........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 511

நினைவுகளைச் சுமந்து!

கண்கள் அழவில்லை
உன்னை
காணவில்லையென்று
உதடுகள் சொல்லவில்லை
உன்னிடம்
பேச வேண்டுமென்று
மனுசு வலிக்கவில்லை
உன்னை
பிரிந்திருக்கிறோமென்று
ஆனால்
இதயம் மட்டும்
விடாமல் துடிக்கின்றது
உன் நினைவுகளைச்
சுமந்து கொண்டு!
-------------------------
பேசக் கூடாது
என்று நினைக்கமாட்டேன்
வேண்டுமென்றே
பேசாமல் இருப்பேன்
நீ என்னிடம்
பேச நினைக்கிறாயா
என்று தெரிந்து கொள்ள!!
--------------------------
உன் மௌனம்
எனக்கு அதிகம் பிடிக்கும்
மற்றவரிடம் பேசாமல்
என்னிடம் மட்டுமே
நீ பேசும்போது!!!

-த.சத்யா, இராசபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.