........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:188

சத்தியத்திற்கு வந்த சோதனை.

வாழ்க்கைக்கு அர்த்தத்தை
வகைப்படுத்த முடியாமல்
வீழ்ச்சியின் விளிம்பில்
விளக்குப் பூச்சிகளாய்
விடிவெள்ளி என்பதே தெரியாமல்
விடியலைப் பார்ப்பது தான் வேதனை.

சமத்துவம் என்பது
சாத்தியப் படாமல்
நித்தம் சாவை 
நேரில் பார்ப்பது
சத்தியத்திற்கு வந்த சோதனை.
இன்னும் எத்தனை காலத்திற்கு
ஈழத்தமிழனுக்கு விதிக்கப்பட்டிருக்கும்
இந்த மீளாத்துயரமெனும் நிந்தனை.

-சித. அருணாசலம், சிங்கப்பூர்.

 
m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.