........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன் மொழிகள் மந்தப்புத்தியுடைய சோம்பேறி
ஒரு தவறு செய்யும் மனிதன் அதைத் திருத்திக் கொள்ளாவிட்டால் அதுவும் ஒரு
தவறாகி விடும்.
- கன்பூஷியஸ்
எல்லா இடங்களிலும் கடவுள் இருக்க முடியாது. ஆகவே அவர் தாயைப் படைத்தார்.
-யூதர்
கடனாளியாகக் காலையில் எழுவதை விட இரவு பட்டினியாய்ப் படுப்பது மேல்.
-பெஞ்சமின் பிராங்க்ளின்
உலக ஆசைகளால் உந்தப்பட்டு, ஒவ்வொரு ஆசையையும் அனுபவித்து பூர்த்தி செய்ய
மனிதன் துடிப்பது, எரியும் நெருப்பை அணைக்க அதில் மேலும் மேலும் நெய்யை
ஊற்றுவதற்குச் சமம்.
-ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
சமயம் என்பது மெய்யுணர்வை அறிதல். அது அழகுப் பேச்சோ, தத்துவமோ, சித்தாந்தமோ
அல்ல.
-சுவாமி விவேகானந்தர்.
எவன் உரிய வேளையில் விழித்து எழாமலும், உடல் பலமிருந்தும் சோம்பலில் ஆழ்ந்த
கருத்திலும், சிந்தனையிலும் உறுதியற்று இருக்கிறானோ, அந்த
மந்தப்புத்தியுடைய சோம்பேறி ஞானமார்க்கத்தை அடைய முடியாது.
-புத்தர்.
இழிய புழுவையும் கொடிய குற்றவாளியையும் நேசிக்க உன்னால் முடியாவிட்டால், உன்
உள்ளத்துல் இறைவனை ஏற்றுக் கொண்டுள்ளதாக எவ்வாறு நீ நம்ப முடியும்?
-ஸ்ரீ அரவிந்தர்.
சோதனைகளும் துன்பங்களும் எந்த அளவிற்கு கடினமாக இருக்கின்றனவோ அதற்குப்
பரிகாரமாக அந்த அளவுக்கு வெகுமதி கிடைக்கிறது. மேலும் எந்த அளவுக்கு
சோதனைகள் நடக்கின்றனவோ அந்த அளவுக்கு இறைவனுடைய கருணையும் கிடைக்கும்.
-நபிகள் நாயகம்(ஸல்)
தீமையான காரியங்கள் நடக்கும் போது நல்ல காரியங்களும் நடக்கின்றன. அந்தக்
கடினமான நேரங்களில், எத்தனை நண்பர்களும், குடும்பங்களும் நமக்கு உதவி
செய்தனர். என்பதைக் கவனித்துப் பார். அது நமக்கு ஒரு நன்மையான காரியமாக
இருக்கும்.
-இயேசு கிறிஸ்து.
தொகுப்பு: தாமரைச்செல்வி
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.