........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 667

யாரையும் நோகாத கனவு!

வலிக்காமல்
சலிக்காமல்
நினைவுகளிலிருந்து
அற்றுப் போகாமல்
நிஜம் பூத்த மலர்களின்
வாசத்தொடும்,
வரலாறாய் மட்டும்
மிகாமலும்,
முன்னேற்றப்
படிக்கட்டுகள்
நிறைந்த
பல்லடுக்கு
மாடிகளின்
முற்றத்தில் -
மல்லிகைப் பூக்க,
ஒற்றை
நிலாத் தெரிய,
மரம் செடி கொடிகளின்
அசைவில் -
சுகந்தக் காற்று
வீசும் - தென்றல்
பொழுதுகளுக்கிடையே;
வஞ்சனையின்றி -
உயிர்கள் அனைத்தும்
வாழ
யாரையும் நோகாமல் ஒரு -
கனவேனும் வேண்டும்!!

-வித்யாசாகர்.

 

 

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு