........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

அப்பாவி சுப்பையா பதில்கள்-6

 போலி டாக்டர்னு தெரிஞ்சும் வைத்தியம் பண்றீங்களே...?

-தேனி எஸ். மாரியப்பன்.

ஒருவர்: சாந்தி முகூர்த்தத்தை ஒரு மாதம் தள்ளி வைத்து விட்டார்களா... ஏன்...?

அப்பாவி சுப்பையா: கல்யாணம் ஒரு மாதம் தள்ளி வைத்து விட்டார்களே...!

_____________

ஒருவர்: உங்க மனைவி பொய் சொல்றாங்கன்னு சொல்றீங்களே...எப்படி?

அப்பாவி சுப்பையா: அவ என்னைப் பெரிய அறிவாளின்னு சொல்றாளே...

_____________

ஒருவர்: இட்லி பார்சல் வாங்கிட்டு வந்து அந்த பேப்பரையும் சேர்த்துச் சாப்பிட்டு விடுவீர்களாமே...?

அப்பாவி சுப்பையா: ஆமாம், பேப்பர் ரோஸ்ட்டிலதான் இட்லியை பார்சல் பண்ணி வாங்கி வருவேன்.

_____________

ஒருவர்: சுருட்டு கம்பெனி நடத்தினீர்களே வியாபாரம் எப்படி?

அப்பாவி சுப்பையா: ஆபிஸில இருந்தவங்க பணத்தைச் சுருட்டிட்டு ஓடிட்டாங்க...!

_____________

ஒருவர்: பேரத் தேர்வில உங்க பையனுக்கு வேலை கிடைக்காமல் போயிடுச்சா..?

அப்பாவி சுப்பையா: ஆமாம். அவங்க ஐந்து லட்சம் கேட்டாங்க...நான் இரண்டு லட்சம் தர்ரேன்னு சொன்னேன்.

_____________

ஒருவர்: போலி டாக்டர்ன்னு தெரிஞ்சும் அவரிடம் வைத்தியம் செய்யனும்னு போறீங்களே...?

அப்பாவி சுப்பையா: அவர்தான் பயந்து பயந்து நல்ல முறையில் வைத்தியம் பண்றார்.

_____________

ஒருவர்: கல்யாணமே வேணாமுன்னு இரும்பு மனசா இருந்த நீங்க பெண்ணைப் பார்த்தவுடனே பிடிச்சிருக்குன்னு சொல்லீட்டீங்களாமே...?

அப்பாவி சுப்பையா: ஆமாம், பெண்ணோட காந்தப் பார்வை இந்த இரும்பு மனசை ஈர்த்திடுச்சு...

_____________

ஒருவர்: நீங்கதான் குடும்பக் கட்டுப்பாடு பண்ணிவிட்டீர்களே! அப்புறம் எப்படி உங்க மனைவி மூணு மாத கர்ப்பமாயிருக்கிறாள்னு சொல்றீங்க...?

அப்பாவி சுப்பையா: அவ குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கலையே...!

_____________

ஒருவர்: உங்க கட்சியோட பொதுக்குழுவைக் கூட்ட ஒரு லட்சம் செலவுன்னு சொல்றீங்களே...

அப்பாவி சுப்பையா: ஆமாம்!  ஆயிரம் துடைப்பம் வாங்கியிருக்கேன்...!

_____________

ஒருவர்: இந்த டாக்டர் வெளிநாட்டில் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்...

அப்பாவி சுப்பையா: எப்படியெல்லாம் நோயாளிகளிடம் பணம் கறக்கலாமுன்னுதானே...!

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய பகுதி காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.