இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

73. உண்மையான துறவி


அரசருடைய தலைமையில அரசவை நடந்துக்கிட்டு இருந்தது. அப்பப் பாத்து அரசர் ஒரு கருத்தைச் சொன்னாரு. அது என்னதுன்னா, ‘‘இந்த உலகத்துல உண்மையான துறவியப் பாக்கவே முடியாது. எல்லாரும் போலித் துறவிங்க. துறவுன்னு சொல்லிக்கிட்டு நாட்ட ஏமாத்திக்கிட்டு இருக்கறாங்க’’என்பதுதான் அந்தக் கருத்து.

அந்தக் கருத்தை அரசர் சொல்லிட்டு அவையைப் பார்த்து, ‘‘நான் சொன்ன கருத்த யாராவது மறுக்க முடியுமா? மறுக்க முடியும்னா அதை யாரா இருந்தாலும் நிரூபிச்சிக் காட்டணும்’’ அப்படீன்னு கேட்டாரு.

அப்ப அவையில இருந்த அத்தனை பேரும் அரசருக்கு எதிரா எப்படி மறுத்துச் சொல்றது. அப்படி மறுத்துப் பேசினா ராஜதுரோகக் குற்றம்னு அரசர் நினைக்க மாட்டாரா? அதனால நமக்கு ஏன் வம்புன்னு பேசாம இருந்துட்டாங்க.

ஆனா அங்க உள்ள ஒரு மூத்த அமைச்சரால அப்படி சும்மா இருக்க முடியல. அவரு உடனே எழுந்து, ‘‘அரசே உண்மையான துறவிங்களும் இந்த உலகத்துல இருக்கறாங்க. நீங்க போலியான துறவிகளப் பாத்ததுனால இப்படிச் சொல்றீங்க. எதையும் விரும்பாத துறவையே பெரிதா நினைக்கிற துறவிங்க இருக்கறாங்க. அப்படிப்பட்ட துறவிகள நான் பாத்திருக்கேன்’’னு சொன்னாரு.

அரசர், ‘‘அப்படியா! ரொம்ப ஆச்சரியமா இருக்கே. சரி. நாளைக்கு நீங்க சந்தித்த அந்தத் துறவிய நாங்க எல்லாரும் பார்க்க வர்றோம். அவரு உண்மையான துறவியா இல்லையாங்கறத சோதனை செஞ்சி முடிவு செய்யறோம்’’னு சொன்னாரு. சரின்னு அந்த மூத்த அமைச்சர் ஒத்துக்கிட்டு துறவியத் தேடிப் போனாரு.

மூத்த அமைச்சருக்கு எங்க தேடியும் துறவியச் சந்திக்க முடியல. அவருக்கு மனசுல ஒரு யோசனை தோணிச்சி. அந்த ஊருக்குப் பக்கத்து ஊருல இருக்கற ஒரு திறமையான நடிகரைப் பாத்து துறவி வேடம் போடச் சொல்வோம்னு நெனச்சிக்கிட்டு அவரைப் பார்க்கப் போனாரு.

அந்த நடிகரைப் பாத்துத் தனக்கும் அரசருக்கும் இடையில நடந்தவைகளை எடுத்துச் சொல்லி, ‘‘நீங்க துறவியா நடிக்கணும். அதுக்கு நீங்க எவ்வளவு ஊதியம் கேக்குறீங்களோ அதை நான் கொடுத்துடறேன்னாரு’’ அந்த நடிகரும் சரி நாளைக்குக் காலையில ஒங்க ஊருல இருக்கற குளத்தங்கரை அரசமரத்தடியில வந்து தங்கி இருக்கறேன். அப்ப அங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு வாங்க. அப்பப் பாருங்க என்னோட நடிப்பன்னு’’ சொன்னாரு.

