........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 231

இதயமில்லாமல்...!

 

இதயம் என்பதே
இல்லாமலும் மனிதர்கள்
இருக்கிறார்கள் என்பதற்கு
இலங்கை அதிபராய் இருப்பவனும்
ஒரு உதாரணம்.

பாதுகாப்பு வளையமெனப்
பொதுவாகப் பெயர்வைத்து,
பயங்கரமாய்க் கொல்வதைப்
பகிரங்கமாக்குவது அவனுக்கு சாதாரணம்.

ஆறாவது அறிவு
அனாவசியமாகிப் போன
ஈழத் தமிழனுக்கு
இன்னும் கிடைக்கவில்லை நிவாரணம்.

கந்தல் துணிகளால்
பந்தலை உருவாக்கி
முகாமென்று மக்களை
முடக்கியிருப்பது தான் நிதர்சனம்.

-சித. அருணாசலம், சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.