இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

50. தீப்பாஞ்ச அம்மன்


எல்லாக் கிராமங்கள்லயும் சிறுதெய்வங்கள் உண்டு. அச்சிறுதெய்வங்கள் ஒவ்வொன்னுக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறுக்கு ஒரு காரணமும் இருக்கும். கதையும் இருக்கும். தமிழகத்துல நெறைய அம்மன் கோயில்கள் இருக்குது. அதுலயும் புதுக்கோட்டை மாவட்டத்துல கொஞ்சம் கூடுதலாவே அம்மன் கோயில்கள் இருக்குது.

ஒவ்வொரு அம்மனுக்கும் ஒரு பேரு உண்டு. தீப்பாஞ்ச அம்மன்னு ஒரு கிராம தேவதை இருக்கு. அந்த அம்மனப் பத்தின கதை நெஞ்சைக் கரைய வைக்கும்.

ஒரு விவசாயி வீட்டுல ஏழு அண்ணன் தம்பிகளுக்கு ஒரே ஒரு தங்கச்சி இருந்துச்சு. அந்த ஏழு பேரும் அந்தத் தங்கச்சி மேல ரொம்ப உசிரா இருந்தாங்களாம். எல்லாரையும் விட அந்தத் தங்கச்சி அறிவானவளா இருந்தா. அவ சின்னப் பிள்ளயைா இருந்ததால வெளையாட்டுத் தனம் அதிகமா அவகிட்ட இருந்துச்சு.

ஒருநாளு அந்த கிராமத்துக்கு ஒரு குரங்காட்டி குரங்கப் பிடிச்சிக்கிட்டு வந்தான். அவன் அந்தக் குரங்க வச்சி வித்தையக் காட்டுனான். தங்கச்சிகாரி சின்னப் பொண்ணுங்கறதால அந்தப் பிள்ளை அந்தக் குரங்காட்டி பின்னால போயி அவங்காட்டுற வித்தையப் பாத்துக்கிட்டே இருந்தா.

இப்படி இருந்ததால அவ அந்தக் குரங்காட்டி பின்னால போயிட்டா. அவ கிராமத்த விட்டுட்டு பக்கத்துக் கிராமத்துக்கு அந்தக் குராங்காட்டியோட போயிட்டா.

பொழுது போயிருச்சு. இருட்ட ஆரம்பிச்சதால அவளுக்குத் திரும்பி தன்னோட கிராமத்துக்கு வர்றதுக்குப் பயந்துக்கிட்டு அந்த ஊருல இருந்த கோயில்ல தங்கிட்டா. தங்களோட தங்கச்சியக் காணமே காணமேன்னு ஏழு அண்ணன்களும் ஒவ்வொரு இடமாப் போயித் தேடுனாங்க. கடைசி வரைக்கும் அவங்களால கண்டுபிடிக்க முடியல.

அண்ணன்களுக்குக் குழப்பமா இருந்துச்சு. இராத்திரி முச்சூடும் ஏழு அண்ணன்களும் தங்கச்சிய நெனச்சி நெனச்சி அழுது பொலம்பிக்கிட்டு இருந்தாங்க. இராத்திரிப் பொழுது விடிஞ்சிரிச்சு. மறுபடியும் தங்கச்சியத் தேடத் தொடங்கினாங்க.

இராத்திரி முழுக்கப் பக்கத்தூருக் கோயில்ல இருந்த அந்தச் சின்னப்பிள்ளையான தங்கச்சிகாரி ஐயையோ நம்ம அண்ணனுங்க தேடுவானுகளேன்னுட்டு அரக்கப் பரக்க வேகவேகமா ஓட்டமும் நடையுமா தன்னோட கிராமத்த நோக்கி ஓடியாந்தா. அப்படி ஓடியாரபோது அவளோட கிராமத்து எல்லையில அவளோட அண்ணனுங்க அவளத் தேடிக்கிட்டு வந்தவனுங்க அவளைப் பாத்துட்டானுக.

அவங்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் மனசுக்குள்ளாற ஆத்திரமும் அழுகையுமா இருந்துச்சு. அவனுகளப் பாத்த தங்கச்சி அழுதா. அவனுக அவள அழுகாதன்னு சொல்லிக் கிராமத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்தானுக. அப்ப மூத்தவன் தங்கச்சிக்கிட்ட, ‘‘ஏத்தா எங்கத்தா போன?’’ன்னு கேட்டான்.

அதுக்கு அவ, “நேத்து குரங்காட்டி நம்ம ஊருக்குள்ளாற வந்தான். குரங்க வச்சி வித்தை காட்டிக்கிட்டு இருந்தான். அதப் பாத்துக்கிட்டே அவன் பின்னால நான் போயிட்டேன். பக்கத்தூருக்குப் போயிட்டுத் திரும்ப வந்துரலாம்னு பாத்தேன் இருட்டிப் போச்சு. அதனால அந்த ஊருக் கோயில்ல படுத்துருந்துட்டு விடிஞ்ச ஒடனே இப்பத்தான் வந்தேன்னு” சொன்னா.