அமைச்சருக்கு ரொம்ப சந்தோஷம். வேலை சுலபமா முடிஞ்சிருச்சின்னு வீட்டுக்குத் திரும்பி வந்தாரு. மறுநாளு அமைச்சர் சொன்னது மாதிரியே அந்த நடிகர் துறவி வேடம் போட்டுக்கிட்டு வந்து குளத்தரங்கரையில இருந்த அரசமரத்து அடியில தங்கி இருந்தாரு.

அமைச்சரும் அவரைப் பாக்குறதுக்கு அரசரை வந்து அழைச்சாரு. அமைச்சர் சொன்ன உடனேயே அரசரும் தன்னோட பரிவாரங்களோட ராணியையும் கூட்டிக்கிட்டு ஒவ்வொருத்தருக்கிட்டயும் பல தட்டுக்கள்ள பொன்னும் மணியும் நிறைச்சுக் கொண்டுக்கிட்டுப் போனாரு.

அரச மரத்தடி வந்தது. அங்க சிவச் சின்னங்களோட ‘‘ஓம் நமசிவாய! ஓம் நமசிவாயன்னு’’ சொல்லிக்கிட்டு இருந்தாரு. அவரப் பாத்த அமைச்சருக்கு மனசுக்குள்ளாற ஒரு சிரிப்பு, ‘அட பாக்க நிஜமான சாமியாரவே அந்த நடிகன் ஆயிட்டானேன்னு’’ நினைச்சிக்கிட்டு அந்தத் துறவியான நடிகனோட கால்ல விழுந்து, ‘‘சாமி என்னை ஆசிர்வாதம் செய்யுங்கன்னு’’ கும்புட்டு விழுந்தாரு.

அந்தத் துறவியும் ‘‘மகனே! நீ வாழ்க! நீ நினைத்தது எல்லாம் நிறைவேறும். எல்லாம் நன்மையாகவே முடியும்னு’’ வாழ்த்தினார்.

அமைச்சர் கும்புட்டது மாதிரியே அரசர், ராணி, அரசரோடு வந்த தளபதி, பரிவாரங்கள் அனைவரும் பொன்னையும் மணியையும் நிறைத்த தட்டுக்களை வைத்து வணங்கினார்கள். அவற்றையெல்லாம் பார்த்த துறவி, ‘‘மகனே! உனக்கு வெற்றி கிட்டட்டும். நாடு மேன்மையடையட்டும். நீ நினைத்தவாறு மக்களின் வாழ்க்கை உயர்வடையும். வாழ்த்துக்கள்ன்னு’’ சொன்னார்.

அரசர் அந்தத் துறவியப் பாத்து, ‘‘சுவாமி இந்த எளியவனின் காணிக்கையாக இந்தப் பொன்னையும் மணிகளையும் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்னு’’ பவ்வியமாக கைகட்டி வாய்பொத்திக் கேட்டுக் கொண்டார்.

அதைக் கவனித்த துறவி, ‘‘மகனே! இவையெல்லாம் துறவியாகிய எனக்கு எதற்கு? இவற்றையெல்லாம் நீயே எடுத்துக் கொள். எமக்கு இறைவனுடைய அருள் ஒன்றே போதும். இவை எமக்குத் தேவையில்லை. இவற்றால் எனக்கு என்ன பயன்? இவை உன்னிடம் இருப்பதே சரியானது. இவையும் இந்தக் கல்லும் எமக்கு ஒன்றேன்னு’’ சொல்லிச் சிரித்தார்.

அரசருக்கு ஒரே வியப்பு. அட இவ்வளவு செல்வத்தையும் வேணாம்னு சொல்லக் கூடிய ஒரு துறவிய இப்பத்தான் நாம பாக்குறோம். சரி அவர நம்ம அரண்மனைக்குக் கூட்டிக்கிட்டுப் போவோம் அப்ப என்ன செய்யிறாருன்னு பார்ப்போம்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு, ‘‘சுவாமி இனிமேல் தாங்கள் என்னுடன் அரண்மனையிலேயே இருந்து எனக்கு வழிகாட்டுதல் வேண்டும்னு’’ அவரை வணங்கித் தன்னோட வருமாறு அழைத்தார்.

