........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:131

வலிகளே உனது வலிமை...

வலிகளே உனது வலிமை - பெண்ணே
வருந்தாதே இது உனது உடைமை!
வானுறை தெய்வத்தின் மேலாய் - பெண்ணை
வாழ்த்துகின்ற காரணத்தினாலே!                                                  

(வலிகளே)

கன்னிப் பருவமதை எய்திடும்போதும்
காதலுடன் காளையவனைக் கூடும்போதும்
பத்துமாதப் பந்தமொன்றைப் பெறும்போதும்
பாலையுண்ணும் சிசுமார்பி லுதைக்கும்போதும்    

(வலிகளே)

உற்றார் உறவினர் உயர்வுக்கும்
உனைச்சார்ந்த உறவுகளின் மேன்மைக்கும்
உள்ளமிரங்கி நீ யாற்றும் பணிகள்தன்னில்
உடல்வருத்தி யுழைப்பதினால் தோன்றுகிற                    

 (வலிகளே)

ஏற்றம்பிடித்து நீரை நீ இறைக்கும்போதும்
நாற்றாங்காலில் நடவதனைச் செய்யுபோதும்
விளையும் பயிர் வீடுவந்து சேரும்வரை
வெயில்பனி உளைச்சலினால் விளைகின்ற                  

 (வலிகளே)

வலியின் விளைவு வசந்தமெனில் - அந்த
வசந்தத்தின் வரவு நிலைக்குமெனில்
வலிகளே உனது உடன்பிறப்பு - அதை
வரவேற்பதே உனது தனிச்சிறப்பு!

 (வலிகளே)

- தனலட்சுமி பாஸ்கரன், திருச்சிராப்பள்ளி

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.