இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
சங்க இலக்கியக் கதைகள்

எருமைப் பாடம்

முனைவர் ப. பாண்டியராசா


பின்னால் கொல்லைப் பக்கத்திலிருந்து ஏதோ ஒரு பெருஞ்சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்தாள் முல்லை. பகலெல்லாம் வேலை செய்த அலுப்பில் பக்கத்தில் அடித்துப் போட்டதைப் போல் சுருண்டு கிடந்தாள் பொன்னி. அந்த வீட்டு வேலைக்காரி. முல்லைக்கு எல்லாம் அவள்தான். அதுவும் குழந்தை பிறந்த இந்தச் சில நாட்களாய்ப் பொன்னிக்கு மூச்சுமுட்ட வேலை. இரவெல்லாம் அப்பப்போ ‘நை நை’ என்று சிணுங்கிக் கொண்டிருக்கும் குழந்தை கூடக் கண்ணயர்ந்து உறங்கிக் கிடந்தது. மாடக்குழியில் கைவிளக்கு ‘முணுக் முணுக்’-கென்று எரிந்துகொண்டிருந்தது. முதலில் கேட்ட சத்தம் இப்போது கேட்கவில்லை. இருப்பினும் முல்லைக்கு மனசு கேட்கவில்லை. “அடீ, பொன்னி” என்று உரத்தும் இல்லாமல், குசுகுசுவென்றும் இல்லாமல் அடித்தொண்டையில் குரலெழுப்பிக் கூப்பிட்டாள் முல்லை. திடுக்கிட்டு எழுந்த பொன்னி, “என்ன மதினி, கூப்பிட்டியா?” என்று கேட்டாள். “பின்னாடி என்னமோ ஒரு சத்தம் கேட்டிச்சு, அத என்னாண்டு போய்ப் பாரேன்” என்றாள் முல்லை. எழுந்து உட்கார்ந்து சேலையைச் சரிசெய்துகொண்டு, அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்தவாறு பொன்னி எழுந்து போனாள். பின்கதவுத் தாழ்ப்பாளை நீக்கி மெல்லத் திறந்து பார்த்தாள்.

பார்த்தவள் திடுக்கிட்டாள். பின்பக்க முள்வேலி சாய்ந்து கிடந்தது. மெதுவாக எட்டி வலப்பக்கம் பார்த்தாள். அங்கே கட்டிக்கிடந்த எருமையைக் காணோம்! புரிந்து கொண்டாள். கதவை மீண்டும் அடைத்துத் தாளிட்டுப் படுக்கைக்கு வந்தாள். “அந்தச் சனியந்தான், அத்துகிட்டுப் போயிருச்சு” என்றாள். “என்னாடி சொல்ற, நம்ம அன்னத்தாயியவா?” என்று கேட்டாள் முல்லை. “ஆமா, நீதான் அன்னத்தாயி, அன்னத்தாயி-ன்னு கொஞ்சிக்கிடணும், விசுவாசங்கெட்ட நாயி, வெடுக்கின்னு பிடுங்கிக்கிட்டுப் போயிடுச்சில்ல, அதுவும் அர்த்தச் சாமத்தில” என்றாள் பொன்னி.

“இந்த நேரத்துல அது எங்கடி போயிருக்கும்?”

“கழுத கெட்டாக் குட்டிச் சுவரு, அந்தப் பாழாப்போன சகதிக்குள்ள போயி, ‘சதக், சதக்’-குன்னு செடிகொடியெல்லாம் ஒளப்பி, குளத்துல கெடக்குற பூவப் பறிச்சுத் திங்கத்தான்”

“ஏண்டி, அத நல்லாக் கட்டிப் போடலியா?”

“கட்டெல்லாம் நல்லாத்தான் போட்டிருந்தேன். இத்தாந்தண்டிக் கயறு. அதையுமில்ல அத்துட்டுப் போயிருக்கு, வரட்டும் பேசிக்கிறேன்”

“ஏண்டி, அதுக்கு இங்க என்னடீ கொற வச்சோம்?”

