமைச்சர் பதவி கிடைத்ததா? அப்பாவி சுப்பையா: ஆமாம்! எனக்கு ஜால்ரா அடிக்கத் தெரியும். _____________ ஒருவர்: அடிக்கடி ஏப்பம் விடுவீங்களே...எப்படி நின்றது? அப்பாவி சுப்பையா: பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சுட்டேனே...!
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.