Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

77. கடவுளும் சிட்டுக்குருவியும்


உண்மையான அன்புக்கும் முயற்சிக்கும் நிச்சயம் கடவுள் உறுதுணையாக இருப்பார். அத்தகையவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அவர்கள் கேட்காவிட்டாலும் தானாக முன்வந்து கடவுள் அவர்களுக்கு உதவி செய்வார். இது குறித்த கதையொன்று புதுக்கோட்டை வட்டாரத்தில் வழக்கில் வழங்கி வருகின்றது.

அது ஒரு பெரிய காடு. பலவகையான மரங்கள் இருந்தன. அந்தக் காட்டில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அது காட்டில் பாதி இடத்தை நிறைத்துக் கொண்டு விழுதுகளுடன் பலவகையான மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் புகலிடம் தந்து செழிப்பாக இருந்தது. பல ஆண்டுகளா அந்த மரம் தன்னை அண்டி வந்த அத்தனை உயிர்களையும் அடைக்கலம் தந்து ஏற்றுக் கொண்டது.

அந்த ஆலமரத்தில் ஒரு சிட்டுக்குருவியோட குடும்பம் வசித்து வந்தது. அது தலைமுறை தலைமுறையா அந்த மரத்துலதான் வசித்து வந்தது. அதுக்கு அந்த மரத்தை விட்டா வேற எதுவும் தெரியாது. புயல், மழை. வெள்ளம் எதுவானாலும் சரி அந்த மரத்துலேயே அந்தச் சிட்டுக்குருவியின் குடும்பம் தங்கி இருந்துச்சு.

அந்தச் சிட்டுக்குருவியோட குடும்பம் அந்த மரத்தை ரொம்ப ரொம்ப நேசிச்சதுங்க. சுகமோ துக்கமோ அந்தக் குடும்பம் அந்த மரத்தோடயே பகிர்ந்துக்கிட்டதுங்க. காலையில அந்த மரத்துல இருக்கற கூட்டுல இருந்து பறந்து சென்று இரைதேடித் தின்றுவிட்டு பொழுது சாய இந்த மரத்தத் தேடி வந்து கூட்டுல அடைஞ்சிருங்க.

பொழுது போயிருச்சுன்னா அந்த மரத்துல பறவைகளின் மகிழ்ச்சியான சத்தத்தை மனசாறக் கேக்கலாம். எல்லா பறவைகளும் மரத்து மேல கூடுகட்டி வாழ்ந்ததுங்க. மரத்துக்குக் கீழ விலங்குகள் எல்லாம் இருந்துக்கிட்டதுங்க. இப்படியே சந்தோஷமா அதுகளோட வாழ்க்கை போயிக்கிட்டு இருந்தது.

அப்படிப் போயிக்கிட்டு இருந்த வாழ்க்கையில திடீர்னு புயல் வீசத் தொடங்குச்சு. மழை பெய்யவில்லை. இருந்தாலும் அங்கங்கே குளங் குட்டையில தண்ணி கொஞ்சம் இருந்தது. காட்டுல கிடைக்கிற இரைகளைத் தின்னுட்டு அந்தச் சிட்டுக்குருவியோட குடும்பம் ஆலமரத்துல வாழ்ந்துகிட்டு வந்ததுங்க.


அப்பப் பாத்து அந்தக் காட்டுல இருந்த மூங்கில்கள்ல திடீர்னு நெருப்புப் புடிச்சிருச்சு. காட்டுல இருந்த விலங்கு பறவை எல்லாம் வேற இடம் தேடிப் போனதுங்க. காட்டுத் தீ விறுவிறுன்னு பரவ ஆரம்பிச்சிருச்சு. ஆலமரத்துல கூடுகட்டி வாழ்ந்த பறவைங்களும் கீழ வாழ்ந்த விலங்குகளும் அந்த மரத்த விட்டுட்டு ஓடிடுச்சுங்க.

ஆனா அந்த சிட்டுக் குருவிக்கு மட்டும் அந்த ஆலமரத்த விட்டுட்டுப் போக மனசே இல்லை. எத்தனை காலம் நமக்கு எல்லாத்தையும் தந்த வீடான இந்த மரத்த ஆபத்துல விட்டுட்டு போகலாமா? நாம இந்த மரத்தையும் காட்டையும் எப்படியும் காப்பாத்தியாகணும். என்ன செய்யலாம்னு நெனச்சது.

ஒடனே தன்னோட குடும்பத்துல இருக்கற எல்லாக் குருவிங்கக்கிட்டயும், ‘‘இங்க பாருங்க நம்ம பலகாலமாக் காப்பாத்துன இந்த மரத்தையும் காட்டையும் ஆபத்துக்காலத்துல விட்டுட்டுப் போகக் கூடாது. இத எப்படியும் காப்பாத்தணும். நாம எல்லாரும் பறந்து போயி பக்கத்துல இருக்கற குளத்துல இருந்து தண்ணியக் கொண்டாந்து இந்த நெருப்புல ஊத்தி நெருப்ப அணைப்போம். வாங்க’’ அப்படீன்னு சொல்லிட்டு வேகவேகமாப் பறந்ததுங்க.

குளத்துல இருந்து தண்ணிய எடுத்துக்கிட்டு வந்து நெருப்புல ஊத்துச்சுங்க. இப்படியே ரெம்ப நேரமா முயற்சி செஞ்சிக்கிட்டே இருந்ததுங்க. இந்தக் குருவிங்களோட பாசத்தையும் அன்பையும் பாத்த கடவுளுக்கே ரெம்ப வருத்தமாப் போச்சு. இந்தக் குருவிகளுக்காகவாவது காட்டயும் மரத்தையும் அழியாமப் பாதுகாக்கணும்னு நெனச்சிக்கிட்டு கடுமையான மழை பெய்யக் கொண்டுவந்தாரு.

சும்மா இருந்த வானம் கருத்து இடி மின்னலோட நல்ல மழை பெய்யத் தொடங்கிடுச்சு. அதுவரையிலும் எரிஞ்சிக்கிட்டு இருந்த காட்டுத் தீ மழையினால அணைஞ்சிருச்சு. காடும் ஆலமரமும் நெருப்பில இருந்து தப்பிருச்சு. சிட்டுக்குருவிக எல்லாம் சந்தோஷப்பட்டதுங்க. மழைபெய்ய வச்ச இறைவனுக்கு நன்றியச் சொன்னதுங்க.


காட்டயும் மரத்தையும் விட்டுட்டுப் போன விலங்குக பறவைங்க எல்லாம் திரும்பவும் அந்தக் காட்டத்தேடி வந்ததுங்க. ஆலமரம் சிட்டுக்குருவிகளுக்கு நன்றியச் சொன்னது. மத்தவங்களுக்காக முயற்சி செய்யிறவங்களுக்குக் கடவுள் அவங்க கேக்காட்டியும்கூட உடனே வந்து உதவி செய்வாருங்கறதுக்கு இந்தக் கதைய இப்பவும் சொல்வாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1by.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License