அதைக் கண்ட அந்தத் துறவி, ‘‘மகனே எனக்கு இந்த உலகமே வீடு. உமது அரண்மனை யாம் வாழ்வதற்குப் பொருத்தமான இடம் அல்ல. அவை உம் போன்றவர்களால் வாழ்வதற்குரியவை. துறவியாகிய எனக்கு இறைவனது திருவடிகளே உறைவிடம். அதனால் யாம் அங்கு வரவிரும்பவில்லை. ஆறு அனைவருக்கும் பயன்படுமாறு இருக்க வேண்டுமே தவிர ஒருத்தருக்கு மட்டும் பயன்படுமாறு இருத்தல் கூடாது. அந்த ஆறு போன்றவனே துறவின்னு’’ சொல்லி மறுத்தார்.

அரசருக்கு வியப்புக்கு மேல் வியப்பு. சரி இந்தத் துறவி உண்மையான துறவிதான்னு முடிவு செஞ்சிக்கிட்டு எல்லோருடனும் மீண்டும் துறவியோட கால்ல விழுந்து கும்பிட்டுட்டு அரண்மனைக்குத் திரும்பி அமைச்சர் சொன்னத ஒத்துக்கிட்டாரு. அமைச்சரும் அரசருக்கிட்ட விடைபெற்றுக்கொண்டு தன்னோட வீட்டுக்குக் கிளம்பினாரு.

வீட்டுக்குக் கிளம்பினவரு அந்தத் துறவியப் பார்த்து அவருக்கு வேண்டியதைக் கொடுத்துருவோம்னு நெனச்சிக்கிட்டு, அந்தத் துறவி இருக்கற இடத்தைப் போய்ப் பார்த்தாரு.


அப்பவும் அந்தத் துறவி கண்கள மூடிக்கிட்டு, ‘‘ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!ன்னு’’ சொல்லிக்கிட்டு இருந்தாரு. அவருகிட்டப் போன அமைச்சர், ‘‘ஐயா நடிச்சது போதும். ரொம்ப அதிகமா நடிக்காதே. கண்ணத் தெறந்து பாருன்னு’’ சொன்னாரு. அப்பக் கண்ணத் தெறந்து பாத்த நடிகர். ‘‘மகனே உமக்கு என்ன வேண்டும். கேள்ன்னு’’ சொன்னார்.

அதைக் கேட்ட அமைச்சர், ‘‘ஐயா உமக்கு நடிப்பதற்காகக் கொடுக்கிற பணத்தை விட அதிகமாவே தர்றேன். இந்தா. பணத்தை வாங்கிக் கொண்டு போன்னு’’ சொன்னாரு.

அதைக் கேட்ட துறவியா இருந்த நடிகர், ‘‘அமைச்சர் அவர்களே! எனக்கு எந்தப் பணமும் வேண்டாம். நான் உண்மையிலேயே துறவியாக மாறிவிட்டேன். துறவியா நடித்ததற்கே இந்நாட்டை ஆளும் அரசர் உட்பட அனைவரும் எனது கால்களில் விழுந்து வணங்குகிறார்கள் என்றால் துறவியாகவே ஆகிவிட்டால் எவ்வளவு பெரிய உயர்வு கிடைக்கும் என்பதை எனக்கு நீங்கள் உணர்த்திவிட்டீர்கள். நன்றி இனிமேல் துறவியிலிருந்து இயல்பிற்கு என்னால் வரஇயலாது’’ என்று கூறிவிட்டார்.

அமைச்சருக்கு வியப்பிற்கு மேல் வியப்பு. துறவு வேடம் அணிந்த ஒருவனின் உள்ளம் உண்மையிலேயே துறவியாகவே மாறிவிடுமா? என்று நினைத்துக் கொண்டே தனது வீட்டைப் பார்க்க நடந்தார். எப்பவுமே உண்மைக்கு மதிப்பு உண்டுங்கறதுக்காக இந்தக்கதை இந்த வட்டாரத்துல வழக்கத்துல இருந்து வருகின்றது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1bu.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License