........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

உதவிக்களம்-4

சந்தேகங்களும்-பதில்களும்

உடல்நலக் குறைவால் தொடர முடியாமல் போன பொறியியல் கல்வியை மீண்டும் தொடர முடியுமா?   ( ஆர்.சரவணன்,  கோவில்பட்டி.)

தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர் உடல்நலக் குறைவு, குடும்பச் சூழ்நிலை அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் படிப்பைத் தொடர முடியாமல் இடையில் நின்று கொண்டவர்களுக்கு மீண்டும் அந்த பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.  

இதற்கான விண்ணப்பப் படிவத்தினை தொழில்நுட்பக் கல்வி அலுவலகத்தில் பெற்று அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து அந்தக் கல்லூரி முதல்வர் ஒப்புதலுடன் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிப்பவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு / நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட நாள், மாதம்,  வருடம் மற்றும் பிரிவு போன்றவைகளுடன் அந்த பிரிவில் மாணவர் சேர்த்துக் கொள்ளப்பட்ட அரசு / நிர்வாக ஒதுக்கீடு இடம் போன்றவை குறிப்பிடப்படுவதுடன் அந்த சேர்க்கை தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடித எண் மற்றும் நாள் போன்றவை தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் மாணவர் விலகிய காரணம், விலகிய போது படித்த பருவம் மற்றும் வருடம், மாணவர் படித்த காலத்தின் வருகை சான்று போன்றவையும் தெரிவிக்கப்பட வேண்டும். உடல்நலக் குறைவால் இடையில் படிப்பை நிறுத்தியவர்கள் தற்போது கல்வி கற்கத் தேவையான மருத்துவ  தகுதிச் சான்றிதழை அரசு பதிவு பெற்ற மருத்துவரிடம் வாங்கி இணைக்க வேண்டும்.

தாங்கள் படித்த கல்லூரியின் முதல்வரை அணுகினால்,  உங்களுக்கு மேலும் அதிகமான விபரங்கள் கிடைக்கும்.

பதில் அளித்து உதவியவர்:

பி.ரமேஷ்பாபு மகாராஜன் B.E., M.B.A.,
உதவிப் பேராசிரியர்,
பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி,
திம்மரசநாயக்கனூர்,
ஆண்டிபட்டி.

ஓவியப் பயிற்சி ஆசிரியராக ஆசைப்படுகிறேன். அதற்கான ஆசிரியர் பயிற்சிக்கு எங்கு செல்ல வேண்டும்?  ( பி.செல்வலட்சுமி, திருக்கோவிலூர்.)

மிழ்நாடு அரசு, மாணவர்கள் படிக்கும் காலத்திலேய கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், தையல், விவசாயம், தச்சர், நெசவு போன்ற தொழிற்பயிற்சி ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியர் நிலையில் பணியமர்த்தியுள்ளது. தற்போது பெரும்பாலான பள்ளிகளில் விவசாயம், தச்சர்,நெசவு போன்ற  தொழிற்பயிற்சி ஆசிரியர்கள் பணியிடம் நிறுத்தப்பட்டு விட்டது. ஓவியம், தையல் போன்ற தொழிற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிகளில் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசால் ஓவியப் பயிற்சியில் இளநிலை, உயர்நிலை தொழில்நுட்பச் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வில் உயர்நிலை சான்றிதழ் தேர்ச்சி பெற்றவர்கள் அதன் பிறகு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி முடிவில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த தொழில் ஆசிரியர் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பள்ளிகளில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றலாம். ஓவியப் பயிற்சியின் இளநிலை, உயர்நிலை சான்றிதழ் தேர்வுகள் குறித்தும், தொழில் ஆசிரியர் சான்றிதழ் தேர்வு குறித்தும் தனித்தனியாக  தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியாகும். அதைப் பார்த்து விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

பதில் அளித்து உதவியவர்: 

ஆர்.சுப்பிரமணியன்,
ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்,
நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.

முந்தைய உதவிக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.