இருந்தாலும் மூத்தவனுக்கு மனசு ஆறல, “நீயி சொல்றது எல்லாஞ் சரித்தான். ஆனா இந்த ஊருக்காரவுங்க ஒன்னயப் பத்தித் தப்பால்ல பேசுறாங்க. அந்த குரங்காட்டிகூடப் போயிட்டான்னு தப்பாப் பேசுறாங்க... எங்க மானமே போகுது. இப்பவே இந்தக் குரங்காட்டி கூடப் போனவ இன்னும் வளந்த பெறகு எப்படி இருப்பாளோன்னு தெரியலையே”ன்னு சொல்றாங்க. எங்களால தலைநிமிர்ந்து நடக்க முடியல. என்ன செய்யிறது. எங்களுக்கு இருக்கறது ஒரே ஒரு தங்கச்சி. அதனால எங்களால என்ன செய்யிறதுன்னு தெரியல’’ அப்படீன்னு சொன்னான்.

அதக் கேட்ட அந்த தங்கச்சிகாரி, “அண்ணே எனக்காக நீங்க யாரும் மானத்தை இழக்க வேண்டாம். ஏம்மேல நெருப்பப் பத்தவச்சிக் கொன்னுருங்க. நான் சின்னப் பிள்ளை. என்னையப் பாத்து இந்த ஊரு தப்பாப் பேசுது. இப்ப மட்டும் பேசாது. நான் பெரியபுள்ளையானாலும் பேசிக்கிட்டுத்தான் இருக்கும். ஒங்க தங்கச்சி ஒங்களுக்கு எப்பவும் நலல பேரத்தான் எடுத்துக் குடுப்பா. ஏம்மேல தீப்பத்த வைக்காட்டியும் இங்க ஒரு குழிய வெட்டி தீயப் பத்த வச்சி எறிங்க நான் அதுல விழுந்து இறந்து போயிடறேன்”னு அழுதுக்கிட்டேச் சொன்னா.

அதக் கேட்ட அண்ணனுங்க அழுதுகிட்டே இருந்தானுங்க. அவனுங்க அதுக்கு முன்வரலை. அதப் பாத்த தங்கச்சிகாரி அங்கன கெடந்த பட்ட வெறகு, மரங்குச்சி சருகு எல்லாத்தையும் ஒன்னா அள்ளிக் குமுச்சு சிக்கி முக்கிக் கல்லை எடுத்து ஒரசி தீப்பத்த வச்சி அதுல விழுந்து செத்துப் போயிட்டா. அதக் கண்ட அண்ணனுக ஐயோ நம்ம தங்கச்சி அநியாயமா நெருப்புல விழுந்து எரிஞ்சிட்டாளே இனிமே நாம ஏன் உயிரோட இருக்கணும்னு நெனச்சிக்கிட்டு அவங்களும் தங்களோட கழுத்தை ஒவ்வொருத்தரும் அறுத்துக்கிட்டு இறந்துட்டாங்க.



இந்தமாதிரி அண்ணன்களும் தங்கச்சியும் இறந்து போனதப் பாத்த ஊரு ஜனங்க... அலறி அடிச்சிக்கிட்டு அந்தப் பக்கமா வந்தாங்க. அப்படி வந்தவங்க அங்க எட்டு பேரு எரிஞ்சி சாம்பலாக் கிடக்கிறதப் பாத்துட்டு அழுதாங்க. அப்ப அங்க இருந்த ஒரு சின்னப் பொம்பளப்பிள்ள மேல சாமி வந்து, “டேய் நான்தான் நெருப்புல பாஞ்சி இறந்து போன சின்னப்புள்ள வந்துருக்கேன்டா. இந்த ஊரு நல்லா இருக்கணுமின்னா என்னையச் சாமியா நெனச்சிக் கும்பிடுங்க ஒங்கள நல்லா வச்சிக்கிறேன்”னு சொன்னது. அதக் கேட்ட ஊர் ஜனங்களும் சரி இனிமே ஒன்னைய தீப்பாஞ்ச அம்மனா நெனச்சிக் கும்புட்டுக்கிட்டு வர்றோம். எங்கள நல்லா வச்சிக்கோன்னு சொல்லிக் கும்புட்டு விழுந்தாங்களாம். அன்னியிலிருந்து இன்னைக்கு வரைக்கும் இந்த வட்டாரத்துல இருக்கற குமராபட்டி உள்ளிட்ட அந்தப் பகுதி மக்களாள தீப்பாஞ்ச அம்மன் பூத்திருவிழா கொண்டாடப்பட்டு வருது. மக்களும் நல்லா இருக்கறாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1ax.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License