........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் நல்ல காரியத்திற்குப் பயப்படலாமா?
மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான
துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும்
"துணிவு" என்ற
எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும்
போட வேண்டும் அப்போதுதான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.
- அய்டா.
மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூடக்
கண்டுபிடித்து விடுகிறான்.
- அலெக்ஸாண்டர் ப்ளெமிங்.
நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர்
மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல்
முக்கியமானதாகும்.
- நார்மன் வின்சென்ட்டில்.
கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில்
எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச்
சொன்னால் கண்டிப்பாகத் தோற்று விடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை
அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த
வாழ்க்கையாகும்.
- ஜார்ஜ் எலியட்.
இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால்,
பிரார்த்தனையோ அவரைப் பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும்
நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது.
- மாட்டிகாஸ் பெரீன்.
யார் யார் நம்மீது நம்பிக்கை
வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை
உள்ளவர்களே.
- ஜார்ஜ் எலியட்.
'திடும்' எனப் பொங்கிச் செயலாற்றும் கடல்
நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இதுபோல், வாழ்க்கைப்
போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்கக்
கற்றுக் கொள்ள வேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும்
சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
- டப்ஃபீல்டு.
எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக்
கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும்
சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத்
திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும்,
எளிமையாக வாழும் போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத்
துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.
- ஜே.ஆர்.லோவெல்.
நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும்
பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
- நெப்பொலியன் ஹில்.
மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து
முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப்
பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய
வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத்
துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும்.
தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
- டாக்டர் ஜான்சன்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்.
அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன
உறுதியாய் இருக்கும்.
- புனித பைபிள் கொரிந்தியர்.
அன்பு நிறைந்த ஒருவர், மனிதர் படும்
துன்பங்களைக் காட்டிலும், விலங்குகள் படும் துன்பத்தைச் சகித்துக் கொள்ளமாட்டார்.
- ரோமெயின் ரோலந்து.
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும்
தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
- கன்ஃப்யூஷியஸ்.
- தொகுப்பு: தாமரைச்செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.