........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:61

காணாமல் போகும் முன்..!

என் நேசத்துக்குரிய ‘உனக்கு’
உன் மீது எனக்கிருந்த
பழைய காதலின்
நினைவுச் சுவடோடு எழுதுகிறேன்

உன்னை கையாள்வது
ஒரு கலை

தகவல்கள் எப்படியாயினும்
ஓர் பிணைப்போடுதான்
ஆரம்பிக்கப்படுவாய்

உலகம் முழுதும்
வியாப்பித்திருந்த உன்னை
ஓர் மூலையில் ஒதுக்கியதில்
நானும் ஒருவன்

என் விடுதிக்காலத்தில்
என் தேவைகளுக்காக
தூதுபோனது நீ தான்

நட்பு
காதல்
உறவு என
அத்தனைக்கும்
பாலமும், பலமும்
நீ தான்

உன்னை பாவிக்கும் போதில்
சிந்திக்கும்
அவகாசம் இருந்ததால்
நீ
நிதானத்தின் அடையாளமானாய்

முன்பொரு காலத்தில்
உன்னை
புறாவின் காலில்
கட்டி அனுப்பினார்கள்
பின்
முத்திரை குத்தி அனுப்பினார்கள்

இன்றோ
மனித முகவரி
எழுத்துகளில் இருந்து
எண்களாகி விட்டதால்
உன் அழகு
பராமரிக்கபடவில்லை

அதனால்தான்
நீ
காணாமல் போகும் முன்
கடிதமே!
உனக்கோர் கடிதம்
எழுதுகின்றேன்.

- சி.கருணாகரசு,  உ.நா.குடிக்காடு.

 

 

m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.