........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:68

மண்ணின் அரவணைப்பு

வேண்டிய புத்தகத்தைத்
தேடிக் களைப்படைந்த போது
புதுச்சாரலாய்த்
தென்பட்டது
பிறிதொரு புத்தகம்
அறிஞர் ஒருவரது.

அட அரியதாயிற்றே
என்று எனக்குள்ளே பேசியவாறு
புரட்டியபோது
கண்டுகொண்டேன்
எழுதியவரே கையெழுத்திட்டு
யாருக்கோ எங்கோ
கொடுத்த
முதல் பிரதி என்று.

கடைக்காரர் தூங்கிவிட்டால்
காற்றின் வருடலில்
உதிர்ந்து விடக்கூடும்
அதன் இதழ்கள்.

காசு கொடுத்துவிட்டு
வாங்கிக்கொண்டு போகும்போது
தேநீர்க்கடை வானொலியில்
மரண செய்தி
புறக்கணிக்கப்பட்ட முதியவராம்
குப்பைத்தொட்டி அருகில்

புதைந்து போகும்
கவனிப்பாரற்ற புதையல்களுக்குக்
கிடைப்பது
மண்ணின் அரவணைப்பு மட்டும்.

-மாதங்கி, சிங்கப்பூர்.      

 

m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.