“திமிரு மதினி, கொள்ளத் திமிரு. இவ என்னா செங்சுருவா-ங்கிற தெகிரியம். நீ தூங்குத்தா, பிள்ளத்தாச்சிக்காரி, காலைல பேசிக்கலாம்... வீட்ல இருக்குறவகளே வெளிய மேயப்போனா... எருமைக்குக்கூட எளக்காரமாப் போச்சு”

“ஆரம்பிச்சுட்டியா, ஒம் புராணத்த, செத்த நிறுத்திட்டுத் தூங்கு”


“க்குங்”

சற்றுநேரம்தான் கழிந்திருக்கும். மீண்டும் பின்னால் ஏதோ அரவம் கேட்டது. ஏதோ ஆள் நடமாட்டம் மாதிரி. பின் அமைதி. இப்போது பின் கதவை யாரோ தட்டுகிற மாதிரி ஒரு சத்தம் கேட்டது.

“என்னாடீ இது, பெருச்சாளி வந்து முட்டுதோ, உள்ள வந்து என்னத்த மேயப்போகுது? என்றாள் முல்லை.

“மேயவந்த பெருச்சாளி இல்ல மதினி, இது மேயப்போன பெருச்சாளி, ரெண்டுகால் பெருச்சாளி. ந்தா பாத்துட்டு வர்ரேன்” என்றவாறு மீண்டும் எழுந்து பின்பக்கம் போனாள் பொன்னி.

பின்கதவுத் தாழைச் சத்தமில்லாமல் நீக்கி, கொஞ்சமாய் மெல்லத் திறந்து கழுத்தை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள்.

அவள் எதிர்பார்த்தபடியே அங்கே நின்றிருந்தான் அவன் - அவள் அண்ணாச்சி என்று அழைக்கும் அந்த வீட்டுச் சொந்தக்காரன்.

“இங்க எதுக்கு வந்த?” கடுகாய் வெடித்தாள் பொன்னி.

“கோவிக்காத பொன்னி, கதவத் தெற. அப்பொறம் பேசிக்கலாம்”

“நீ யாரு, ஒங்கிட்டாப்போயி நான் கோவிச்சுக்கிற?”

“இப்ப நான் என்ன பண்ணிட்டேன்-ங்கிற?”

“நான் ஒண்ணும் சொல்லல, சாமீ, ஊரு சொல்லுது”

“என்னாண்டு?”


“மழயப் போல ஒழுகவிட்டுத் திரியற ஒரு கூந்தலழகியக் கூட்டிவந்து, ‘இவதான் ஒம் மதினிக்குச் சக்களத்தி’-ன்னு நையாண்டி பண்ணிட்டுப் போகுது கூட்டம். அத நான் சொல்லமாட்டேன். நல்லா இரு.. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். மதுரக் கோட்ட மகாராசா கூட மகிந்துபோறாரு, இந்த நெல்லு வெளையுற அள்ளூரப் பாத்து. இந்த அள்ளுரப் போல அம்புட்டு அழகி எம் மதினி. அவ மெலிஞ்சுபோயி, தோலும் துருத்தியுமா நின்னாக்கூட இந்தப் பக்கம் வரவேண்டாம், போயிரு, ஒன்ன இங்க யாரும் தாங்கிக்கிட்டு இல்ல”

இனிக் காரியம் நடக்காது என்று திரும்ப எத்தனித்தவனைப் பார்த்துக் கூறினாள் பொன்னி, “இந்தா, பொழுதிருக்க என்னாத்தயோ எழுதிக்கிட்டு இருந்துச்சு எம் மதினி. ஒனக்காத்தான் இருக்கும். இத என்னண்டு பாரு” என்றவாறு இடுப்பில் தான் செருகி வைத்திருந்த இரண்டொரு ஓலைகளை எடுத்து அவனிடம் தந்தாள் பொன்னி.

நன்கு விடிந்தபின், வயல்காட்டு வரப்பில், வேப்பங்குச்சியால் பல்லை விளக்கியவாறு அந்த ஓலைகளை ஒவ்வொன்றாகப் படித்தான் அவன்.

“சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய,
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர -
யாரையோ நின் புலக்கேம்? வாருற்று
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல்
பிறரும் ஒருத்தியை, நம் மனைத் தந்து
“வதுவை அயர்ந்தனை” என்ப; அஃது யாம்
கூறேம்; வாழியர் எந்தை! செறுநர்
களிறுடை அரும் சமம் ததைய நூறும்
ஒளிறு வாள் தானை கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன, என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க,
சென்றி பெரும, நின் தகைக்குநர் யாரோ!”

( அகநானூறு - பாடல் 46 : பாடியவர் : அள்ளூர் நன்முல்லையார், திணை : மருதத் திணை, துறை : வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது )

அருஞ்சொற் பொருள்

முனைஇய= வெறுத்த; காரான்=கரிய நிறமுள்ள ஆன், எருமை; மடி=துயில்கொள்; கங்குல்=இரவு; நோன்=வலிய; தளை=கட்டு; பரிந்து=அறுத்துக்கொண்டு; கோட்டின்=கொம்பால்; பழனம்=குளம்; தூம்பு=உள்துளை; ஆரும்=உண்ணும்; உறை=மழை; தகைக்குநர்=தடுப்பவர்.


பாடலின் பின்புலமும் பாடல் சுருக்கமும்

ஒரு தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தை வீட்டுக்குச் சென்றுவிட்டான். அதனால் மனம் நொந்து இருக்கிறாள் தலைவி. ஒருநாள் இரவில் தலைவன் வீடு திரும்புகிறான். வாசலிலேயே அவனை மறித்த தலைவியின் தோழி, அவனை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். உன் விருப்பப்படி நீ எங்கு சென்றாலும் இங்கு கவலைப்பட ஆளில்லை என்று வெகு காட்டமாகவே தலைவனிடம் கூறுகிறாள். சங்க இலக்கியங்களில் இதற்கு வாயில் மறுப்பு என்று பெயர்.

( குறிப்பு: இது ஒரு நாடகப் பாங்கு. இதனால் பெரும்பாலான சங்க காலத்து மக்கள் பரத்தையரிடம் சென்று வந்தனர் என்று கொள்ளக்கூடாது. ஒரு சிலர் இருந்திருக்கலாம். அது எந்தக் காலத்திலும் உண்டு)

அடிநேர் உரை

சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
ஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு
கூரான முள்ளாலான வேலியைத் தனது கொம்பினால் தட்டிவிட்டு
நீர் மிக்க குளத்தில் மீன்கள் எல்லாம் வெருண்டோட
அழகிய துளையையுடைய வள்ளைக்கொடியைச் சிதைத்துக்கொண்டு, தாமரையின்
வண்டுகள் ஒலியெழுப்பும் குளிர்ந்த மலரை ஆசையுடன் தின்னும் ஊரனே!
உன்னை யாம் கடிந்துகொள்வதற்கு நீ யாரோ? நீளத் தொங்கவிடப்பட்டு
மேகங்கள் இறங்குவதைக் காட்டிலும் (மிக்க அழகுடன்) பளபளப்புடன் விளங்கித் தாழ்ந்திருக்கும் கரிய கூந்தலையுடையவள்
ஒருத்தியை, இவ்வூரார் நம் மனைக்குக் கூட்டிவந்து
“நீ அவளை மணந்தாய்” என்று கூறினர்; அதனை நாங்கள்
கூறவில்லை; நீ வாழ்வாயாக! பகைவரின்
யானைப் படையைக் கொண்ட அரிய போரினை சிதையுமாறு கொல்லும்
ஒளிவீசும் வாள்படையைக் கொண்ட வெற்றி பொருந்திய செழியனது
நெல்பொலி கொண்ட அள்ளூர் நகரைப் போன்ற, எனது
ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;
போய்விடு பெருந்தகையே! உன்னைத் தடுப்பவர் யாருமில்லை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/classicalliterature/p2.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License