........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 சிறுவர் பகுதி-8     -கவிதை

திருக்குறள்

திருக்குறள் திருக்குறள் திருக்குறளாம்
தெய்வப்புலவர் வள்ளுவரின்
திருக்குறள் திருக்குறள் திருக்குறளாம்
திருக்குறள் படித்தால் உருப்படலாம்!

உண்மை பேசும் அவசியத்தை
உணர்த்திக் காட்டும் திருக்குறளாம்!
எண்ணப் படியே செயலாற்றும்
இயல்பைத் தருவது திருக்குறளாம்!

தினமும் ஒரு குறள் படிப்பதனால்
தெரியும் நன்மை தீமையெல்லாம்!
மனதில் பிறரைத் தம்மைப் போல்
மதிக்கச் சொல்லும் திருக்குறளாம்!

யார்க்கும் நன்மை செய்வதெனும்
அன்பை வளர்க்கும் திருக்குறளாம்
வேர்க்க உழைக்கும் மனிதர்களே
வெல்வார் என்னும் திருக்குறளாம்!     

 - கவிஞர். செல்ல. கணபதி 

 

 

kamali

கவிஞர்.செல்ல.கணபதி அவர்களின் இதர படைப்புகள

முந்தைய சிறுவர் பகுதிக்குச் செல்ல

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.