........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 சிறுவர் பகுதி-9     -கவிதை

தாய்மொழி

பாலூட்டக் கைப்பிள்ளை வளரும்
பாசமதை பிள்ளை மனம் உணரும்
தாலாட்ட அன்னைமொழி தெரியும்
தமிழென்ற மொழி இனிமை புரியும்

தாய்நாட்டில் தமிழ்மொழிதான் வேண்டும்
தாய்பேசும் மொழியன்றோ வேதம்
தாய்மொழியில் கற்கின்ற போது
தானாகப் புரிந்து கொள்ளத் தோது!

மொழிபெயர்த்துச் சொல்லாமல் என்றும்
மொழியறிவைப் புகட்டுபவள் அன்னை!
அழிவறியா ஆற்றலினை ஊட்டும்
அன்னைமொழி ஆராரோ பாட்டு!

சுதந்திரத்தை நாம்பெற்ற போதும்
சுதந்தரமாய்த் தாய்மொழியில் ஓதும்
சுதந்திரத்தைக் கொண்டாட வில்லை
சுமையாகப் பிறமொழியைக் கற்போம்!

தாய்மொழியால் சத்தியமாய்த் தகுதி
தானாக உயர்ந்துவிடும் மிகுதி!
தாய்மொழியில் கல்வியினைக் கற்போம்
சாதனையால் தலைநிமிர்ந்து நிற்போம்!     

 - கவிஞர். செல்ல. கணபதி 

 

 

kamali

கவிஞர்.செல்ல.கணபதி அவர்களின் இதர படைப்புகள

முந்தைய சிறுவர் பகுதிக்குச் செல்ல

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.