........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:59

சேமித்து வைத்தது...!

படிக்கின்ற காலத்திலேயே
இலட்சாதிபதி ஆகிவிட
இலட்சிய கனவுகள்!

பட்டக் கல்வி முடித்து
ஈராண்டு அனுபவம் பெற்றதும்
தேடிவந்தது வெளிநாட்டு வேலை!

இலட்சத்தின் இலட்சியத்தை
நான் அடைந்த போது
இலட்சம் தன் மதிப்பிழந்தது!

வானமே எல்லை!
முயற்சி திருவினையாக்கும் -ஆகவே
கோடீஸ்வரன் ஆகும் ஆசை!

கோடியை நான் எட்டிய நேரம்
கோடிக்குக் கோடி
கோடியும் மதிப்பிழந்தது!

தாயகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்
முயற்சி உழைப்பு தியாகம்
அனைத்தும் விரயமாகப்பட்டது!

இருப்பினும் மனதில் அமைதியும் திருப்தியும்
சம்பளத்தைத் தான் சேமித்திருக்கிறோம்
சாபத்தை அல்ல...!

- இமாம்.கவுஸ் மொய்தீன். 

 

 

m
 

இமாம்.கவுஸ் மொய்தீன் அவர்களது மற்ற படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.